Monday, September 29, 2008

சம்பள உயர்வுக்கு காத்திருக்க முடியாது கூட்டு ஒப்பந்தம் கிழித்தெறியப்பட வேண்டும் - அமைச்சர் பெ. சந்திரசேகரன்

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கூட்டு ஒப்பந்தத்தின்படி இன்னும் ஒரு வருடம் தமது சம்பள உயர்வுக்காக காத்திருக்க முடியாது. கூட்டு ஒப்பந்தம் என்ற இந்த நடைமுறை கிழித்தெறியப்பட வேண்டும் என அமைச்சர் பெ. சந்திரசேகரன் நானுஓயா பிரதேசத்தில் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் சம்பள உயர்வினை கம்பனிகளும், சில தொழிற்சங்கங்களும் தீர்மானிக்க வேண்டும். அரசாங்கம் எதிர்பார்ப்பதை நாம் ஏற்க முடியாது சம்பள உயர்வை பற்றி அரசாங்கத்துடன் பேசினால் கம்பனிகளுடன் பேசுங்கள் என்று தட்டிகழித்து விடுகின்றனர். அரசு தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக கம்பனிகளையும் தொழிற்சங்கங்களையும் சுட்டிக்காட்டி தப்பி விடவும் முடியாது.

No comments: