Thursday, November 19, 2009

கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக 40,000 கையெழுத்துக்கள்

மலையகத்தின் பிரதான தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக இதுவரை 40,000 தொழிலாளர்கள் கையொப்பம் இட்டுள்ளதாகவும், ஒப்பந்தத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஐக்கிய மக்கள் முன்னணி தலைவர் எஸ் சதாசிவம் ஐக்கிய மக்கள் முன்னணியினருடன் இணைந்து கொண்ட பின் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் முதற்கட்டமாக கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்ல நடவடிக்கைகள் எடுத்து வருவதாக குறிப்பிட்ட அவர் தொழிலாளர்களிடமிருந்து கையொப்பம் பெறும் பணி தொடரும் என்றார்.

No comments: