Friday, June 26, 2009

ஆவணங்களை பெற்றுகொள்ள மத்திய மாகாணசபையின் பங்களிப்பு வேண்டும்

பெருந்தோட்டத்துறை மக்களின் அத்தியாவசிய ஆவணங்களைப் பெற்றுக்கொடுப்பதில் மத்திய மாகாணசபை முழு பங்களிப்பை வழங்க வேண்டுமென மத்திய மாகாணசபை உறுப்பினர் சதாசிவம் மத்திய மாகாணசபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இம் மக்களுக்கு பிறப்புச்சான்றிதழ், அடையாள அட்டை, வாக்களார் இடாப்பில் பதிவு தொடர்பான பிரேரணையின் போது இதனை தெரிவித்தார். பெருந்தோட்டப் பகுதியில் தேசிய அடையாள அட்டை இல்லாமைக்கு பிறப்புச்சான்றிதழ் இல்லாமையே. இலங்கை பிரஜை என்றவகையில் இந்த அத்தியாவசிய ஆவணங்கள் கட்டாயமாகும். இம் மக்கள் இவ் ஆவணங்களை பெற்றுக் கொள்வதில் பல்வேறு தடைகளை எதிர்நோக்குகின்றனர். இவற்றை பெற்றுக் கொள்வதற்கு இலகுவான நடைமுறையொன்றை அரசு அறிமுகப்படுத்த அரசு முன் வர வேண்டும் என்றார்.

No comments: