Wednesday, March 2, 2011

தோட்டப்பகுதியில் குடியிருப்புக்களும், முச்சக்கர வண்டிகளும் தீ வைப்பு மக்களிடையே பதற்றம்


நிவித்திகலை கிரிபத்கலை தோட்டத்தில், கடந்த 27-02-2011 நள்ளிரவு இரு தோட்டக் குடியிருப்புக்களும் இரு முச்சக்கர வண்டிகளும் இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்டன. இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் மக்களிடையே பெரும் பதற்றம் நிலவியதைத் தொடர்ந்து இங்கு பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இப்பகுதியில் இடம் பெற்ற விருந்துபசாரத்துக்கு வருகை தந்த வேறு தோட்ட இளைஞர்களுக்கும், இப்பகுதி பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலின் எதிரொலியே இந்த முச்சக்கர வண்டி தீக்கிரையாக்கப்பட்டதாக தெரிவிக்கும் பொதுமக்கள் இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம் பெறாமல் இருக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.

இச்சம்பவம் குறித்து பிரதி அமைச்சர்களான முத்து சிவலிங்கம், பிரேமலால் ஜயசேகர ஆகியோர் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதுடன் இச் சம்பவத்தின் சூத்திரதாரியை உடனடியாக கைது செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments: