Saturday, February 15, 2014

மலையகத்தில் இந்திய வீடமைப்புத் திட்டம்

மலையக மக்களுக்கு இந்தி அரசினால் வழங்கப்படும் வீட்டுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன் பொதுச்செயலாளரும், கால்நடை மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கெட்டம்பே விலங்கள் உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது இந்திய வீட்டுத்திட்டம் பற்றி கலந்துரையாடப்பட்டது. 

இந்திய வீட்டுத்திட்டம் கிராமவாரியாக அனைவருக்கும் வழங்கப்படும் எனவும், மேலும் அங்கு பாடசாலை, கோவில், தேவாலயங்கள், பள்ளிவாசல் போன்ற சகல வசதிகளும் தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பிரஜாசக்தி, நவசக்தி ஆகிய செயற்திட்டத்தினூடாக இளைஞர் யுவதிகளுக்கு சுயதொழில் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் உயர் அதிகாரிகள் தோட்ட முகாமையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

No comments: