Thursday, January 28, 2016

இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்

புதிய அர­சியல் யாப்பில் இந்­திய வம்­சா­வளி தமிழர் இருப்­பையும் உரி­மை­களையும் பாது­காப்­பது பற்­றிய ஆலோ­ச­னை­களை முன்­மொ­ழி­வ­தற்கு ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் நுவ­ரெ­லியா மாவட்ட அபி­வி­ருத்தி குழுத் தலை­வரும் இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் செய­லா­ள­ரு­மான ஆறு­முகம் தொண்­டமான் தலை­மையில் நிய­மிக்­கப்பட்ட நிபுணர் குழுவின் புதிய அர­சி­ய­ல­மைப்­பு பற்­றிய குழு நிலை விவா­தங்கள் இடம்­பெற்­றன.
இந்த நிகழ்வு கடந்த திங்­கட்­கி­ழமை வெள்­ள­வத்தை குளோபல் டவர் ஹோட்­டலில் இ.தொ.கா வின் தலைவர் முத்து சிவ­லிங்கம், நுவ­ரெ­லியா மாவட்ட அபி­வி­ருத்தி குழுத் தலை­வரும் இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் செய­லா­ள­ரு­மான ஆறு­முகம் தொண்­டமான், கோபியோ அமைப்பின் ஸ்தாபகத் தலைவர், மாகாண சபை உறுப்­பினர் சதா­சிவம், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ராதா­கி­ருஷ்ணன் உள்­ளிட்­டோரின் பங்­கேற்­புடன் இடம்­பெற்­றது.
இதன்­போது உரை­யாற்­றிய கோபியோ அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் பி.பி.தேவராஜ் இந்­திய வம்­சா­வளி தமிழ் மக்­களின் இருப்­பையும் உரி­மை­களைப் பாது­காப்­ப­தற்கு மாவட்ட சுயாட்சி சபை­யொன்று அவ­சியம் என தெரி­வித்தார். இந்­திய வம்­சா­வளி தமி­ழர்­க­ளுக்­கான பிரத்­தி­யேக பொறி­மு­றை­யொன்றை உரு­வாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
அவர் மேலும் தெரி­விக்­கையில், புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­திற்­கான தயார்­ப­டுத்­தல்­களை நல்­லாட்சி அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­கின்­றது. காலம்­கா­ல­மாக இந்­திய வம்­சா­வளி மக்கள் அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்க யோச­னை­களின் போது புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளனர் வர­லாற்றை நோக்கும் போது அது புரி­கி­றது.
சோல்­பரி அர­சி­ய­ல­மைப்பு முதல் 2 ஆம் குடி­ய­ரசு யாப்­பு­வரை இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ருக்­கான பிரத்­தி­யேக சொற்­பதம் கூட பாவிக்­கப்­ப­ட­வில்லை.பல்­லின மற்றும் பல் கலா­சார நாடு என அடை­யா­ளப்­ப­டுத்தும் இலங்கை தமிழ் மக்­களை மாத்­தி­ரமே சிறு­பான்­மை­யாக கருத்­திற்­கொண்­டுள்­ளது என்­பதே உண்மை. இந்­திய வம்­சா­வ­ளி­யினர் தமக்­கான தனி­யான அடை­யா­ளங்­க­ளையும் வரலாற்றுப் பாரம்­ப­ரி­யங்­க­ளையும் பேணி வந்­துள்­ளனர் சோல்­பரி யாப்பில் சிறு­பான்­மையின் காப்­பீ­டாக 29 (2) சரத்து அமைந்­துள்­ளது. இதனைத் தழுவி 1972 யாப்பில் அடிப்­படை உரி­மைகள் குறிப்­பி­டப்­பட்­டாலும் அவை இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ருக்கு எந்­த­ளவு பய­னு­டை­யது என்­பதை கடந்த கால அனு­பவங்­களில் உணர முடிந்­தது.
13 ஆம் திருத்தத்தில் மாகா­ண­சபை அதி­கா­ரங்கள் கொண்­டு­வரப்­பட்­டாலும் நுவ­ரெ­லி­யாவில் பெரும்­பான்­மை­யாக வாழும் இந்­திய வம்­சா­வளி தமி­ழர்­களின் கருத்துச் சுதந்­தி­ரத்தை பயன்­ப­டுத்த முடிந்­ததா என்­பதும் கேள்­விக்­கு­றியே. தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் மலை­யகத் தமி­ழர்கள் உள்­வாங்­கப்­பட்­டாலும் இந்­தியத் தமி­ழர்­களின் உரி­மைகள் பாது­காக்­கப்­ப­ட­வேண்டும் என்று பிரத்­தி­யே­க­மான வசனம் பாவிக்­கப்பட்டால் சாலச் சிறந்­தது.
தந்தை செல்­வா­வினால் வரை­ய­றுக்கப்­பட்ட வடக்­க­ு, கி­ழக்கு தமி­ழர்கள் மற்றும் சிங்­க­ள­வர்கள் என்ற இரு பிரி­வுகள் மாத்­திரம் உள்­ளதால் வடக்­கு, கி­ழக்­குக்கு வெளியில் வாழும் தமிழ் மக்­க­ளுக்கு எவ்­வாறு அதி­காரம் பகிர்ந்­த­ளிக்­கப்­படும் என்ற கேள்­விக்­குறி எழு­ந்­துள்­ளது. அதனால் இந்­திய வம்­சா­வ­ளி­யினர் என்ற தனி அடை­யாளம் இருக்­கு­மாயின் வர­வேற்­கத்­தக்­கது.
இதன்­படி 1996 ஆம் ஆண்டு தென்­னா­பி­ரிக்க புதிய அர­சி­யல­மைப்பு சிறு­பான்­மை­யி­ன­ருக்­கான மக்­களின் நல­னுக்­காக வரை­யப்­பட்ட முதன்­மை­யான யாப்­பா­கின்­றது. குறித்த யாப்பில் சிறு­பான்­மை­யி­ன­ருக்­கான சுதந்­திரம் அர­சியல் பிர­தி­நி­தித்­துவம் அர­சியல் உரி­மைகள் பாது­காக்கப்­ப­டு­வ­தற்­கென விட­யங்கள் உள்­ளீர்க்­கப்­பட்­டுள்­ளன.
தென்­னா­பி­ரிக்க யாப்பின் மாதி­ரியை உள்­வா­ங­்கி இலங்­கையின் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்­பதே எமது கோரிக்­கை­யாகும் மேலும் அந்த அர­சியல் யாப்பில் உள்ள அடிப்­படை உரிமை பற்­றிய விட­யங்­களும் அவ­சியம் உள்­வாங்­கப்­பட வேண்டும். அதேபோல் கணி­ச­மா­ன அளவு வாழும் இந்­திய வம்­சா­வளி தமிழ் மக்­களின் எமக்கு நியாயம் தரும் வகை­யி­லான தேர்தல் முறை­மை­யொன்­றினை உரு­வாக்­கப்­பட வேண்டும்.
வட­ப­கு­தியை கருத்­திற்­கொண்டு மாத்­திரம் முன்­னெ­டுக்­கப்­படும் அதி­கா­ரப்­ப­கிர்வு இனி­வரும் காலங்­களில் இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ரையும் கருத்திற் கொண்­ட­தாக அமைய வேண்டும்.
இந்­திய வம்­சா­வளி­யி­னரின் தனிப்­பட்ட கலா­சாரப் பின்­ன­ணியும் பாது­காக்­கப்­படும் வகையில் அரசியலமைப்பு வரையப்பட வேண்டும் என்றார்.

No comments: