Tuesday, October 13, 2009

மலையக மக்களின் உயர்வு பற்றி தந்தையிடம் பேசுவேன் -கனிமொழி

மலையகப் பெருந்தோட்ட வாழ் மக்களின் வாழ்வாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் மேம்படுத்த மத்திய மாநில அரசுகளின் உதவிகளைப் பெற்றுத்தர முயற்சிகளை மேற்கொள்வதாக இந்திய நாடாளுமன்ற குழுத்தலைவர் தி.மு.க முன்னாள் அமைச்சர் ரி. ஆர். பாலு உறுதியளித்துள்ளார்.
மலையகப் பகுதிகளுக்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்த பின்னரே இவ்வாறு தெரிவித்தார். மேற்படி மலையகம் வாழ் தமிழ் மக்களின் நிலைமைகளைத் தமது தந்தையார் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகவும், அம் மக்களின் நிலைமைகளை எடுத்துக்கூறி அவர்களின் உயர்வுக்கு வழிவகுப்பதாகவும் முதல்வரின் புதல்வியும் எம்.பி யுமான கவிஞர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் ‘லயன்’ வரிசைக்குடியிருப்பு வாழ்க்கை முறையை நேரில் சென்று பார்வையிட்ட இந்திய நாடாளுமன்ற குழுவினர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட வேண்டுமென்றும், அதற்கு ஒத்துழைப்பதாகவும் கூறினர்.
அதேநேரம் மலையகத்தில் உயர் கல்விக் கலாசாலைகளை உருவாக்குவதற்கு உதவுவதாகவும் கல்வித்துறையை மேம்படுத்த தேவையான உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளனர்.

No comments: