Monday, September 15, 2008

மின்சார ஒழுக்கினால் தொடரும் அகதி வாழ்வு

தொழிலாளர்களின் குடியிருப்பு லயன்களில் இணைக்கப்பட்டுள்ள மின்சார ஒழுக்கில் லயன்கள் எரிவதும் அங்கு குடியிருக்கும் மக்கள் அகதிகளாகுவதும் தொடர் நிகழ்வாகிவிட்டது. இவ்வாறு பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்களில் உடைமைகள், ஆவணங்கள், தாங்கள் சேர்த்து வைத்துள்ளவைகள் அனைத்தையும் இழந்துள்ளனர். இந்த தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குறிப்பாக
பத்தனை மவுன்ட்வேர்ணன் மேற்பிரிவில் - 20 குடும்பங்கள் நான்கு வருடங்களாகவும், மடக்கும்பரை புதுக்காடு – 20 குடும்பங்கள் 19 மாதங்களாகவும், மன்றாசி என்பீல்ட் - 24 குடும்பங்கள் 11 மாதங்களாகவும், பொகவந்தலாவ சென் ஜோன் டில்லரி 09 குடும்பங்கள் 12 மாதங்களாகவும், கொட்டக்கலை பளிங்குமலை – 20 குடும்பங்கள் 20 மாதங்களாகவும் தங்கள் இருப்பிடங்களை இழந்துள்ளனர். இவர்கள் எவ்வித அடிப்படை தேவைகளும் இல்லாது தற்காலிக குடில்களில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான விபத்துக்களுக்கு அரசியல்வாதிகளும், தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்தி மின்சாரத்தை பெறல், முறையான மின்சார இணைப்பை கொண்டிருக்காமை போன்ற காரணிகள் ஆகும். இதற்கு மின்சார சபையும் பொறுப்பேற்க வேண்டும். எதிர் வரும் காலங்களில் இவ்வாறு அகதிகளாக வாழும் மக்களுக்கு உரிய வீட்டு வசதிகள் செய்து கொடுக்கவும், முறையான மின்சார வசதியை வழங்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கிறார்கள்.

No comments: