Wednesday, May 6, 2009

நிம்மதியாகவும், சுயமாகவும் வாழும் வகையில் சம்பள அதிகரிக்கப்படும்

மலையக மக்கள் நிம்மதியாகவும் சுயமாகவும் வாழும் வகையில் அவர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படுமென அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். முதலாளிமார் சம்மேளனத்துடனான சம்பள உயர்வு குறித்து பேச்சுவார்த்தை கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டது. அதனது இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது என தெரிவித்தார்.
கடந்த காலங்களில் நாம் சம்பள உயர்வு குறித்து பேச்சுவார்த்தைகள் மேற்கொண்ட போது பலர் தனிப்பட்ட முறையில் பல போராட்டங்களை மேற்கொண்டனர். இதனால் ஒவ்வொருவருக்கும் தலா 3,000 ரூபா மாதாந்தம் நட்டம் ஏற்பட்டது. அதனைத் தவிர மெதுவாக வேலை செய்யும் போராட்டமும் நடைபெற்றுள்ளது. இதனால் அக்காலத்தில் எவ்வித நன்மையையும் தொழிலாளர்கள் பெறவில்லை. எனவே, தொழிலாளர்கள் அனைவரும் பொறுமையாக ஒற்றுமையாக இருந்து எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

No comments: