Tuesday, September 30, 2008

பல மில்லியன்கள் இலாபமாக தோட்ட முகாமைத்துவம் பெறுகிறது. தொழிலாளர்களுக்கு ஐந்து சத வீதமே இலாபம் பகிரப்படுகிறது.

பெருந்தோட்டத்துறையில் பல மில்லியன் தொகையில் இலாபம் கிடைக்கும் போது மொத்த இலாபத்தில் ஐந்து சத வீதத்தினையே தொழிலாளர்களுக்கு இலாபமாக பகிர்ந்தளிக்கும் தோட்ட முகாமைத்துவத்தின் செயற்பாடானது அப்பட்டமான மோசடியாகும் என உவா மாமகாண சபை உறுப்பினர் அரவிந்குமார் தெரிவித்தார். தோட்ட முகாமைத்துவங்களால் வெளியிடப்படும் வருடாந்த நிதி அறி;க்கையை பயன்படுத்தியும் ஊடக செய்திகளை பயன்படுத்தியும் வங்கிகள் மூலம் பெருந்தொகை பணத்தை கடனாக பெற்று தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். மேலும் பங்குச் சந்தையிலும் பெருந் தோட்டங்களின் நிலை மேலோங்கியுள்ளது மூலம் முகாமையாளர்கள் பெரும் நன்மையை பெறுகின்றனர். இந் நாட்டில் ஆகக் கூடிய வேலையை செய்து கடினமாக உழைத்து அதி குறைந்த சம்பளத்தை பெற்று கொண்டிருப்பவர்கள் தோட்டத் தொழிலாளர்களே. பெரும் அந்நிய செலாவணியை பெற்றுக் கொடுப்பவர்களும் இவர்கடேள. எனவே தொழிலாளர்கள் தகுந்த பாடம் அவர்களுக்கு புகட்ட வேண்டும் என்றார்.

No comments: