Wednesday, September 16, 2009

ஒத்துழையாமை போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க மலையக தொழிற்சங்கங்கள் தீர்மானம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் வரை ஒத்துழையாமை போராட்டத்தை தொடர்ந்தும் நடத்துவதென்று கொழும்பில் ஒன்று கூடிய மலையக தொழிற்சங்கங்கள் மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், அகில இலங்கை தோட்டத்தொழிலாளர் சங்கம் ஆகியன இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரபா கணேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பி. திகாம்பரம், அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதென்றும் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கை தொடர்பில் ஏனைய தொழிற்சங்கங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தில் பங்குபற்றுமாறு கோருவது எனவும் இந்த சந்திப்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பெ. சந்திரசேகரன் தெரிவித்தார்

No comments: