Wednesday, May 6, 2009

காலவரையறைக்குள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில், கூட்டு பேரத்தில் பங்குபற்றும் தரப்பினர் வீணான கால தாமதத்தை ஏற்படுத்துவதை விடுத்து சம்பள உயர்விற்கான பேச்சுவார்த்தையை ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் நடத்தி முடிக்க வேண்டுமென மத்தியமாகாண சபை உறுப்பினர் கனபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி ஒன்றரை மாதங்களைக் கடக்கும் நிலையில், பேச்சுவார்த்தையோடு சம்பந்தப்பட்ட தரப்பினர் கால தாமதத்தை ஏற்படுத்தி வருகின்றனர். சம்பள உயர்விற்கான ஒப்பந்தம் கால தாமதமானாலும் சம்பள உயர்வை ஏப்ரல் மாதத்திலிருந்து வழங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு இரண்டு, மூன்று மாதங்களுக்கான மிகுதித் தொகையை சேர்த்து வழங்குவதன்மூலம் கூடுதலான சம்பள உயர்வை பெற்றுவிட்டதாக தொழிலாளர்களை ஏமாற்றி சமாதானப்படுத்தியதை கடந்த கூட்டு ஒப்பந்தத்திலும் காணக்கூடியதாக இருந்தது. ஒரு நாள் சம்பளத்தை பல்வேறு கூறுகளாக பிரித்து வேலை நாள் விகிதாசார அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதை முற்றாக கைவிட வேண்டும். இது முற்று முழுதான மோசடி முறையாகும்.

No comments: