Monday, April 11, 2011

புதிய கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளரின் அடிப்படைச் சம்பளத்தை 500 ரூபாவாக உயர்த்தவும்


புதிதாக செய்து கொள்ளப்படவுள்ள கூட்டு ஒப்பந்தத்தில் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 500 ரூபாவாக உயர்த்துவது உட்பட பல கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்று தமது தொழிற்சங்கத்தால் அண்மையில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்
அவற்றை சாதகமாக பரிசீலிப்பதாக ஜனாதிபதியின் தொழில் உறவுகள் செயலாளர் ஹேமசிறி ஜயலத் கடிதம் மூலம் தமக்கு அறிவித்திருப்பதாகவும் விவசாய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்தற்போது தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 285 ரூபாவும் மாதத்தில் 75 சதவீதத்திற்கு அதிகமாக வேலை செய்தால் மேலதிகமாக வழங்கப்படும் 90 ரூபா மற்றும் 16 கிலோவுக்கு அதிகமாக பறிக்கப்படும் கொழுந்துக்காக வழங்கப்படும் 30 ரூபா என்பன போதுமானவையாக இல்லை.அத்துடன் 405 ரூபா சம்பளத்தை பெரும்பாலான தொழிலாளர்கள் முழுமையாக பெறுவதில்லை.தற்போது ஊ.சே.நி.,ஊ.ந.நி என்பன 285 ரூபா சம்பளத்திற்கே கணிக்கப்படுகின்றது.

அத்துடன் தொழிலாளர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மானிய முறையில் பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.சம்பள நிர்ணய சபையால் நிறுத்தப்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும்.அவர்களின் அடிப்படைச் சம்பளம் 500 ரூபாவாக நிர்ணயிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை எமது சங்கம் முன்வைத்துள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதியின் தொழிற்சங்க தொழிலுறவுகள் செயலாளர் ஊடாக தோட்டக் கைத்தொழில் அமைச்சருக்கும் ஜனாதிபதியின் செயலாளருக்கும் தொழிலமைச்சருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: