Thursday, February 13, 2014

பாதையை புனரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

நுவரெலியா மாவட்டம் அக்கரபத்தனை நகரத்தில் இருந்து 15 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மணிக்பாலம் கால்நடை பண்ணைக்கு செல்லும் பிரதான பாதை பல வருடகாலமாக செப்பணிடப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுகின்றதால் இப்பிரதேச மக்கள் பல்வேறு சிரமங்களக்கு முகம் கொடுக்கின்றனர். 

இதேவேளை ஹோம்வூட் தோட்டம் மற்றும் போபத்தலாவ பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவர்களும் கர்ப்பிணி தாய்மார்களும் பல்வேறுபட்ட அசௌகரியங்களுக்கும் ஆளாகின்றனர். 

நடந்து முடிந்த மத்திய மாகாண சபை தேர்தலின் போது இப்பாதையை புனரமைப்பு செய்வதாக வாக்குறுதிகளை வழங்கியவர்கள் தேர்தலின் பின் இப்பிரதேசத்தை கண்டும்காணாமல் இருப்பதாக மக்கள் விசனம் தொவிக்கின்றனர். 

இப்பாதையை புனரமைத்து தருமாறு நுவரெலியா மாவட்ட அரசியல்வாதிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்த போதிலும் எவரும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இன்று (13.02.2014) மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டதில் ஈடுப்பட்டனர்.

No comments: