Sunday, June 21, 2015

வீடமைப்புக்கான காணி வழங்கும் விடயத்தில் சமூகப்பொறுப்பு அவசியம்


புதிய அரசாங்கத்தின் 100 நான் வேலைத்திட்டத்தின் கீழ் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வீடமைப்புக்காக வழங்கும் 07 பேர்ச் காணி வழங்கும் திட்டத்தில் சகலரும் சமூகப்பொறுப்புடன் செயற்படுவது அவசியம் எனவும் தொழிற்சங்க அரசியல் பேதமின்றி இத்திட்டம் முன்னெடுக்கும்பட்சத்தில் இரண்டு இலட்சம் தனி வீடுகள் மலையக பகுதிகளில் அமைக்கப்படும் சாத்தியம் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் லபுக்கலை தோட்டப்பாடசாலைக்கு குடிநீர் வழங்கும் திட்டத்துக்கான உபகரணங்கள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். 

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் கடந்த 200 ஆண்டுகளாக அதிகார வர்க்கத்தினாலும், இனவாதிகளாலும் சின்னாப்பின்னப்படுத்தப்பட்ட தேசிய உழைப்பாளிகளான தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு அங்குலம் காணி சொந்தமாகக் கிடையாது. இந்த நாட்டை செல்வம் கொழிக்கும் பூமியாக மாற்றியவர்கள் இந்த இந்திய வம்சாவளி மக்கள் என்பதை மறுக்க முடியாது 
கடந்த காலத்தில் அமரர் அமைச்சர் சந்திரசேகரன் நிர்மாணித்து வழங்கிய 23,000 வீடுகளுக்கு உறுதிப்பத்திரத்தை வழங்கவில்லை. ஆனால் இத்தனை வருட காலமாக அமைச்சர்களாக இருந்தவர்களால் ஏன் செய்ய முடியாது போனது என்று கேள்வி எழுப்பினார். 

No comments: