Tuesday, May 19, 2009

பரீட்சை பெறுபேறுகளை அதிகரிக்க நடவடிக்கை

மத்திய மாகாணத் தமிழ் பாடசாலை மாணவர்கள் க.பொ.த. சா.த மற்றும் உ.த பரீட்சை யில் பெறுபேறுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் உரிய கவனம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக மத்திய மாகாணத் தமிழ் கல்வியமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் பூண்டுலோயா சீன் தமிழ்மகா வித்தியாலயத்திற்கு தேச நிர்மாண தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் முத்து சிவலிங்கத்தின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் தெரிவித்தார். மேலும் மத்திய மாகாணத்தில் நுவரெலியா, கண்டி, மாத்தளை மாவட்டங்களிலுள்ள சாதாரணதரம் மற்றும் உயர்தரம் வகுப்புகள் கொண்ட பாடசாலைகளுக்குப் போதுமான வளங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறானதொரு நிலையில் இந்த வகுப்புகளின் கல்வி கற்கின்ற மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளைத் மேற்கொள்ளுமாறு கல்வி அதிகாரிகளுக்கும் பாடசாலை அதிபர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். சா.த இல் கல்வி கற்கின்ற மாணவர்கள் பரீட்சையில் சித்தி பெறும் தொகை அதிகரிக்கப்படும் போதுதான் உயர்தரம் கற்கின்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதனைத்தொடர்ந்து பல்கலைக்கழகங்களுக்குச் செல்கின்ற மாணவர்களின் தொகையில் அதிகரிப்பு ஏற்படும் என்றார்

No comments: