Thursday, June 25, 2009

தொழிலாளர்களிடம் பண மோசடி செய்யும் கும்பல்

களுத்துறை, இங்கிரிய, ஹொரண, புளத்சிங்கள, இரத்தினபுரி, காவத்தை, இறக்குவானை பகுதியில் தோட்டத் தொழிலாளர்களிடம் அவர்களுக்கு காணி, காணிக்கான உறுதி பெற்றுக்கொடுத்தல், ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம், கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை, வாகனச் சாரதிப் பத்திரம், வேலைவாய்ப்பு என்பவற்றைப் பெற்றுத் தருவதாகக் கூறி அப்பாவித் தோட்டத் தொழிலாளர்களிடம் பெருமளவு பணத்தை மோசடி செய்துவருவதாக தெரிவிக்கின்றனர். இதில் தொழிற்சங்கவாதிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அண்மையில் இறக்குவானை பகுதியில் பிரபல தொழிற்சங்கத்தைச் சேர்ந்த மாவட்டப் பிரதிநிதியொருவர் தொழிலாளரிடம் இவ்வாறான கருமங்களை மிக எளிதாகவும் விரைவாகவும் செய்து தருவதாகக் கூறிப் பணத்தை வாங்கி தலை மறைவாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மற்றொரு ஆசாமி தோட்டத் தொழிலாளி ஒருவரின் ஊழியர் சேமலாப நிதியை விரைவில் பெற்றுக் கொடுத்துவிட்டு அவரிடமிருந்து 20.000 ரூபாவை சன்மானமாகப் பெற்றுள்ளார். இவ்வாறானவர்கள் குறித்து தோட்டப்புற மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments: