Wednesday, February 23, 2011

மலையக மக்கள் வர்க்க ரீதியில் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமே உரிமைகளை பெற முடியும்- ஆறுமுகன் தொண்டமான்


மலையக மக்கள் அரசியல் கட்சி பேதங்களையும் தனி மனித பேதங்களையும் ஒதுக்கிவிட்டு வர்க்க ரீதியில் ஒன்றுபட்டு செயற்பட்டால் மாத்திரமே அந்த பலத்தை முன்வைத்து மேலும் பல உரிமைகளையும், சலுகைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் . எனவே நாம் ஒரு பேரம் பேசும் சக்தியாக எம்மை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என இ.தொ.கா பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் உள்ளுராட்சிசபைத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் இ.தொ.கா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பேசும் போது தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் மாத்தளை மாவட்டத்தில் எல்கடுவ தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காண முடியாதுள்ளது. தோட்டத் தொழிலாளர்களிடம் காணப்படும் ஒற்றுமையின்மையே இதற்கு பிரதான காரணம். தொழிலாளர்கள் பல தொழிற்சங்கங்களில் அங்கம் வகிப்பதால் தோட்ட நிர்வாகங்கள் பிரச்சினைகளை தட்டிக் கழிக்கின்றன. எனவே தொழிலாளர்கள் எம்முடன் இணைந்து ஒரே கொடியின் கீழ் செயற்படுபவர்களாயின் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

No comments: