மேல் மாகாணத்தில் வேட்பாளர்களுக்கு விசேட அடையாள அட்டை
மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களுக்கும் விசேட அடையாள அட்டை வழங்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. சகல வேட் பாளர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய தாக அடையாள அட்டை வழங்கப்படும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.பி. சுமணசிறி தெரிவித்தார். தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது ஏற்படும் பிரச்சினைகளை தவிர்ப் பதற்காகவும் வேட்பாளர்களின் பாதுகாப்பு க்காகவும் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் கோரிக்கைப் படி தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment