Tuesday, August 11, 2009

ஊவா மாகாணசபைத் தேர்தலில 30 வீதமானோர் வாக்களிக்கவில்லை.

இம் முறை இடம்பெற்ற ஊவா மாகாணசபைத் தேர்தலில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானோர்(30 வீதம்) வாக்களிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் 8,75,456 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த போதும் 6,13,133 பேரே வாக்களித்துள்ளனர். கூடுதலாக பதுளை மாவட்டத்திலேயே 1,68,199 பேர் வாக்களிக்கவில்லை. இதில் பெரும்பாலானோருக்கு அடையாள அட்டை இல்லாத தோட்டத் தொழிலாளர்களே அடங்குகின்றனர்.

No comments: