Thursday, May 14, 2009

தோட்டப்பகுதி பாடசாலைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்க அமெரிக்காவிலிருந்து ஆசிரியர்கள்

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மூலமாக சகல தோட்டப் பாடசாலைகளுக்கும் பௌதீக வளங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. இதேபோன்று தோட்டப் பாடசாலைகளில் ஆங்கிலக் கல்வியைக் கற்பிக்க அமெரிக்காவிலிருந்து ஆங்கில ஆசிரியர்கள் வரவழைக்கப்படவுள்ளதாக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் பிரத்தியேக செயலாளர் வீ.சாந்தகுமார் பன்விலை ஆத்தலை தமிழ் வித்தியாலயத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார். மேலும் மலையகத்தின் கல்வி நிலை தற்போது மாற்றம் பெற்று வருகிறது. மலையகத் தோட்ட தமிழ் மக்களைப் பொறுத்தவரை இன்று பொறியியல் துறை உட்பட பல்வேறு துறைகளில் படித்து முன்னேற்றம் அடைந்து வருகின்றனர் என்றார். இந்த நாட்டுக்கு அதிக அந்நிய செலாவணியைப் பெற்றுக்கொடுக்கின்ற தோட்டப்புற தமிழ் மக்கள் இனிமேல் பல துறைகளிலும் எழுச்சி பெற்று விளங்குவர்.

No comments: