Saturday, May 16, 2009

சம்பளப் பிரச்சினை இழுபறிநிலையானால் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுக்கெதிராக செயற்படும் நிலை ஏற்படும் -சுரேஷ் வடிவேல்

தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரம் தொழிற்சங்க கூட்டமைப்பு- முதலாளிமார் சம்மேளனம் என்ற தன்னிச்சையான முடிவாலுதட செயற்பாட்டினாலும் முழுமையான இணக்கப்பாடு காணப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகிறது.தொழிலாளர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. கூட்டு ஒப்பந்தம் முடிவுற்று இரண்டு மாதங்களாகின்றன. சம்பள அதிகரிப்பு குறித்து எந்தவொரு இணக்கப்பாடும் காணப்படவில்லை.தொழிற்சங்க கூட்டமைப்புக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறுமுன்னர் அதன் விபரங்களை தொழிற்சங்கங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் தமிழ் மொழியில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். கூட்டு ஒப்பந்தத்தில் கைழுத்திட்டுபவர்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாவதில்லை.அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் தொழிலாளர்களே.

No comments: