Thursday, June 28, 2018

கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக சர்வதேசதொழில் ஸ்தாபனம், மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடிவு

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நலன் சார்பில் செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் குறித்து, சர்வதேச தொழில் ஸ்தாபனம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றில் முறைப்பாடுசெய்ய உத்தேசித்துள்ளதாக, மக்கள் தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான இ.தம்பையா பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.   

அவர் இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில் 2016ம் ஆண்டு, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சார்பாக செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு என்பன தொழிலாளர்களுக்கு பாரிய அநீதியை இழைத்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

2016ம் ஆண்டு செய்துகொண்ட கூட்டு ஒப்பந்தம் எதிர்வரும் அக்டோபர் மாதம் 15ம் திகதியோடு முடிவடைகின்ற நிலையில் புதிதாக மேற்கொள்ளப்படுகின்ற கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது தொழிலாளர்களுக்கான நிலுவை தொகை, தொழிலாளர் நலன் சார்ந்த விடயங்களை பெற்றுக்கொடுக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளமை தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும் என்றார்.

எனவே 2003ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட அடிப்படைக் கூட்டு ஒப்பந்தத்திலும், உரிய திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவர் சட்டத்தரணி இ.தம்பையா வலியுறுத்தினார்.  

No comments: