Wednesday, October 10, 2018

தொழிலாளர் சம்பள அதிகரிப்புக்கு அரசாங்கம் உத்தரவிட வேண்டும்

மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கு ஒரு பொறியாக மாறியிருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் எஸ்.அருள்சாமி தெரிவித்தார்.  
சென்ற முறை இந்தக் கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும்போது அரசாங்கத்தின் அமைச்சர்கள் தலையிட்டு இந்தச் சிக்கலைத் தோற்றுவித்திருப்பதாகவும் இதனால், கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல் மேலும் ஈராண்டுகளுக்குத் தொடர்வதற்கு தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கு வழிவகுக்கப்பட்டிருப்பதாகவும் அருள்சாமி தினகரனுக்குத் தெரிவித்தார்.
1992ஆம் ஆண்டிலிருந்து கைச்சாத்திடப்படும் இந்தக் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள அனைத்துச் சரத்துகளும் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பையும் தொழில் உத்தரவாதத்தையும் வழங்கும் வகையில் அமைந்துள்ளபோதிலும், கடந்த    2016ஆம் ஆண்டு ஒக்ேடாபரில் உடன்படிக்ைக கைச்சாத்திடப்பட்டபோது உடன்படிக்ைகயில் இரண்டாவது சரத்தாக, ஏதாவதொரு காரணங்களுக்காக உடன்படிக்ைக கைச்சாத்திடப்படுவது தாமதமாகும் பட்சத்தில், அதே உடன்படிக்ைக அமுலில் இருக்கும் என்ற விடயம் சேர்க்கப்பட்டுள்ளது. இது நிலுவைச் சம்பளம் பெறுவதையும் பேரம்பேசுதலையும் பலவீனப்படுத்தியிருப்பதாக அருள்சாமி சுட்டிக்காட்டினார்.  
ஆகவே, இம்முறை எந்தவிதமான அரசியல் அழுத்தத்திற்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட சங்கங்கள் அடிபணியாதென்றும் அவர் தெரிவித்தார். தொழிலாளர் நலனில் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து செயற்படுவதற்குக் காங்கிரஸ் தயாராக உள்ளதென்றும் அவர் கூறினார்.  
எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தையில் நியாயமான சம்பள அதிகரிப்பை வழங்க கம்பனிகள் மறுத்துவிட்டால், அதனைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு அரசாங்கத்திற்கே உண்டென்று தெரிவித்த அருள்சாமி, இதற்காகத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரது ஆதரவையும் பெற்றுக்ெகாண்டு அடுத்த கட்ட நடவடிக்ைகக்குத் தயாராகவுள்ளதாகவும் கூறினார்.  
வெள்ளிக்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தையின் பெறுபேற்றைப்பொறுத்து வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்த அவர், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின்போது, தொழிலாளர்களுக்கு 1200 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்குமாறு கம்பனிகளுக்கு அரசாங்கம் உத்தரவிட வேண்டுமெனக் கோரவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.  
தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பதாக தலவாக்கலையில் நடைபெற்ற கூட்டமொன்றில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்ததைச் சுட்டிக்காட்டிய அருள்சாமி, இம்முறை ஆயிரம் ரூபாய் அதிகரிப்பை கம்பனிகளாக முன்வந்து வழங்கினால், ஏற்றுக்ெகாண்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதாகவும் இல்லையேல் அரசாங்கத்தைக் கொண்டு 1200 ரூபாய் அதிகரிப்புக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறினார்.  
அவ்வாறு அரசாங்கம் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கம்பனிகளுக்கு உத்தரவிட்டாலும், கூட்டு ஒப்பந்தத்தில் சங்கங்கள் கைச்சாத்திட்டதன் பின்னரே அந்த அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும். ஆகவே, கூட்டு ஒப்பந்தம் இருப்பது தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பானது என்று அருள்சாமி மேலும் குறிப்பிட்டார்.  
தொழிலாளர்களுகுத் தற்போது நாளொன்றுக்கு அடிப்படைச் சம்பளமாக 500 ரூபாய், விலைக்கேற்ற கொடுப்பனவு 30 ரூபாய், உற்பத்தி ஊக்குவிப்பாக 140 ரூபாய், 75 வீதம் பணிக்குச் சென்றால் 60 ரூபாய் என மொத்தம் 730 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், 60 ரூபாயும் 140 ரூபாயும் வழங்காதிருப்பதற்காகத் தோட்ட நிர்வாகங்கள் நேர்மையற்ற விதத்தில் செயற்படுவதாகப் பரவலாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. குறித்த இலக்கு வேலையைப் பூர்த்தி செய்தால் வழங்கப்படும் ஊக்குவிப்புத் தொகையை வழங்காதிருப்பதை நிர்வாகங்கள் உறுதிசெய்துகொள்ளும் அதேவேளை, மாதம் ஒன்றுக்கு 75 வீதம் வேலை வழங்காமல் தவிர்த்து 60 ரூபாயையும் தவிர்த்துவிடுவதில் நிர்வாகங்கள் சாமர்த்தியமாகச் செயற்படுவதாகத் தொழிலாளர்கள் குறைகூறுகிறார்கள். ஆக, 630 ரூபாய் மாத்திரமே நாட்சம்பளமாகக் கிடைக்கிறது.  
எனவேதான், இந்தக் கொடுப்பனவுகளைத் தவிர்த்து மொத்தமாக ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளத்தைக் கோரியிருப்பதாகத் தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ்.இராமநாதன் சுட்டிக்காட்டினார். இந்தக் கோரக்ைகயை நிராகரித்த முதலாளிமார் சம்மேளனம் கடந்த (17/08/2018) பேச்சுவார்த்தையில் ஐம்பது ரூபாய் அதிகரிப்பு வழங்குவதாகவும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது மேலும் 25ரூபாய் வழங்குவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி- தினகரன்

No comments: