Friday, May 1, 2009

தோட்ட உத்தியோகத்தர் வேலை நிறுத்தம் தொடர்கிறது

தோட்டங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் தமக்குரிய ஊக்குவிப்புக் கொடுப்பனவை வழங்குமாறுகோரி கடந்த 29 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் நுவரெலிய மாவட்டமெங்கும் தமது போராட்டத்தை விஸ்தரிக்கத் தீர்;மானித்துள்ளதாக இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நாத் அமரசிங்க தெரிவித்தார். இதுவரை, தோட்ட உத்தியோகத்தர்களின் கடமைகளைத் தொழிலாளர்;களே மேற்கொண்டு வருகின்றனர் உத்தியோகத்தர்;களின் பணிப்புறக்கணிப்பால், தொழிலாளர்களின் சம்பளத்தை உரிய வேளையில் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

No comments: