Saturday, October 22, 2016

தீபாவளி முற்பணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை மேற்பிரிவு,கிழ்பிரிவு மக்கள் இன்றைய தினம் தொழிலுக்கு செல்லாது தீபாவளி பண்டிகை முற்பணத்தினை வழங்குமாறு கோரி ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்

தீபாவளி பண்டிகைக்கு வழங்கபட வேண்டிய 10,000 ரூபா இன்று வழங்குவதாக கூறிய வாக்குறுதி அளித்த தோட்ட நிர்வாகம் இன்று வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்தமையினாலேயே ஆர்பாட்டம் முன்னெடுக்கபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகை முற்பணத்தினை உடனடியாக வழங்கபட வேண்டுமெனவும் மலையக அரசியல்வாதிகள் இவ் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்பாட்டகாரர்கள் தெறிவித்தனர்.

இதேவேளை இந்த ஆர்பாட்டம் குறித்து தோட்ட முகாமையாளரிடம் கேட்டபோது எதிர்வரும் 25ம் திகதி வழங்கபடுமென உறுதியளித்தார்.

No comments: