Monday, February 28, 2011

மரக்கறி உற்பத்தியாலர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு


மலையகத்தில் மரக்கறி உற்பத்தியாளர்களும் வர்த்தகர்களும் மரக்கறி வகைகளை சாக்குகளில் அடைத்து அனுப்புவது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஷ்ணன் தலைமையில் நுவரெலியா, கந்தப்பளை, வெலிமடை பகுதி விவசாயிகள் வர்த்தகர்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்

மரக்கறி வகைகளை உற்பத்தி செய்யும் தோட்டங்களில் இருந்து அதிக தூரத்தில் உள்ள பிரதான வீதிக்கு கொண்டுவரும் போது பிளாஸ்டிக் கூடைகளில் கொண்டு வருவது சிரமமாக இருப்பதாகவும் அதனால் சாக்குகளை பயன்படுத்த அனுமதிக்குமாறும் அமைச்சரிடம் விடுதத கோரிக்கையை அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

வெளிமாவட்டங்களுக்கும் மரக்கறி வகைகளை அனுப்பும்போது பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்துவதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.இன்னும் ஆறு மாதங்களில் அதனை செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சாக்குகளில் மரக்கறிகளை அனுப்பும்போது அவை பழுதடைவதால் பிளாஸ்டிக் கூடைகளில் அவற்றை அனுப்பவேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.

சாக்குகளில் மரக்கறிகளை உற்பத்தி செய்யும் இடத்தில் இருந்து பிரதான பாதைக்கு கொண்டுவர சாக்குகளை பயன்படுத்த பொலிஸார் தடுப்பது குறித்தும் அமைச்சரின் கவனத்துக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

No comments: