Wednesday, October 14, 2009

சம்பள உயர்வுக்குப் பின்னரும் 390 ரூபா சம்பளம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு 405 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட போதிலும் பதுளை மாவட்டங்களில் பெரும்பாலான தோட்டப்பகுதிகளில் 390 ரூபாவையே சம்பளமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழிலாளர்கள் 75 வீதம் வேலைக்கு சென்றிருந்த போதிலும் நாளாந்த படியாக 30 ரூபா வழங்கப்படவில்லை.
மேலும் அநேகமான தோட்டங்களில் ஒத்துழையாமை போராட்டம் நடைபெற்றபோது வேலை செய்த தொழிலாளர்களுக்கு இரண்டு நாள் வேலை செய்தால் ஒரு நாள் சம்பளம் என்ற வீதத்தில் வழங்கப்பட்டுள்ளது. மேலதிகமாக கொழுந்து பறிப்புக்கு 30 ரூபா வழங்கப்படும் என கூட்டொப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட போதிலும் அவ்வாறு வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.
பதுளை மாவட்டத்தில் வரட்சியினால் தோட்ட நிர்வாகம் கோரும் 18 கிலோ கொழுந்து பறிக்க முடியாதுள்ளது. அத் தொழிலாளர்கள் எட்டு மணிநேரம் வேலை செய்த போதும் அரை நாள் சம்பளமே வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments: