தொழிலாளர்களுக்குரிய கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை
ஜனவசம, பெருந்தோட்டத்துறை போன்ற அரச தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெற வேண்டிய கொடுப்பனவுகள் கிட்டாமை குறித்து நீதிமன்றம் சென்று சட்ட நடவடிக்கை மேற்கொள்ள போவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், சமூக துறை, இளைஞர் வலுவூட்டல் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
Saturday, October 18, 2008
தொழிலாளர் சம்பள பிரச்சினை மக்களின் பிரச்சினையை தீர்ப்பதாக அமைய வேண்டும்
தொழில் அமைச்சர் அத்தாவுட செனவிரத்ன அறிவித்துள்ள, தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு, நிபந்தனைகளுக்கு உட்படாத, இம்மக்களின் பிரச்சினைகளை முற்றாகத் தீர்க்கின்ற வகையில் அமையவேண்டுமென மலையக தொழிலாளர் முன்னணி தெரிவித்துள்ளது. மூன்று மாதங்களுக்குள் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க உள்ளதாக தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளமை மகிழ்ச்சியான விடயம். இம் முயற்சி கூட்டு ஒப்பந்தத்தின் சிக்கலான சரத்துக்களைப் போல நிபந்தனைகளுடன் அமைந்துவிடாமல் இருப்பதனை தொழில் அமைச்சர் உறுதி செய்தால் அப்பாவி தொழிலாளர்கள் முழுதாக பயனடைவார்கள். கூட்டு ஒப்பந்தம் என்ற மரணப்பொறி எமது எல்லா முயற்சிகளையுமே பயனற்றதாக்கிவிட்டது. தமது தினக்கூலியையும் இழந்த தொழிலாளர்கள் என்ன தான் ஒற்றுமையாக போராடினாலும் கூட இந்த கூட்டு ஒப்பந்தம் என்ற அகழியை தாண்ட அவர்களால் முடியாமலேயே போய் விடுகிறது. எனவே இம்முறையாவது தொழில் அமைச்சரின் நேரடித் தலையீட்டால் வாழ்க்கை செலவு புள்ளியோடு அமைந்த சம்பள உயர்வு தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் என்று நம்பிக்கை வீண் போகக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் அமைச்சர் அத்தாவுட செனவிரத்ன அறிவித்துள்ள, தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு, நிபந்தனைகளுக்கு உட்படாத, இம்மக்களின் பிரச்சினைகளை முற்றாகத் தீர்க்கின்ற வகையில் அமையவேண்டுமென மலையக தொழிலாளர் முன்னணி தெரிவித்துள்ளது. மூன்று மாதங்களுக்குள் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க உள்ளதாக தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளமை மகிழ்ச்சியான விடயம். இம் முயற்சி கூட்டு ஒப்பந்தத்தின் சிக்கலான சரத்துக்களைப் போல நிபந்தனைகளுடன் அமைந்துவிடாமல் இருப்பதனை தொழில் அமைச்சர் உறுதி செய்தால் அப்பாவி தொழிலாளர்கள் முழுதாக பயனடைவார்கள். கூட்டு ஒப்பந்தம் என்ற மரணப்பொறி எமது எல்லா முயற்சிகளையுமே பயனற்றதாக்கிவிட்டது. தமது தினக்கூலியையும் இழந்த தொழிலாளர்கள் என்ன தான் ஒற்றுமையாக போராடினாலும் கூட இந்த கூட்டு ஒப்பந்தம் என்ற அகழியை தாண்ட அவர்களால் முடியாமலேயே போய் விடுகிறது. எனவே இம்முறையாவது தொழில் அமைச்சரின் நேரடித் தலையீட்டால் வாழ்க்கை செலவு புள்ளியோடு அமைந்த சம்பள உயர்வு தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் என்று நம்பிக்கை வீண் போகக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, October 17, 2008
தமிழ் சாகித்திய விழாவில் கௌரவிக்கப்படுவோர்
மத்திய மாகாண தமிழ்க் கல்வி இந்து கலாசார அமைச்சின் ஏற்பாட்டில் 18, 19 ஆம் திகதிகளில் நுவரெலியாவில் இடம்பெறவுள்ள மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் பின்வருவோர் கௌரவிக்கப்படவுள்ளோர்
ஆன்மீகத்துறை ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஐயர், சிவசங்கர குருக்கள், கனகசபை இராஜபுவனேஸ்வரன், ரகுநாதன் ராஜேந்திரன்.
கல்வித்துறை முத்து கருப்பன் சோமசுந்தரம், செல்லையா ஜெயக்குமார், திருமதி சீவரட்ணம்.
சமூக சேவைத்துறை சிதம்பரம் பெருமாள் ரெட்டியார், எம்.எம்.சத்தியானந்தன், பழனியாண்டி மோகன் சுப்பிரமணியம், அ. .பாஸ்கரன்.
கலைத்துறை சந்தனம் பிரான்ஸிஸ் வசந்தன், எஸ்.செல்லத்துரை, எஸ்.ஆறுமுகராஜா, பிரதிஷ்குமார், எம்.எஸ்.ஸ்ரீதயாளன்.
ஊடகத்துறை அருணாசலம்பிள்ளை பொன்னம்பலம், சிவலிங்கம் சிவகுமார், சுப்பிரமணியம் ஜெப்ரி. ஜெயதர்ஷன், பெரியசாமி இராஜேந்திரன், இரா செல்வராஜா, தேவராஜன் வசந்தகுமார்.
விளையாட்டுத்துறை கருப்பையா திருநாவுக்கரசு, கே.ரெங்கநாதன்.
தொழிற்சங்கத்துறை நல்லன் இராமசாமி, இராமகிருஷ்ணன்.
அரச நிர்வாகத்துறை ச.ஜேசுதாசன்
இவர்களுடன் நுவரெலியா கோட்லோஜ் தமிழ் வித்தியாலய பாடசாலை அதிபர் வீ. பாலேந்திரா, கந்தப்பளை மெதடிஸ் கல்லூரி அதிபர் மகேஸ்வரன்,
கொழும்பிலிருந்து பொகவந்தலாவை வரை நடந்து சாதனை படைத்த தயாளன் (பொகவந்தலாவை சென். மேரிஸ் தமிழ் மகா வித்தியாலய மாணவன், பொகவந்தலாவை கொட்டியாகலை கீழ்ப் பிரிவு)
மத்திய மாகாண விளையாட்டுப் போட்டியில் மரதன் ஓட்டப் போட்டியில் முதலாம் இடம் பெற்ற மாணவி அல்பியன் தமிழ் வித்தியாலய மாணவி லக்னபிரியா (அக்கரப்பத்தனை அல்பியன் தோட்டம்)
மத்திய மாகாண தமிழ்க் கல்வி இந்து கலாசார அமைச்சின் ஏற்பாட்டில் 18, 19 ஆம் திகதிகளில் நுவரெலியாவில் இடம்பெறவுள்ள மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் பின்வருவோர் கௌரவிக்கப்படவுள்ளோர்
ஆன்மீகத்துறை ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஐயர், சிவசங்கர குருக்கள், கனகசபை இராஜபுவனேஸ்வரன், ரகுநாதன் ராஜேந்திரன்.
கல்வித்துறை முத்து கருப்பன் சோமசுந்தரம், செல்லையா ஜெயக்குமார், திருமதி சீவரட்ணம்.
சமூக சேவைத்துறை சிதம்பரம் பெருமாள் ரெட்டியார், எம்.எம்.சத்தியானந்தன், பழனியாண்டி மோகன் சுப்பிரமணியம், அ. .பாஸ்கரன்.
கலைத்துறை சந்தனம் பிரான்ஸிஸ் வசந்தன், எஸ்.செல்லத்துரை, எஸ்.ஆறுமுகராஜா, பிரதிஷ்குமார், எம்.எஸ்.ஸ்ரீதயாளன்.
ஊடகத்துறை அருணாசலம்பிள்ளை பொன்னம்பலம், சிவலிங்கம் சிவகுமார், சுப்பிரமணியம் ஜெப்ரி. ஜெயதர்ஷன், பெரியசாமி இராஜேந்திரன், இரா செல்வராஜா, தேவராஜன் வசந்தகுமார்.
விளையாட்டுத்துறை கருப்பையா திருநாவுக்கரசு, கே.ரெங்கநாதன்.
தொழிற்சங்கத்துறை நல்லன் இராமசாமி, இராமகிருஷ்ணன்.
அரச நிர்வாகத்துறை ச.ஜேசுதாசன்
இவர்களுடன் நுவரெலியா கோட்லோஜ் தமிழ் வித்தியாலய பாடசாலை அதிபர் வீ. பாலேந்திரா, கந்தப்பளை மெதடிஸ் கல்லூரி அதிபர் மகேஸ்வரன்,
கொழும்பிலிருந்து பொகவந்தலாவை வரை நடந்து சாதனை படைத்த தயாளன் (பொகவந்தலாவை சென். மேரிஸ் தமிழ் மகா வித்தியாலய மாணவன், பொகவந்தலாவை கொட்டியாகலை கீழ்ப் பிரிவு)
மத்திய மாகாண விளையாட்டுப் போட்டியில் மரதன் ஓட்டப் போட்டியில் முதலாம் இடம் பெற்ற மாணவி அல்பியன் தமிழ் வித்தியாலய மாணவி லக்னபிரியா (அக்கரப்பத்தனை அல்பியன் தோட்டம்)
Wednesday, October 8, 2008
சபை நடவடிக்கைகள் அனைத்தும் தமிழில் நடைமுறைபடுத்தவும் - எஸ். இராதாகிருஷ்ணன்
மத்திய மாகாண சபை அதன் அனைத்து கடிதப் போக்குவரத்துக்கள் உட்பட பல்வேறுபட்ட அறிக்கைகளையும் வெளியீடுகளையும் அரச கரும மொழியான தமிழில் நடைமுறைப்படுத்தா விட்டால் இச் சபையின் தமிழ், முஸ்லீம் உறுப்பினர்கள் அடுத்த சபைக் கூட்டத்தை பகிஷ்கரித்து போராட்டம் நடத்துவார்கள் என மத்திய மாகாணசபை இ.தொ.கா உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ். இராதாகிருஷ்ணன் கண்டி பல்லேகல – கம்உதாவ மத்திய மாகாணசபை மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் இந்த மாகாணசபை ஆரம்பித்து 19 வருடங்கள் ஆகின்றபோதும் இன்றும் தமிழ் மொழிக்குரிய உரிமைகளும், அந்தஸ்தும் வழங்கப்படவில்லை. நமது மாகாண சபையிலும், ஏனைய அரச அலுவலகங்களிலும் அனைத்து கருமங்களும் சிங்க மொழியிலேயே நடைபெறுகின்றன. சபையின் தலைவர் டபிள்யூ. எம். யுசமான தங்களது தாய் மொழியில் கடிதங்களையும், அறிக்கைகளையும் பெற்றுக்கொள்ள உரிமை உண்டு. அது அவர்களது உரிமை என தெரிவித்திருக்கிறார். இதேவேளை சபைத் தலைவரின் தனிச் சிங்களத்திலான காப்புறுதி தொடர்பான அறிக்கை உறுப்பினர்களின் கையெழுத்திற்காக சபை சேவகரால் இராதாகிருஷ்ணனிடம் சமர்ப்பித்தபோது சிங்களத்தில் உள்ளதால் அதில் தான் கையெழுத்திட முடியாது என்று மறுப்பினை தெரிவித்தார்.
குளவிகள் கொட்டியதில் பெண் தொழிலாளி மரணம்
இரத்தினபுரி காவத்தை ஓபாத்த இல-02 தோட்டத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளியான வெள்ளையம்மா(53) தனியார் தேயிலை தோட்டமொன்றுக்கு தொழிலுக்கு சென்ற வேளை அங்கு குளவிக்கூடு ஒன்று உடைந்ததில் அதிலிருந்த பெருமளவிலான குளவிகள் கொட்டியதால் அப் பெண் தொழிலாளி ஸ்தலத்திலேயே மரணமானதாக காவத்தை பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று முன்தினம் (07-10-2008) பிற்பகல் 1.00 மணியளவில் நிகழ்ந்துள்ளது. சுமார் 500க்கு மேற்பட்ட குளவிகள் கொட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மலையக கல்வி அபிவிருத்தியில் அமரர் தொண்டமான்பெருந்தோட்டப் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்கவும், சுவீடன் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அபிவிருத்தி செய்யவும், அதன் மூலம் கல்வி அபிவிருத்தி ஏற்படவும் காரணமாக இருந்த அமரர் எஸ். தொண்டமான் சேவை நினைவு கூரப்படும் என தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் எஸ். ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். மேலும் 1988ம் ஆண்டு மாகாணசபை நிர்வாக முறை அமுல்படுத்தப்பட்டபோது மத்திய மாகாணத்தில் கல்வி அமைச்சை கேட்டுப் பெற்றார். அதன் பயனாக எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்திய வம்சாவளி தமிழர் ஒருவர் மத்திய மாகாணத்தில் கல்வி அமைச்சராக பதவி வகிக்க முடிகிறது.
இந்திய வம்சாவளியினர் “இலங்கை தமிழர்கள்” என்ற வகையிலான சட்டமூலம்
இந்திய வம்சாவளியினர் என்ற மலையக மக்களின் நாமத்தை நீக்கி அவர்களை இலங்கை தமிழர்கள் என்று அழைக்கும் வகையிலான ஒரு சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவேன் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்தார். எதிர்காலத்தில் உள்ளுராட்சி தேர்தல் யாவும் தொகுதிவாரியாக நடத்தப்பட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மலையக மக்களும் முஸ்லீம் மக்களை போன்று பெரும்பான்மை கட்சிகளில் சேர்ந்து போட்டியிட்டு வெற்றி கொள்ள முடியும். தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சினை, சம்பள பிரச்சினை தொழிற் பிரச்சினை போன்றவற்றுக்கு தொகுதி எம்.பி க்கள் மூலம் ஜனாதிபதி வரை எடுத்துச் சென்று தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.
மத்திய மாகாண சபை அதன் அனைத்து கடிதப் போக்குவரத்துக்கள் உட்பட பல்வேறுபட்ட அறிக்கைகளையும் வெளியீடுகளையும் அரச கரும மொழியான தமிழில் நடைமுறைப்படுத்தா விட்டால் இச் சபையின் தமிழ், முஸ்லீம் உறுப்பினர்கள் அடுத்த சபைக் கூட்டத்தை பகிஷ்கரித்து போராட்டம் நடத்துவார்கள் என மத்திய மாகாணசபை இ.தொ.கா உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ். இராதாகிருஷ்ணன் கண்டி பல்லேகல – கம்உதாவ மத்திய மாகாணசபை மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் இந்த மாகாணசபை ஆரம்பித்து 19 வருடங்கள் ஆகின்றபோதும் இன்றும் தமிழ் மொழிக்குரிய உரிமைகளும், அந்தஸ்தும் வழங்கப்படவில்லை. நமது மாகாண சபையிலும், ஏனைய அரச அலுவலகங்களிலும் அனைத்து கருமங்களும் சிங்க மொழியிலேயே நடைபெறுகின்றன. சபையின் தலைவர் டபிள்யூ. எம். யுசமான தங்களது தாய் மொழியில் கடிதங்களையும், அறிக்கைகளையும் பெற்றுக்கொள்ள உரிமை உண்டு. அது அவர்களது உரிமை என தெரிவித்திருக்கிறார். இதேவேளை சபைத் தலைவரின் தனிச் சிங்களத்திலான காப்புறுதி தொடர்பான அறிக்கை உறுப்பினர்களின் கையெழுத்திற்காக சபை சேவகரால் இராதாகிருஷ்ணனிடம் சமர்ப்பித்தபோது சிங்களத்தில் உள்ளதால் அதில் தான் கையெழுத்திட முடியாது என்று மறுப்பினை தெரிவித்தார்.
குளவிகள் கொட்டியதில் பெண் தொழிலாளி மரணம்
இரத்தினபுரி காவத்தை ஓபாத்த இல-02 தோட்டத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளியான வெள்ளையம்மா(53) தனியார் தேயிலை தோட்டமொன்றுக்கு தொழிலுக்கு சென்ற வேளை அங்கு குளவிக்கூடு ஒன்று உடைந்ததில் அதிலிருந்த பெருமளவிலான குளவிகள் கொட்டியதால் அப் பெண் தொழிலாளி ஸ்தலத்திலேயே மரணமானதாக காவத்தை பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று முன்தினம் (07-10-2008) பிற்பகல் 1.00 மணியளவில் நிகழ்ந்துள்ளது. சுமார் 500க்கு மேற்பட்ட குளவிகள் கொட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மலையக கல்வி அபிவிருத்தியில் அமரர் தொண்டமான்பெருந்தோட்டப் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்கவும், சுவீடன் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அபிவிருத்தி செய்யவும், அதன் மூலம் கல்வி அபிவிருத்தி ஏற்படவும் காரணமாக இருந்த அமரர் எஸ். தொண்டமான் சேவை நினைவு கூரப்படும் என தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் எஸ். ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். மேலும் 1988ம் ஆண்டு மாகாணசபை நிர்வாக முறை அமுல்படுத்தப்பட்டபோது மத்திய மாகாணத்தில் கல்வி அமைச்சை கேட்டுப் பெற்றார். அதன் பயனாக எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்திய வம்சாவளி தமிழர் ஒருவர் மத்திய மாகாணத்தில் கல்வி அமைச்சராக பதவி வகிக்க முடிகிறது.
இந்திய வம்சாவளியினர் “இலங்கை தமிழர்கள்” என்ற வகையிலான சட்டமூலம்
இந்திய வம்சாவளியினர் என்ற மலையக மக்களின் நாமத்தை நீக்கி அவர்களை இலங்கை தமிழர்கள் என்று அழைக்கும் வகையிலான ஒரு சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவேன் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்தார். எதிர்காலத்தில் உள்ளுராட்சி தேர்தல் யாவும் தொகுதிவாரியாக நடத்தப்பட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மலையக மக்களும் முஸ்லீம் மக்களை போன்று பெரும்பான்மை கட்சிகளில் சேர்ந்து போட்டியிட்டு வெற்றி கொள்ள முடியும். தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சினை, சம்பள பிரச்சினை தொழிற் பிரச்சினை போன்றவற்றுக்கு தொகுதி எம்.பி க்கள் மூலம் ஜனாதிபதி வரை எடுத்துச் சென்று தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.
இனப்பிரச்சினையில் தமிழக கட்சிகளின் நிலைப்பாடு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். – சந்திரசேகரன் பா.உ
1983ம் ஆண்டு இலங்கையில் இனக்கலவரம் ஏற்பட்டபோது அனைத்து தமிழக கட்சிகளும், மக்களும் திரண்டெழுந்த வரலாற்று சம்பவத்துக்கு பின்பு தமிழகத்தில் ஆளும், எதிர்கட்சிகள் இலங்கை சிறுபான்மை தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க முனைந்திருக்கின்றமை இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என சமூக அபிவிருத்தி அமைச்சர் பெ. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகம் திரண்டெழுந்தால் இந்திய டில்லி அரசு தலைகுனிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அதுவே இலங்கை தமிழ் மக்களுக்கு தலை நிமிர்வை உருவாக்கும். இலங்கை வாழ் வடக்கு கிழக்கு தமிழர்களாக இருந்தாலும், மலையக தமிழ் மக்களாக இருந்தாலும் எவரும் சிங்கள மக்களை அடிமைப்படுத்த நினைத்தவர்கள் அல்ல. சிங்கள தலைமைகளோடு கைகோர்த்த கடந்த வரலாறே இது வரையிலும் பதியப்பட்டுள்ளது. தமிழர்களின் உயர்வுக்கு தேசிய தலைவர்கள் எப்போது தடைபோட ஆரம்பித்தார்களோ அப்போதிருந்தே முறுகல் நிலையும் போராட்டமும் தோன்ற ஆரம்பித்து விட்டன. இலங்கை பிரச்சினையில் மௌனம் காத்த தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி தற்போது உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்க்க கூடிய அளவில் சில முடிவுகளை எடுத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். அதேபோல் எதிர்கட்சி தலைவி ஜெயலலிதா இலங்கை தொடர்பில் இவ்வளவு வெளிப்படையாக தமது கருத்தை வெளிப்படுத்தியிருப்பது இலங்கை தமிழர்களுக்கு புத்தூக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரலாற்று மாற்றங்கள் இலங்கையின் இனப்பிரச்சினையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
மாணவனுக்கு பல்கலைகழக அனுமதி வழங்க கோரி அமைச்சர் செல்லச்சாமி கடிதம்
தேங்கிக் கிடந்த தபாலினால் பல்கலைகழக அனுமதியை இழந்த மாணவன் தொடர்பிலும் மேற்படி மாணவனுக்கு பல்கலைகழக அனுமதியை பெற்றுக் கொடுக்கும்படியும் உயர்கல்வி அமைச்சர் விஸ்வ வர்ணபால அவர்களுக்கு தபால், மற்றும் தொலை தொடர்பு பிரதியமைச்சர் அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார். பாதிக்கப்பட்ட அந்த மாணவனுக்கு உதவிகளை பெற்றுக் கொடுக்குமாறு இரத்தினபுரி இ.தொ.கா காரியாலயத்திற்கும் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1983ம் ஆண்டு இலங்கையில் இனக்கலவரம் ஏற்பட்டபோது அனைத்து தமிழக கட்சிகளும், மக்களும் திரண்டெழுந்த வரலாற்று சம்பவத்துக்கு பின்பு தமிழகத்தில் ஆளும், எதிர்கட்சிகள் இலங்கை சிறுபான்மை தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க முனைந்திருக்கின்றமை இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என சமூக அபிவிருத்தி அமைச்சர் பெ. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகம் திரண்டெழுந்தால் இந்திய டில்லி அரசு தலைகுனிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அதுவே இலங்கை தமிழ் மக்களுக்கு தலை நிமிர்வை உருவாக்கும். இலங்கை வாழ் வடக்கு கிழக்கு தமிழர்களாக இருந்தாலும், மலையக தமிழ் மக்களாக இருந்தாலும் எவரும் சிங்கள மக்களை அடிமைப்படுத்த நினைத்தவர்கள் அல்ல. சிங்கள தலைமைகளோடு கைகோர்த்த கடந்த வரலாறே இது வரையிலும் பதியப்பட்டுள்ளது. தமிழர்களின் உயர்வுக்கு தேசிய தலைவர்கள் எப்போது தடைபோட ஆரம்பித்தார்களோ அப்போதிருந்தே முறுகல் நிலையும் போராட்டமும் தோன்ற ஆரம்பித்து விட்டன. இலங்கை பிரச்சினையில் மௌனம் காத்த தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி தற்போது உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்க்க கூடிய அளவில் சில முடிவுகளை எடுத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். அதேபோல் எதிர்கட்சி தலைவி ஜெயலலிதா இலங்கை தொடர்பில் இவ்வளவு வெளிப்படையாக தமது கருத்தை வெளிப்படுத்தியிருப்பது இலங்கை தமிழர்களுக்கு புத்தூக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரலாற்று மாற்றங்கள் இலங்கையின் இனப்பிரச்சினையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
மாணவனுக்கு பல்கலைகழக அனுமதி வழங்க கோரி அமைச்சர் செல்லச்சாமி கடிதம்
தேங்கிக் கிடந்த தபாலினால் பல்கலைகழக அனுமதியை இழந்த மாணவன் தொடர்பிலும் மேற்படி மாணவனுக்கு பல்கலைகழக அனுமதியை பெற்றுக் கொடுக்கும்படியும் உயர்கல்வி அமைச்சர் விஸ்வ வர்ணபால அவர்களுக்கு தபால், மற்றும் தொலை தொடர்பு பிரதியமைச்சர் அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார். பாதிக்கப்பட்ட அந்த மாணவனுக்கு உதவிகளை பெற்றுக் கொடுக்குமாறு இரத்தினபுரி இ.தொ.கா காரியாலயத்திற்கும் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, October 7, 2008
தொழிலாளர் வர்க்கத்தினரிடையே இன ஒற்றுமை (1890-1930)
இலங்கை தொழிலாளர் இயக்க வரலாற்றில் இன, மத உணர்ச்சிகளுக்கு மேலாக வர்க்க உணர்வு மேலோங்கி இருந்த காலகட்டங்களும் உண்டு. 19-ம் நூற்றாண்டில் பெருந்தோட்டத்துறை முதலாளித்துவத்தின் எழுச்சியுடன் வளர்ச்சியடையத் தொடங்கியது. தொழிலாளர் வர்க்கத்தில் சிங்களவர், இலங்கைத் தமிழர், இந்திய தமிழர், மலையாளிகள், முஸ்லீம்கள், மலாயர், பறங்கியர் போன்ற பல்வேறு இனத்தினரும் காணப்பட்டனர். இவர்கள் பௌத்த, இஸ்லாமிய, கிறிஸ்தவ, இந்து மதத்தினராவர். இது தவிர சிங்களவர், தமிழர், மலையாளிகள், ஆகியோரிடையே சாதி வேறுபாடுகளும் நிலவின. எனினும், ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்ற உணர்வும் குறைந்த சம்பளம், நீண்ட வேலை நேரம், மோசமான வேலை நிலைமைகள் போன்ற பொதுவான ஒடுக்கு முறைகளுக்கு உட்படுபவர் என்ற உணர்வும் யாவரிடமும் நிலவின. மேலும், சுரண்டப்படும் தொழிலாளர் என்ற வகையில் தமது நிலைமைகளை முன்னேற்றுவதற்காகத் தம்மை ஒழுங்கமைத்துப் போராட வேண்டும் என்ற விழிப்புணர்வும் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நகர்ப்புற தொழிலாளர்களிடையே வளர்ந்திருந்தது. 1890 ம் ஆண்டில் நிகழ்ந்த முதலாவது தொழிலாளர் வேலை நிறுத்தத்திற்கும் 1930-ம் ஆண்டுகளின் பொருளாதார மந்தத்திற்கும் இடைப்பட்ட 40 ஆண்டுகளில் காணப்பட்ட வர்க்க உணர்வும் தொழிலாளரின் கூட்டு நடவடிக்கையும் குறிப்பிடக் கூடிய அம்சங்களாகும். 1880-ம் ஆண்டுகளிலிருந்து இக்காலகட்டம் வரை இனவெறி பிரச்சாரத்திற்கு இடம் தராது மத, சாதி, இன பேதங்களை மறந்து பொருளாதார கோரிக்கைகள் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தில் ஒன்றிணைந்து போராடினர் இதற்கும் மேலாக பிரித்தானிய முதலாளிகள், உத்தியோகத்தர் ஆகியோருக்கு எதிராக மத்திய தர வர்க்க தேசியவாதிகளின் எதிர்ப்புக்களுக்கு முன்னோடியாகவும் இலங்கைத் தொழிலாளர் வர்க்கத்தினரின் போராட்டம் தீவிர நடைமுறை கொண்டதாகவும் இருந்தது.
இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள் -குமாரி ஜெயவர்த்தனா-
ஒத்துழைப்பு இன்மையால் வீடமைப்புத் திட்டம் நிறைவேறுவதில் தாமதம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான குடியிருப்புக்களை அமைத்துக் கொடுக்கும் தேசிய வீடமைப்பு திட்;டத்தினரால் மேற்கொள்ளப்படும் வீடமைப்புத் திட்டத்தை நிறைவேற்றும் போது தோட்ட முகாமையாளர் ஒத்துழைப்பு இன்மையாலும் இது தொடர்பில் ஆலோசனைகளை வழங்குவதில் எவ்வித ஆர்வமும் காட்டுவதில்லை. இவ்வாறு தோட்ட அதிகாரிகளினதும், தோட்டத் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு இன்மையாலும் அத் திட்டத்தை நிறைவேற்றுவதில் பெரும் சிரமமும் தாமதமும் ஏற்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு திணைக்களத்தின் மாவட்ட முகாமையாளர் கே.வி. எல்லாறவ உலக குடியிருப்பு தினமான நேற்று தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் கண்டி மாவட்டத்தில் இந்த ஆண்டு 1242 வீடுகள் நிர்மாணிப்பதற்கான திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 705 வீடுகளுக்கான பணி ஆரம்பமாகின. சுமார் 289 வீடுகள் பூர்த்தியடையும் நிலையில் உள்ளபோதிலும் தோட்ட உட்கட்டமைப்பின் நிதி கிட்டுவதில் உள்ள தாமதத்தால் தடைபட்டுள்ளன.
இலங்கை தொழிலாளர் இயக்க வரலாற்றில் இன, மத உணர்ச்சிகளுக்கு மேலாக வர்க்க உணர்வு மேலோங்கி இருந்த காலகட்டங்களும் உண்டு. 19-ம் நூற்றாண்டில் பெருந்தோட்டத்துறை முதலாளித்துவத்தின் எழுச்சியுடன் வளர்ச்சியடையத் தொடங்கியது. தொழிலாளர் வர்க்கத்தில் சிங்களவர், இலங்கைத் தமிழர், இந்திய தமிழர், மலையாளிகள், முஸ்லீம்கள், மலாயர், பறங்கியர் போன்ற பல்வேறு இனத்தினரும் காணப்பட்டனர். இவர்கள் பௌத்த, இஸ்லாமிய, கிறிஸ்தவ, இந்து மதத்தினராவர். இது தவிர சிங்களவர், தமிழர், மலையாளிகள், ஆகியோரிடையே சாதி வேறுபாடுகளும் நிலவின. எனினும், ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்ற உணர்வும் குறைந்த சம்பளம், நீண்ட வேலை நேரம், மோசமான வேலை நிலைமைகள் போன்ற பொதுவான ஒடுக்கு முறைகளுக்கு உட்படுபவர் என்ற உணர்வும் யாவரிடமும் நிலவின. மேலும், சுரண்டப்படும் தொழிலாளர் என்ற வகையில் தமது நிலைமைகளை முன்னேற்றுவதற்காகத் தம்மை ஒழுங்கமைத்துப் போராட வேண்டும் என்ற விழிப்புணர்வும் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நகர்ப்புற தொழிலாளர்களிடையே வளர்ந்திருந்தது. 1890 ம் ஆண்டில் நிகழ்ந்த முதலாவது தொழிலாளர் வேலை நிறுத்தத்திற்கும் 1930-ம் ஆண்டுகளின் பொருளாதார மந்தத்திற்கும் இடைப்பட்ட 40 ஆண்டுகளில் காணப்பட்ட வர்க்க உணர்வும் தொழிலாளரின் கூட்டு நடவடிக்கையும் குறிப்பிடக் கூடிய அம்சங்களாகும். 1880-ம் ஆண்டுகளிலிருந்து இக்காலகட்டம் வரை இனவெறி பிரச்சாரத்திற்கு இடம் தராது மத, சாதி, இன பேதங்களை மறந்து பொருளாதார கோரிக்கைகள் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தில் ஒன்றிணைந்து போராடினர் இதற்கும் மேலாக பிரித்தானிய முதலாளிகள், உத்தியோகத்தர் ஆகியோருக்கு எதிராக மத்திய தர வர்க்க தேசியவாதிகளின் எதிர்ப்புக்களுக்கு முன்னோடியாகவும் இலங்கைத் தொழிலாளர் வர்க்கத்தினரின் போராட்டம் தீவிர நடைமுறை கொண்டதாகவும் இருந்தது.
இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள் -குமாரி ஜெயவர்த்தனா-
ஒத்துழைப்பு இன்மையால் வீடமைப்புத் திட்டம் நிறைவேறுவதில் தாமதம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான குடியிருப்புக்களை அமைத்துக் கொடுக்கும் தேசிய வீடமைப்பு திட்;டத்தினரால் மேற்கொள்ளப்படும் வீடமைப்புத் திட்டத்தை நிறைவேற்றும் போது தோட்ட முகாமையாளர் ஒத்துழைப்பு இன்மையாலும் இது தொடர்பில் ஆலோசனைகளை வழங்குவதில் எவ்வித ஆர்வமும் காட்டுவதில்லை. இவ்வாறு தோட்ட அதிகாரிகளினதும், தோட்டத் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு இன்மையாலும் அத் திட்டத்தை நிறைவேற்றுவதில் பெரும் சிரமமும் தாமதமும் ஏற்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு திணைக்களத்தின் மாவட்ட முகாமையாளர் கே.வி. எல்லாறவ உலக குடியிருப்பு தினமான நேற்று தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் கண்டி மாவட்டத்தில் இந்த ஆண்டு 1242 வீடுகள் நிர்மாணிப்பதற்கான திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 705 வீடுகளுக்கான பணி ஆரம்பமாகின. சுமார் 289 வீடுகள் பூர்த்தியடையும் நிலையில் உள்ளபோதிலும் தோட்ட உட்கட்டமைப்பின் நிதி கிட்டுவதில் உள்ள தாமதத்தால் தடைபட்டுள்ளன.
Thursday, October 2, 2008
அரசியல் ரீதியாக மலையக மக்களை பலவீனபடுத்தும் முயற்சிக்கு மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்
இந் நாட்டில் ஏற்பட்டுள்ள இன நெருக்கடி, யுத்தம், விலைவாசி உயர்வு என்பன தோட்டத் தொழிலாளர்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதித்துள்ளன. நாட்டின் துன்பகரமான வாழ்க்கையை வாழ்பவர்கள் தோட்டத் தொழிலாளர்களே சமூக அபிவிருத்தி சமுதாய அநீதி ஒழிப்பு அமைச்சர் சந்திரசேகரன் கொட்டக்கலை பொரஸ்கீப் தோட்டத்தில் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில் அரசியல் ரீதியாக மலையக மக்களை பலவீனப்படுத்த பல சூழ்ச்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இம் மக்களை தோல்வியுறச் செய்வதன் மூலம் அவர்கள் சார்ந்த கட்சிகளை பலமிழக்கச் செய்ய நினைக்கிறது. சதா காலமும் சம்பள பிரச்சினையைப் பற்றி பேசிக் கொண்டிருக்காமல் அதற்கப்பால் மலைய மக்களின் இருப்பை நிலைநாட்டுகவதற்கு அரசியல் ரீதியான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான திட்டங்களுக்கு சக்தியையும் தைரியத்தையும் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இந் நாட்டில் ஏற்பட்டுள்ள இன நெருக்கடி, யுத்தம், விலைவாசி உயர்வு என்பன தோட்டத் தொழிலாளர்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதித்துள்ளன. நாட்டின் துன்பகரமான வாழ்க்கையை வாழ்பவர்கள் தோட்டத் தொழிலாளர்களே சமூக அபிவிருத்தி சமுதாய அநீதி ஒழிப்பு அமைச்சர் சந்திரசேகரன் கொட்டக்கலை பொரஸ்கீப் தோட்டத்தில் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில் அரசியல் ரீதியாக மலையக மக்களை பலவீனப்படுத்த பல சூழ்ச்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இம் மக்களை தோல்வியுறச் செய்வதன் மூலம் அவர்கள் சார்ந்த கட்சிகளை பலமிழக்கச் செய்ய நினைக்கிறது. சதா காலமும் சம்பள பிரச்சினையைப் பற்றி பேசிக் கொண்டிருக்காமல் அதற்கப்பால் மலைய மக்களின் இருப்பை நிலைநாட்டுகவதற்கு அரசியல் ரீதியான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான திட்டங்களுக்கு சக்தியையும் தைரியத்தையும் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
Subscribe to:
Posts (Atom)