Tuesday, March 1, 2011

உள்ளுராட்சி தேர்தலில் பெண்களின் பங்களிப்பு அவசியம்


உள்ளுராட்சி தேர்தலில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக இருக்க வேண்டும் 2006ம் ஆண்டிற்குப்பின் நடைபெறும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பெண்கள் ஒரு சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் மகளிருக்கான வாய்ப்பை நாம் இழக்கக் கூடாது. 30 சதவீத பெண்கள் அதிகாரத்தில் பங்குகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு கடந்த 22ம் திகதி அட்டன் டினாய் ஹோட்டலில் நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சம்பந்தமான கலந்துரையாடலில் தலைமை தாங்கி பேசிய கண்டி சமூக அபிவிருத்தி நிறுவன மகளிர் பிரிவு தலைவி செல்வி யோகேஸ்வரி குறிப்பிட்டார்.

கட்சி சார்பற்ற முறையில் மகளிர் போட்டியிடுவதை நாம் ஆதரிக்கின்றோம். ஏனென்றால் ஆளும் ஆட்சி அதிகாரத்தில் மலையக பெண்களின் பங்களிப்பு அவசியமானதும், அவசரமானதுமாகும் என்று செல்வி யோகேஸ்வரி குறிப்பிட்டார்.

No comments: