Sunday, April 18, 2010

கம்பனிகளின் வருகையின் பின்னர் தொழில் ரீதியாக நசுக்கப்படும், சலுகைகளை இழந்து வரும் தோட்டத் தொழிலாளர்கள்

மலையகத்தில் குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் அநேகமானோர் தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்து வருவதை நாம் அறிகின்றோம் இவர்களில் ஆண், பெண் உட்பட பெரும்பாலானவர்கள் தேயிலைத் தோட்டங்களில் தொழில் செய்து தமது வாழ்க்கையை கொண்டு செல்வதே உண்மையான நிகழ்வாகும். இதில் இளைஞர் யுவதிகள் என்ற விதி விலக்கல்ல.
அநேகமாக தேயிலைத் தோட்டத தொழிலைத் தேர்ந்தெடுப்பதற்கு பல காரணங்களை முன்னெடுக்கலாம். இதில் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதையும் சில வரப்பிரசாதங்களுக்கு அடிமையாக விடுவதையும் கூறலாம் வரப்பிரசாதம் என்று இவர்கள் நினைப்பது தம் இருப்பிடத்துக்கான கூலி அறவிடப்படுவதில்லை என்பதையே. மேலும் நகரங்களில் பணம் செலுத்தி பெறுகின்ற குடிநீர், காற்று போன்றவற்றை இலவசமாக பெற்றுக்கொள்ளும் நிலை தோட்டப்புறங்களில் அதிகமாக உள்ளது. அதுவும் மரக்கறி தோட்டங்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்றவற்றுக்கு வசதி உள்ளமையேயாகும்.
இது ஒருபுறமிருக்க இவர்கள் சுரண்டப்படும் விதங்களை அறியாதவர்களாகவே வாழ்ந்து வருகின்றார்கள் என்பது வேதனைக்குரிய விடயமாகும். இவர்கள் தொழில் ரீதுpயாக நசுக்கப்படுவது எவ்வாறு என்று நோக்குவோமானால் ஒரு தொழிலாளி வேலைத் தளங்களில் இருந்து வீடு திரும்பும் நேரம் மிகவும் தாமதகமாகவே இருக்கின்றமையை சுட்டிக்காட்டலாம்.
குறிப்பாக பெண் தொழிலாளர்கள் வேலை நேரம் அதிகரிப்பால் நசுக்கப்படுவது அநேகமான தோட்டங்களில் காணப்படுகின்றதொன்றாகும். மலையில் வேலை பார்க்கும் கங்காணிமார்கள் அன்றைய கால பெரிய கங்காணிமார்களை விட ஆதிக்கம் செலுத்துக்கின்றார்கள் என பல பெண் தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் குற்றம் கூறச் செய்கின்றார்கள் இதுவும் ஓர் ஆண் ஆதிக்கம் என்றே பலர் சொல்லி வேதனைப்படுகின்றனர்.
இன்று தேயிலைத் தோட்டங்களில் அநேகமாக இளம் யுவதிகள் வேலை செய்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. சில தோட்டங்களில் கங்காணிமார்கள் இளம் பெண்கள் என்றுகூட பார்க்காமல் தங்களை மலையில் வாய் கூசாமல் பேசுகிறார்கள். சிலர் தகாத வார்த்தைப் பிரயோகங்ககளை உபயோகிப்பதாக தோட்டப்புற பெண் தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கொழுந்து நிறுவையிலும் தங்கள் பாதிப்புக்களை அவர்கள் மறுக்கவில்லை. தற்போது சில தோட்டங்களில் உள்ள கொழுந்து நிறுக்கும் தராசுகள் பழைமை வாய்ந்தவையாகவும் உடைந்த, துருப்பிடித்த நிலையிலும் இருக்கின்றமையால் சரியான நிறுவையினை காட்டுவதில்லை என்றும் பெண் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பெண் தொழிலாளர்கள் தற்போது வேதன அதிகரிப்பின் பின்னர் ஒரு நாள் பேருக்கு(சம்பளத்துக்கு) சில தோட்டங்களில் 18 கிலோ கொழுந்து எடுத்தல் (தோட்டத்துக்கு தோட்டம் இது வேறுபடும்) வேண்டும். என நிர்வாகம் கண்டிக்கின்றது. இது போன்ற நேரங்களில் பெண் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இது இவ்வாறிருக்க தோட்டப் பகுதியிலுள்ள இன்றுள்ள பெண்கள் தொழிலாளர்கள் தேயிலை தொழிற்சாலைகளில் அதிகபட்சம் வேலை செய்வதை காணக்கூடியதாக உள்ளது. இவர்கள் தேயிலை தொழிற்சாலைகளில் இரவு நேர கடமைகளிலும் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட சில தோட்டங்களில் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு வேலை செய்யும் போது பாதுகாப்பு கவசங்கள் சரியான முறையில் வழங்கப்படுவதில்லை. இதனால் ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு உள்ளாவதாகவும் சில பெண்கள் தெரிவிக்கின்றனர்.
இது இவ்வாறிருக்க பெருந்தோட்டத்துறையில் வாழும் தொழிலாளர்கள் சுகாதார ரீதியாக அதிகமாக பாதிப்புக்குள்ளாகி வருவதையும் காணக்கூடியதாக உள்ளது. தோட்டங்களை அரசு நடத்தி வந்தபோது தோட்ட வைத்தியசாலைகள் காணப்பட்டன. மருந்தக, தாதி, (நுஆயு) தோட்ட வைத்தியர்கள் போன்றோர் அநேகமான தோட்டங்களில் பிரசவ வார்ட் போன்ற காணக்கூடியதாக இருந்தமையும் சுகாதாரம் சீராக இருந்தமையும் குறிப்பிடுவதோடு வாரம் ஒரு முறையாவது தோட்டக் குடியிருப்புக்களுக்கு சேமநல அதிகாரி தோட்ட வைத்தியர் ஆகியோர் சென்று சுகாதாரம் சம்பந்தமாக கலந்துரையாடி வைத்தியம் பார்த்த காலமும் தோட்டங்களில் இருந்து வந்தது.
அது மட்டுமல்லாமல் சகல தோட்டக் குடியிருப்புக்களின் வடிகான் மற்றும் குடியிருப்பினை சுத்தம் செய்வதற்காக லயன் சுத்திகரிப்பாளர் ஒருவரும் கடமையில் இருந்து வந்ததும் குறிப்பிட வேண்டும். தற்போது தனியார் கம்பனிகளின் வருகையின் பின்னர் இவை படிப்படியாக குறைவடைய ஆரம்பித்து விட்டன. தோட்டப் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள் இயங்குவது குறைவு பல தோட்டங்களுக்கு ஒரு வைத்திய அதிகாரியொருவர், தாதி ஒருவர் என மிகவும் குறைவாகவே காணப்படுகின்றனர். சில தோட்டங்களில் மருந்தகம், வைத்தியசாலைகள் மூடப்பட்ட நிலையில் காணக்கூடியதாக இருப்பது வேதனையாகத்தான் இருக்கின்றது.
தற்போது வைத்திய அதிகாரி, தாதிமார், சேமநல அதிகாரி போன்றோர் தோடடக் குடியிருப்புக்களுக்கு விஜயம் செய்து நோயாளிகளை பார்வையிடுவது அடியோடு இல்லாமல் போயுள்ளது. அன்றிருந்த லயன் சுத்திகரிப்பாளர்கள் எந்த தோட்டத்திலும் இல்லை என்பதைத்தான் கூற வேண்டும். இப்படி கம்பனி வருகையின் பின்னர் பெருந்தோட்டத்துறை தொழிலாளிகளின் சலுகை படிப்படியாக குறைந்து வருகின்றது. அத்தோடு தொழிலாளர்களின் சந்தாவிற்கு அக்கறை காட்டும் தொழி;ற்சங்கங்களின் வருகை அதிகரித்துக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு அதிகரித்து வரும் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தொழிலாளர்கள் நலனிலும் சற்று அக்கறை காட்டு இதுவரை கிடைத்து வந்த சலுகையாவது குறையாமல் இருக்க வேண்டி தொழிலாளர்கள் கேட்கின்றனர்.
சுகாதார அமைப்புக்கள் தோட்டப் புறங்களில் சுகாதார நலன்களில் அக்கறை காட்ட வேண்டும். சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்குகளும் நடத்தி தோட்டத்துறை தொழிலாளர்களின் உரிமைகளிலும் அக்கறை செலுத்த முன் வர வேண்டுமென பெருந்தோட்ட கடமையில் உள்ள தொழிலாளர்கள் கேட்கின்றனர்.
ராஜ்குமார்

Sunday, March 7, 2010

தொழிலாளர் வர்க்க சக்திகளே பெண் விடுதலைக்கான இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும்.

சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 08ம் திகதி சர்வதேச ரீதியில் உணர்வு பூர்வமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உழைக்கும் பெண்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு பெண் விடுதலைக்காக கோராடி அர்ப்பணித்த தலைவிகளுக்கும் விடுதலை போராளிகளுக்கும் புரட்சிகர அஞ்சலியை சமர்ப்பித்து அவர்களை நினைவு கூருவோமாக.

கம்யூனிஸ்ட் அறிக்கையும் பெண் விடுதலை இயக்கமும்

1848ம் ஆண்டு கம்யூனிஸ்ட் அறி;க்கையிலும் பின் சர்வதேச கம்யூனிஸ்ட் சோஷலிச இயக்கங்களிலும் பெண் விடுதலைக்கான கோஷங்கள் எழுப்பப்பட்டன. பல போராட்டங்களும் நடைபெற்றன. தொழிலாளர் தோழியர் கிளேரா ஷெட்கின் தலைமையில் உருவாகிய சோஷலிச பெண்கள் இயக்கம் பெண் விடுதலைக்காக அளப்பரிய சேவையாற்றியுள்ளது. சோஷலிச சக்திகளே பெண் விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுத்து பல வெற்றிகளை பெற்றுள்ளன.

சமகால போராட்டங்கள்

சம காலத்திலும் பெண் விடுதலைக்கான போராட்டங்கள் தொடர்கின்றன. குறிப்பாக உழைக்கும் பெண்கள் உரிமைகளுக்கான போராட்டங்கள் தொடர்கின்றன. வர்க்கப் போராட்டத்திலிருந்து பெண் விடுதலை போராட்டத்தை பிரிக்க முடியாது.

அக்டோபர் புரட்சியும் பெண் விடுதலையும்

1817ம் ஆண்டு நவம்பர் மாதம் 07ம் திகதி மாமேதை லெனின் தலைமையில் சோவியத் ஒன்றியத்தில் அக்டோபர் புரட்சி வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து சோவியத் யூனியனிலும் சோஷலிச நாடுகளிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டது. சகல துறைகளிலும் பெண்கள் சம உரிமை பெற்றனர். இதன் தாக்கம் மேலை நாடுகளில் எதிரொலித்தது. அங்கேயும் பெண் விடுதலை இயக்கங்கள் வளர்ந்தன. பெண்கள் பல்வேறு உரிமைகளை வென்றனர். பிரபுத்துவ பழைய கலாச்சாரம் தகர்ந்தது. ஆனாலும் மூன்றாம் உலக நாடுகளில் பெண் விடுதலை தீவிரமாக பரவவில்லை.

மார்க்ஸிசம், லெனினிசம் பெண் விடுதலைக்கு உந்து சக்தியாக விளங்கின.

மூன்றாம் உலக நாடுகளில் தொடரும் பிரபுத்துவ பழைய கலாச்சாரம் ஆதிக்கமும் பெண் விடுதலையை, சமத்துவத்தை தடுக்கிறது. ஆகவே பிரபுத்துவ மத, முதலாளித்துவ ஆதிக்க சிந்தனைகளுக்கு எதிராக போராடாமல் பெண் விடுதலைக்கான இயக்கம் வேகமாக வளர முடியாது.

பெண்களின் உடை

தேயிலைத் தோட்ட தமிழ் பெண்கள் முதலில் தமது தற்போதைய ஆடை அணியும் முறையை மாற்ற வேண்டும். சேலை, படங்கு, றப்பர் சீட் போன்றவற்றை இல்லாதொழிக்க வேண்டும். பிரபுத்துவ காலனித்துவ ஆடை அணியும் கலாச்சார நிலையிலிருந்து மாறி நவீன யுகத்திற்கு வர வேண்டும். டெனிம் காற்சட்டை(லோங்ஸ்) கோட்டு, தொப்பி, கையுறை காலுக்கு பூட்ஸ் அணியும் நிலைக்கு மாற வேண்டும். தலையில் கூடை சுமக்கும் முறையை மாற்ற வேண்டும். கூடை காலாச்சாரமும் தகர்க்கப்பட வேண்டும். இது பற்றி செங்கொடிச் சங்கம் பல ஆண்டுகளாக பிரச்சாரம் செய்த போதும் பலனில்லை.

மேல்தட்டு மத்தியதர வர்க்க கலாச்சாரம்

கல்வியறிவு இல்லாததனாலேயே பெருந்தோட்ட தமிழ்ப் பெண்கள் மூட நம்பிக்கையில் வாழ்கிறார்கள் என்பதில் உண்மையில்லை. உதாரணமாக கல்வித் துறையில் சேவை செய்யும் படித்த பெண்களும், பழைய கலாச்சாரத்தையே பின்பற்றுகின்றனர். தற்போது தொலைகாட்சி கலாச்சாரத்தை மத்திய வர்க்க தமிழ்ப் பெண்கள் பின்பற்றுகின்றனர். வருமானத்தின் பெரும் பகுதியை அழகு சாதனங்களுக்கு தலை அலங்காரத்திற்கு மத சடங்குகளுக்காக என செலவிடுகின்றனர். தொழில்களில் நிறப் பாகுபாடு பின்பற்றப்படுகிறது. கருமை நிறமான பெண்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனம்.

ஐக்கிய நாடுகள் சபை 1997ம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினமாக மார்ச் 08ம் திகதியை பிரகடனப்படுத்தியவுடன் முதலாளித்துவ அரசாங்கங்களும் மத்திய தர பெண்கள்அமைப்புக்களும் சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடுவதில் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து சர்வதேச பெண்கள் தினத்தின் வர்க்க குணாம்சத்தை மழுங்கடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டன. வர்க்கப் போராட்டத்திலிருந்து பெண் விடுதலையை பிரிக்க முடியாது. உதாரணமாக சிறிமாவோ பண்டாரநாயக்காவும், சந்திரிகா குமாரதுங்காவும் பிரதமராக, ஜனாதிபதியாக பதவி வகித்த போதிலும் இலங்கையின் தொழிலாள விவசாய பெண்கள் விமோசனம் பெறவில்லை. தொழிலாளர் வர்க்க சக்திகளே பெண் விடுதலைக்கான இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும். மார்க்ஸிய சிந்தனையை வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச பெண்கள் தினத்தின் அறைகூவல்.

சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடும் பெண்கள் அமைப்புக்கள், பெண்கள், பகுத்தறிவு, பரட்சிகர படலத்தி;ல் அணிதிரள வேண்டும் கார்ல் மார்க்ஸ், பெரியார் ஆகியோர் உட்பட புரட்சிகர சீர்திருத்த கருத்துக்களை படித்து விழிப்புணர்வு பெற வேண்டும்

ஓ.ஏ. இராமையா

செங்கொடி சங்கம்


Saturday, March 6, 2010

மகளிர் தினமும் மலையகப் பெண்களின் மேம்பாடும்

வேண்டுவதை வேண்டாமென்று தடுக்கும் போதுதான் வேட்கை அதிகரிக்கிறது. அதுதான் ஆசைகளை அறுப்பதற்கு பதிலாக தானாகவே அவ்வாசைகள் அறுந்து விடுகின்றன. நிஜங்களைக் கண்டு அவற்றின் மதிப்பீடுகளை உணர்ந்தால் தான் உண்மை உள்ளத்தை உலுக்கும்.

மலையகப் பெருந்தோட்ட பெண்களின் பின்புலத்திலும் பல்வேறு உண்மைகள் மறைந்து புதைந்து கிடக்கின்றன. ஆனால் இதனை உணர்ந்து கொள்ளாத பல சக்திகள் கட்டியுள்ள கட்டுமானங்களை அவிழ்ப்போம். அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுவிப்போம் மற்றும் விடுதலை விடிகிறது என்றெல்லாம் ஆண்டுக்கொருமுறை ஆலாபனை வார்த்தை சொல்லுவதை மாத்திரம் தாரகமாகக் கொண்டுள்ளன. இன்றைய மகளிர் தின கொண்டாட்டமும் மேற்கூறியவற்றை மெய்ப்பிக்கும் என்பதில் ஐயமில்லை.

மலையகப் பெண்களின் மேம்பாடு பற்றிப் பேசும் போது அந்தப் பெண்கள் எழுப்புகின்ற கேள்விகள் நினைவுக்கு வருகின்றன.

எண்ணற்ற இளம் பெண்களின் இந்த இயல்பான ஏக்கத்தை நோக்கின் பரிதாபப் பிறவிகளாக பார்க்கப்பட வேண்டியவர்கள் எல்லாருமல்லர். ஆனால் கல்வியில் பின்தங்கி காலத்தின் கட்டாயத்ததால் சமூகப் பொருளாதார சுமைகளிலிருந்து விடுபடுவதற்கு உழைப்பையே தஞ்சமாகக் கொண்டிருக்கும் பெருந்தோட்டப் பெண்களைப் பற்றித்தான் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் நிலவுகிறது.

வளர்ந்து வருகின்ற இந்தச் சமுகம் இன்னுமொரு பெண்ணின் உரிமையை கொடுக்க மறுப்பதால்தான், உழைக்கும் பெண்களின் மாண்பு உதாசீனப்படுத்தப்படு கிறது. பெருந்தோட்ட பெண்களும், இந்த வேள்விப் பட்டியலில் கேள்விப் பொருளாக மாறியுள்ளனர். நிறைந்த உழைப்பு, குறைந்த வருமானம், செறிந்த அடிமைத்தனம், இதுவரை வாழ்க்கை என்ற ஏக்கப் பிரவாகம் இவர்களின் வெளிப்படாத வேதனையாக நிறைந்து நிற்கிறது. நாட்டிலுள்ள எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரியான சமூக நீதியே காணப்படுகின்ற போது பெருந்தோட்டப் பெண்களும் அதற்குள் தானே அடங்குகின்றார்கள் என்ற சிலரின் நியாயப்படுத்தல்கள் தொடரக்கூடும். எனினும் பெருந்தோட்டப் பெண்கள் ஆணாதிக்கம், சம உரிமையின்மை, பாரபட்சம், பாதுகாப்பின்மை, சந்தேகம், வரதட்சிணை, பாலியல் வன்புணர்ச்சி, அடக்குமுறை அதிகாரம், உலகமயதாக்கம், சட்டவிரோத மது தயாரிப்பின் பாதிப்பு போன்ற காரணங்கள் முழுவாசியை முதன்மையாகிக் கொள்வதில் முக்கிய இடம் பெறுகின்றனர் என்பதை பெருந்தோட்ட பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

பெண்ணியம் என்னும் கருத்தியல் பிரெஞ்ச் சமூகவியலாளர் சார்லஸ் போரியர் (விhயசடலீள பிழரசiலீச) என்பவரால் உருவாக்கப்பட்டது. அவர், தன்னையும் உருவாக்கிக்கொண்டு ஒரு மாறுபட்ட சமுதாயத்தின் உருவாக்கத்திற்க்கும் பங்களிக்கும் பெண் உருவத்தை ‘புனித பெண்மை’ என அடையாளம் காட்டினார். அப்படியானால் தேசத்தின் மாறுபட்ட பொருளாதாரத்திற்கு தன்னை அர்ப்பணமாக்கும் பெருந்தோட்டப் பெண் தொழிலாளியும் இந்த புனிதத்துக்குள் புதைந்து கொள்கிறாள் எனலாம்.

17ம் நுற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் இயக்கத்தின் வியாபகமே இன்றுவரை பெண்ணியம் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றது. இந்த வரிசையில் மலையகப் பெருந்தோட்ட பெண்கள் பற்றி அமைப்பு ரீதியாக தொழிற்சங்கங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், பெண்கள் அமைப்புக்கள் என்பன தவறாமல் பேசிக்கொண்டிருக்கின்றன. அதிகமான அமைப்புக்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழிவியலோடு ஒன்றிப்போய் கரிசனை காட்டத் தவறினாலும், அவர்கள் பற்றிய விடயங்களை ஊடகங்களில் வெளியிட்டு உலகுக்கு தெரிவிக்க மறந்ததில்லை. எது எப்படியாயினும்,

என்று நீங்குமோ எங்களின் கொடுமைகள்?

எப்போது மலருமோ விடுதலைப் பூக்கள் என்ற கேள்வியோடு வாழும் தோட்டப் பெண்கள் மாறுபட்ட சூழலில் வாழுகின்ற தன்மையினை கவனத்திற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இலங்கையைப் பொறுத்தளவில் சார்க் வலய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இலங்கைப் பெண்களின் வாழ்வியல் பின்னணி சற்று திருப்திகரமாகவே இருக்கின்றது. என்றாலும் பெருந்தோட்டப் பெண்கள் இன்னும் பிற்படுத்தப்பட்டவர்களாகவும் புறக்கணிக்கப்பட்டவர்களாகவுமே உள்ளனர். அநீதிகளுக்கு ஆளாகி வரும் இவர்கள் நாட்டின் அபிவிருத்திக்காக அளித்து வருகின்ற பங்களிப்பு கண்டுகொள்ளப்படாததாக இருந்து வருகின்றது.

இன்றைய சமூக பொருளாதார காரணிகளாலும் பெருந்தோட்டங்களில் இருந்து ஆண் தொழிலாளர்கள் படிப்படியாக வெளியேறி வருவதனாலும் ஆண் தொழிலாளர்கள் மேற்கொண்ட பல்வேறு கடமைகளை தாமே மேற்கொள்பவர்களாக மாத்திரமின்றி பெருந்தோட்டத்தில் எஞ்சியவர்களாகவும் பெண்களே விளங்குகின்றனர் எனலாம். இதனால் அவர்கள் குடும்பத்தில் பிரதான வருவாய் ஈட்டுபவர்களாகவும் ஓய்வுபெற்ற தமது குடும்ப அங்கத்தவர்களை பராமரிக்கக் கூடியவர்களாகவும் தனது குழந்தைகளை பராமரிக்க வேண்டியவர்களாகவும், எல்லாவற்றுக்கும் மேலாக நேரத்தோடு போராடுபவர்களாகவும், விறகு சேர்த்தல் முதல் வீட்டிற்கு பொருட்கள் கொள்வனவு செய்வது வரை கவனிக்க வேண்டிய கடமைகளை கொண்டவர்களாகவும் விளங்க வேண்டியுள்ளது. ஓய்வில்லாமல் உழைக்கும் பெருந்தோட்ட பெண்ணைச் சுற்றியிருக்கிற வலைப்பின்னல்கள் வறுமைப் பின்னல்களாகவும், வெறுமைப் பின்னல்களாகவும் விளங்குகின்றன.

அடிப்படைக் கல்வியில் அபிவிருத்தி பெறாத இவர்கள் ஒடுக்குமுறைக்கு உட்பட்டிருப்பதால் அரசியல், தொழிற்சங்கம், ஆலயம், சமூகப் பிரதிநிதித்துவம் என்பவற்றிலும் பின்தங்கியவர்களாகவே இருக்கின்றனர்.

மேலும் இவர்களுக்கு குறைவான போதிய சத்துணவின்மை, குடும்பத்தவர்களில் ஆண்களின் மதுப் பாவனை, பொருளாதார தாக்கம் போன்ற பல்வேறு காரணிகள் சுமைகளாகி வருகின்றன. பொதுவாக தொழில் பாதுகாப்பு, தமக்கான சீருடை, வேலைத்தளத்தில் எந்தவொரு அடிப்படை வசதிகள் இல்லாமையாலும், பெண்களை நிருவகிக்கும் பெண் நிருவாகிகள் இல்லாமலும் ஓரங்கட்டப்பட்டதொரு ஒடுக்குமுறைச் சின்னமாகவும் விளங்குகின்றனர். ஏனைய துறையினரோடும், சமூகங்களோடும் தொழில் ரீதியாகவும் ஒப்பிடும் போது எல்லா வகையிலும் பால்நிலை சமத்துவமற்ற நிலையில் பரிதாபத்துக்குரியவர்களாகவே விளங்குகின்றனர்.

ஆகவே பெருந்தோட்ட சமுதாயப் பெண்கள் மாண்புற்று வாழ்வதற்கு இவ்வருட மார்ச் 08ம் திகதி பெண்கள் தினமாவது ஒரு புரட்சிகரமான முன்னுருவாக்கத்தை உருவாக்குமேயானால் அதுவே அவர்களை ஒதுக்கலிலிருந்தும், ஓரங்கட்டலிலிருந்தும் மீட்டு சிந்தனை உசுப்பலுக்கு வித்திடும் என்பதில் ஐயமில்லை.

ஓ தோட்டப் பெண்ணே!

ஆடிவரும் தென்றலும்

பாடி வரும் பறவையும்

ஓடிவரும் அருவியும்

உலகத்தில்

சுதந்திரமாக சுவடு பதித்ததைப் பார்!


நீ! இயற்கையின் சிகரமல்லவா!

உன் அறியாமைச் சிறையை விட்டு

வெளியே வா!

கட்டுக்களை உடைத்தெறி - ஏன்

உடைத்து எரி!

அப்போது விடுதலை தேடும் உனக்கு

வானம் கூட

தொடு தூரத்தில் எரியும் என்பது போல்

மலையக பெருந்தோட்ட பெண்கள் அறியாமையை கட்டவிழ்த்து உணர்வுகளில், எண்ணங்களில் சொற்களில், செயல்களில், வாழ்க்கையில் நம்பிக்கையோடு விடுதலை தேடும் நாள் உதயமாக சர்வதேச மகளிர் தினம் அடிகோலட்டுமாக!


பசறையூர்

க. வேலாயுதம்

நன்றி- தினகரன் வாரமஞ்சரி



Sunday, February 28, 2010

தொடரும் வீட்டு வேலைக்கு சிறுவரை அனுப்பும் அவலம்: பெற்றோர் விழிப்பு பெறுவது எப்போது?

பாடசாலை செல்லும் வயதில் வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்படும் சிறுமியரின் எதிர்காலம் இன்னமும் கேள்விக்குறியா கவே இருக்கிறது. வேலை செய்யும் இடங்களில் அவர்கள் பாலியல் துஷ்பிரயோகம், துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர்.

இவ்வாறான செயல்களுக்கு எதிராக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வதும் சில காலத்தின் பின்னர் மறந்து விடுவதாகவே போக்குகள் அமைந்துள்ளன.

கடந்தாண்டு செப்டம்பரில் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள கழிவுநீர்க் கால்வாய் ஒன்றில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட மஸ்கெலியா முள்ளுகாமம் மேற்பிரிவைச் சேர்ந்த சுமதி ஜீவராணி ஆகிய இருவரினது மரணத்துடன் சிறுமியரை வீட்டு வேலைக்கு அமர்த்தப்படும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாகவே நாம் கருதினோம்.

அப்போது அவர்களின் மரணம் பெருந்தோட்டப் பகுதி மக்களை அந்தளவிற்கு அதிர்ச்சிக்குள்ளாக்கி யிருந்தது. தம் பிள்ளைகளை வீட்டு வேலைகளுக்காக அனுப்பிய பல பெற்றோருக்கு ஒரு படிப்பினையை தந்த அவ்விடயம் அப்போது எல்லோராலும் மறக்கப்பட்ட ஒரு விடயமாகவே இருக்கிறது. அந்த சம்பவத்துடன் கொழும்பில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த பிள்ளைகளின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்கள்.

இனி கொழும்புக்கு வேலைக்கு அனுப்புவதில்லை என்ற உறுதிமொழியையும் வழங்கினார்கள். தொழிற்சங்கவாதிகள் மற்றும் சமூக நல அமைப்புக்கள் வீட்டு வேலைகளுக்கு அனுப்பும் பிள்ளைகளின் பெற்றோருக்கு அவர்களின் எதிர்காலம் தொடர்பாகவும் கல்வி கற்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்ற உறுதிமொழியையும் தந்தனர்.

அது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்கள் மலையகம் முழுவதும் பல தொண்டர் அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டன. வீட்டு வேலைகளுக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்லும் தரகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இப்போது நிலைமை மீண்டும் பழைய பூஜ்ஜியத்துக்கே மாறியிருப்பதாக தோன்றுகிறது. பெற்றோர் தம் பிள்ளைகளை கொழும்பு நகர்ப்புறங்களுக்கு வீட்டு வேலைகளுக்கு அனுப்பவது இப்போதும் தொடர்கிறது.

குடும்ப வறுமை, பொருளாதார பிரச்சினை காரணமாக பிள்ளைகளை படிக்க வைப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாகக் நொண்டிச்சாட்டுக்களைக் கூறி ஒருசில பெற்றோர் மிகவும் இரகசியமாக தம் பிள்ளைகளை தரகர்களின் உதவியுடன் மீண்டும் வேலைக்கு அனுப்பி வைப்பதாக தெரியவந்துள்ளது.

மர்மமான முறையில் மரணமான சுமதி, ஜீவராணி ஆகிய சிறுமிகளின் விடயத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் ஆஜரான சட்டத்தரணிகள் இலவசமாகவே பெற்றோர் தரப்பில் வாதாடினர்.

பெற்றோர் தரப்பில் தவறுகள் இருந்தும் இவ்வாறான அவல நிலை வேறெந்த பெற்றோருக்கும் வந்துவிடக்கூடாது எனக் கருதிய பல தொண்டர் அமைப்புகள் பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு பல்வேறு வகைகளில் உதவிகளைச் செய்தன.

வேள்ட்விஷன் அமைப்பு 19 இலட்ச ரூபா செலவில் பாலர் பாடசாலையை அத்தோட்டத்தில் கட்டிக்கொடுத்திருக்கிறது. தற்போது அதில் 24ற்கு மேற்பட்ட சிறுவர்கள் அப்பாடசாலையில் கற்று வருகிறார்கள்.

முதலாம் தரத்திற்குச் செல்லும் மாணவர்களுக்கு அந்நிறுவனம் தேவையான பாடப் புத்தகங்கள், உடைகள், பாதணி உட்பட பல பாடசாலை உபகரணங்களை கொடுத்து உதவி வருகிறது.

இவ்வாறு பல உதவிகள் செய்து கொடுத்த போதிலும் பெற்றோர் தம் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி வைப்பதாகத் தெரியவில்லை. பாடசாலை செல்லாத சிறுவர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.

அத்தோட்டத்திலுள்ள இளமொட்டு இளைஞர் கழகத்தின் செயலாளர் என்.ராஜ்குமார் கருத்து தெரிவிக்கையில், சிவனொளிபாத மலைக்கு அண்மித்ததாக உள்ள மலைப்பகுதியில் இத்தோட்டம் அமைந்துள்ளது. 6000 அடிக்கு மேற்பட்ட உயரத்தில் இருக்கும் இத்தோட்டத்தில் மாணவர்கள் கற்பதற்கான எந்தவிதமான வசதிகளோ? சூழலோ இல்லையென்றே கூறுகிறார்.

சிறுவர்களை தரம் ஒன்றில் சேர்க்க வேண்டுமானால் மூன்றரை கி.மீ. தொலைவிலுள்ள நல்லதண்ணி தமிழ் மகா வித்தியாலயத்திற்கே செல்ல வேண்டியிருக்கிறது. இந்நிலையில் அச்சிறார்கள் காலை உணவை சரியாக உட்கொள்ளாது பகல் வேளையில் வீடு திரும்பும் வழியில் பாதியில் மயக்கமுற்ற சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

சிறுவர்கள் மூன்றரை கிலோ மீற்றர் தூரம் மலையேறி தினமும் செல்வதென்பது இயலாத காரியமாகும். இந்த சிறார்களுக்கு போஷாக்கான உணவை பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.

மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் பகல் உணவு வழங்கப் படுகிறது. அவ்வாறான ஒரு திட்டத்தை மலையகத்திலுள்ள மிகவும் பின்தங்கிய தோட்டப்பகுதிகளுக்கு வழங்கினால் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார்.

இளைஞர் கழகத் தலைவர் எம்.ரஞ்சன்குமார் கருத்து தெரிவிக்கையில், என்னதான் தொண்டு நிறுவனங்கள் உதவிகளைச் செய்தாலும் பெற்றோர்களின் பூரண ஒத்துழைப்பு இல்லாமல் பிள்ளைகளை வளர்த்தெடுக்க முடியாது என்றார். இத் தோட்டத்தில் சுமார் 50ற்கு மேற்பட்ட சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லாமல் இருக்கின்றனர்.

அவர்கள் அனைவரையும் எப்படியாவது பாடசாலைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை கழகம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு பெற்றோர் ஒத்துழைப்பு தர வேண்டும்.

குறைந்த காலத்தில் பாடசாலைக் கல்வியை முடித்த 60 பேருக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்புகள் எதுவுமில்லாமல் இருக்கின்றனர்.

அவர்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது மலையக அரசியல் தொழிற்சங்கத் தலைமைகளின் கடமையாகும் என்கிறார் ரஞ்சன்குமார்.

தோட்டத்தில் சரியாக வேலை கொடுப்பதில்லை. வேலை நாள் 21 நாள் என்றால் சம்பளமும் குறைவாக கிடைக்கும். பல்வேறு சிரமங்களின் மத்தியிலேயே குடும்பத்தை கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது.

தற்போது கடுமையான குளிரும் வெப்பமும் நிலவுவதால் தோட்ட நிர்வாகம் கேட்கும் கிலோ கொழுந்தை பறிக்க முடியாதிருக்கிறது. மழைக்காலங்களில் அட்டை எமது இரத்தத்தை உறிஞ்சுகிறது. அட்டை இரத்தத்தை உறிஞ்சினால் பரவாயில்லை.

ஆனால் அதனால் சரும நோய்க்கு ஆளாகிறோம். இந்நிலையில் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை எப்படி வரும் என கேள்வியெழுப்புகிறார் தொழிலாளியொருவர்.

பெருந்தோட்டப் பகுதிகளில் இயங்கும் சமூக நல நிறுவனங்கள், தொண்டர் அமைப்புகள் சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுவது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொண்டு வந்த போதிலும் அதனை முழுமையாக இல்லாதொழிப்பதற்கான காரணத்தை கண்டறிந்து அதற்கேற்ற வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பெற்றோரின் பங்களிப்பில்லாமல் எதனையும் செய்ய முடியாதென்பதற்கு மஸ்கெலியா முள்ளுகாமம் மேற்பிரிவு சிறந்த உதாரணமாகும். எனவே மிகவும் பின்தங்கிய பெருந்தோட்டப் பகுதிகள் மீது மலையகத் தொழிற்சங்கத் தலைமைகள் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். எதிர்காலச் சந்ததியினர் ஒரு கல்வியறிவுள்ள சமுதாயமாக மாற வேண்டுமானால் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி கற்பதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.


மஸ்கெலிய - தி. சரண்யா

கூட்டு ஒப்பந்தம் அவசியமானாலும் சரத்துக்களில் மாற்றம் தேவை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு, அவர்களின் சேமநலன்கள் தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கக் கூட்டு அமைப்புக்குமிடையே இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது.

இரு தரப்பிற்குமிடையே பல சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்று இறுதி முடிவை எட்டுவதற்குள் பல மாதங்கள் சென்று விடுகின்றன. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும், ஏனைய தொழிற்சங்கங்களும் கூட கடந்த காலங்களில் ஒப்பந்த காலத்தில் மட்டும் பேசுவதும் பின்னர் அது பற்றி எவரும் பேசுவது கிடையாது.

கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமான வேளையிலும், அதனைத் தொடர்ந்து ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னரும், பெருந்தோட்டத் தொழிலாளர்களிடையே பல்வேறு விதமான சலசலப்புக்கள், ஒப்பந்த கைச்சாத்திடலுக்குப் பின்னர் இனிபேசி என்ன பயன் என்ற நிலையில் படிப்படியாக அனைத்து தரப்பினரும் மறந்து விடுகின்றனர்.

கூட்டு ஒப்பந்தம் சரியோ, பிழையோ தோட்டத் தொழிலாளர்களுக்கான அதிகரித்த சம்பளம் நிலுவைக் கொடுப்பனவு என்பன வழங்கப்பட்டதால் பெருந்தொகைப் பணம் கையில் கிடைத்த மகிழ்ச்சிப் பிரவாகத்தில் திளைத்திருந்தனர்.

ஆனால் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறினால் போல் விடுமுறைக் கொடுப்பனவு வழங்குவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்ற போதே மீண்டும் சலசலப்பும் முணுமுணுப்பும் தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

தோட்டத்திற்குத் தோட்டம், மாவட்டத்திற்கு மாவட்டம், கம்பனிக்கு கம்பனி மாறுபட்ட நிர்வாக முறைகள் காணப்படுகின்றன. முறையற்ற கொடுப்பனவினை எதிர்த்து ஆங்காங்கே தொழிலாளர்களின் பணிப் பகிஷ்கரிப்பும் போராட்ட நடவடிக்கைகளும் ஆரம்பமாகியுள்ளன.

துரை நல்லவர், பிரம்பு பொல்லாதது என்பது போல் கூட்டு ஒப்பந்தம் நல்லதாகக் கணிக்கப்பட்டாலும் அதன் சரத்துக்கள் தொழிலாளர்களை பல்வேறு வகையில் பாதிப்படையச் செய்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் பொறுப்பு வாய்ந்த தொழிற் சங்கங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தொழிலாளர் நல அமைப்புக்கள் இது விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

இதற்கமைவாக பெருந்தோட்டத் துறை சமூக மாமன்றம் சில கால தாமதத்திற்குப் பின்னர் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக தோட்டத் தொழிலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்றினை கடந்த 16ம் திகதி செவ்வாய்க்கிழமை ஹட்டன் கிறிஸ்தவ தொழிலாளர் மண்டபத்தில் நடாத்தியது. இச்செயலமர்வில் பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள கூட்டு ஒப்பந்தத்தின் பின்னர் எழுந்துள்ள நிலைமைகள் பற்றி ஆராயப்பட்டது.

இலங்கை செங்கொடிச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஓ. ஏ. இராமையா தலைமையில் தொழிற்சங்க பிரமுகர்களான எஸ். முருகையா, ஐயாத்துரை, ஆ. முத்துலிங்கம், ஆர். எம். கிருஷ்ணசாமி, அரச சார்பற்ற நிறுவனங்களின் சார்பாக ஏ. சி. ஆர். ஜோன், கே. சந்திரசேகரன், கே. யோகேஸ்வரி, வி. அந்தனிஸ், கே. அன்ன லெட்சுமி ஆகியோர் பங்கு கொண்ட னர். பெருமளவிலான தொழிலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துக் கொண்ட இவ்அமர்வில் வளப்பகிர்வாளராக ஹட்டன் தொழிற் திணைக்கள சிரேஷ்ட தொழில் அதிகாரி வி. மருதடியான் கூட்டு ஒப்பந்தத்தின் தன்மைகள் விடுமுறைக் கொடுப்பனவு போன்ற பல்வேறு விடயங்கள் சார்ந்த விளக்கங்களை அளித்ததோடு பங்குபற்றுனரின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.


சிரேஷ்ட தொழில் அதிகாரி

வி. மருதடியான்

கூட்டு ஒப்பந்தமென்பது சட்டமுறையான ஒரு சாசனமாகும். இதில் கிடைக்கப் பெறும் அதிகூடிய நன்மையை தடுக்க முடியாது. இதனூடான பயனாளிகள் கூடுதலாக இருந்தால் தான் அதனை தொழில் ஆணையாளர் அனுமதிப்பார். சுமார். 500 வருடங்க ளுக்கு முன்பதாகவே கூட்டு ஒப்பந்த முறைமை கைத்தொழில் புரட்சியினூ டாக அமுலுக்கு வந்தது.

ஊழியர் சேமலாப நிதித் திட்டமும் கூட்டு ஒப்பந்த முறைமையின் வெளிப்பாடாக 1958 இல் நடைமுறைக்கு வந்தது எனலாம். கூட்டு ஒப்பந்தத்தை விமர்சிப்பதைவிட அதன் சரத்துக்களையே விமர்சிக்க முடியும். அதன் அபிலாஷைகள் ஒருவரால் மீறப்படலாம்.

அப்படி மீறுமிடத்து தொழில் ஆணையாளரால் வழக்குத் தாக்கல் செய்ய முடியும். சம்பள நிர்ணய சபையின் மூலமாகத் தான் முன்னர் தோட்டத் தொழிலாளரின் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. சம்பள நிர்ணய சபையில் 42க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. இச்சபை ஆகக் கூடுதலாக 6000ஃ- ரூபாய் வரை சம்பளமாக நிர்ணயம் செய்ய தகுதி பெற்றுள்ளது.

கூட்டு ஒப்பந்தமானது இதற்கும் மேலான தொகையை பெற்றுக் கொடுக்க வாய்ப்பளிக்கிறது. எனினும் இதன் நடைமுறைகளின் போது பல்வேறு மீறல்கள் இடம்பெறுவது தவிர்க்க முடியாததாகிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் சரியான முறையில் எமது திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்யலாம்.

விடுமுறை சம்பளக் கொடுப்பனவானது தனியான சட்டவரைவுகளை கொண்டிருக்கிறது. இது தொடர்பாக பிரச்சினைகள் எழுமாயின் தொழிற் திணைக்களத்திற்கு முறையிட முடியும்.

விடுமுறை தினங்களில் வேலை செய்யுமிடத்து வழமை போலவே வேலை செய்தாலும் தொழிலாளளிக்கு ஒன்றரை பெயர் வழங்கப்பட வேண்டும். விடுமுறைத் தினம் என்பதால் கூடுதல் வேலைவாங்க முடியாது என்றார்.


தொழிலாளர் விடுதலை

முன்னணியின் தலைவர்

ரி. ஐயாத்துரை

கூட்டு ஒப்பந்தத்தை நியாயமானது என பேசுவோர் அதனை எதிர்ப்போர், அதனைப் பற்றி பேசி பயனடையும் அரசியல் வாதிகள் என மூன்று வகையில் பார்க்க வேண்டும்.

1987 இல் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இ. தொ. கா.விற்கும் கூட்டு ஒப்பந்தம் இடம்பெற்றது. ஆரம்பத்தில் மாதாமாதம் சேவையடிப்படையில் பென்சன் வழங்கப்பட்டது.

இலவச வீடு, மருத்துவம் கிடைத்தது. பின்னர் மாத பென்சன் மாறி 35 வருடம் சேவை செய்த 60 வயதுடைய ஆண்களுக்கு 900ஃ- ரூபாவும் பெண்களுக்கு 750ஃ-, இந்தியா போவோருக்கு 1500ஃ- ரூபாவும் வழங்கப்பட்டு அதில் ஈ.பி.எப். உம் கழிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பல பேச்சுக்கள் நடைபெற்று நீதியான தீர்ப்பும் கிட்டியது.

முன்னர் 12 இறாத்தல் கொழுந்து பறித்த நிலையில் இப்பொழுது அது 23 இறாத்தலாக கூடியுள்ளது. 1942 இல் பொகவந்தலாவை எட்டியாகல தொழிலாளர்கள் 12 இறாத்தலே எடுக்க முடியுமென போராடினர்.

அதில் வெற்றியும் கண்டனர். கொட்டியாகல தோட்டத்தின் 8 டிவிசன்களும் இன்றும் 12 கிலோ தான் எடுக்கின்றன. ஆகவே, விமர்சனத்திற்கு உள்ளாகிய கூட்டு ஒப்பந்தத்தின் சரத்துக்கள் மீளாய்வு செய்யப்படல் வேண்டும் என்றார்.


ஆ. முத்துலிங்கம்,

பொதுச் செயலாளர், ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம்,

கூட்டு ஒப்பந்தம் பல நன்மைகளை பெற்றுத் தந்துள்ளது. குறிப்பாக முன்னர் தோட்ட வைத்தியசாலையில் பிரசவம் நடந்தால் அதற்கான வைத்திய செலவுத் தொகை கழிக்கப்படும். கூட்டு ஒப்பந்தம் அதைத் தடுத்துள்ளது. ஆரம்பத்தில் இ. தொ. கா. மாத்திரம் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டது.

பின்னர் இ. தே. தோ. தொ. ச. சேர்ந்து கொண்டது. இச்சந்தர்ப்பத்தில் அமரர் எஸ். நடேசன் அவர்களினது பெரும் முயற்சியால் உருவான கூட்டுக் கமிட்டியும் ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் வாய்ப்பை பெற்று நன்மை தரக் கூடிய விடயங்களில் கூடிய கவனம் செலுத்தி ஆலோசனை களை முன்வைத்தது.

2 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்டுள்ள இலங்கையில் 80 இலட்சம் தொழிலாளர்கள் இருக்கின்றனர். இவர்களில் 22மூ தோட்டத் தொழிலாளர்கள். புதிய சங்கங்களின் அதிகரிப்பும் பழைய சங்கங்களின் மறைவும் அரசியலுக்காக வருகின்ற தொழிற்சங்கங்களும் அதிகரிப்பதாலேயே பிரச்சினைகள் தீராமலிருக்கின்றன.

தொழிற்சங்கம் பலமாக இருந்தால்தான் பிரச்சினைகள் தீருமேயொழிய அது பலவீனப்பட்டால் ஒற்றுமை பறிபோகும். வங்கித் தொழிலாளர்க்கு ஒரு சங்கமென்றால் நம்மில் ஏன் பல சங்கம் உருவாக வேண்டும்? சீர்தூக்கி பார்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.


ஆர். எம். கிருஷ்ணசாமி

- தலைவர் விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ்,

கூட்டு ஒப்பந்தமானது பெருந்தோட்ட மக்கள் மத்தியில் பல்வேறு விதமான சலசலப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. கூட்டுத் தொழிற் சங்கமானது சம்பள உயர்வு தொடர்பாக அன்று பல்வேறு விதத்தில் கூடிப்பேசி ஆராய்ந்து வந்தது.

எனினும் காலப் போக்கில் அதன் நிலைப்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் எமை அதிலிருந்து ஒதுங்கியிருக்கத் தூண்டியது. இச்சம்பள உயர்வு பேச்சுவார்த்தைக்கு முன்னர் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே..வேலாயுதம் சகல தொழிற்சங்கங்களையும் கூட்டி ஆராய்ந்தார்.

எனினும் சிலர் எடுத்த தனிப்பட்ட தீர்மானங்களால் அதன் பின்விளைவுகள் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. மடுல்சீமை ஊவாகலை தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள போனஸ் கொடுப்பனவு பழைய கொடுப்பனவு முறையிலேயே கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தொழிலாளர்களிடையே அமைதியற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது.

தோட்டத்திற்கு தோட்டம் நடைமுறைகள் மாறியுள்ளன. ஊழியர் சேமலாப நிதியினை பிணையாக வைத்து கடன் வாங்கியவர்கள் பலர் பாதிப்படைந்துள்ளனர். புரோக்கர்கள் நன்மையடைகின்றனர். எனவே, இச்சம்பள விடயமானது மீளாய்வு செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.

பல சம்பளத் துண்டுகளை காட்டியும் அவரால் விளக்கமளிக்கப்பட்டது என்றார்.


கே. யோகேஸ்வரி

- சமூக அபிவிருத்தி நிறுவனம் கண்டி,

1992 ஆம் ஆண்டிற்கு பின்னர் பெருந்தோட்டங்களில் ஆண் தொழிலாளர்களின் விகிதாசாரம் குறைக்கப்படுகிறது. அதிகமான பெண் தொழிலாளர்களே நிரந்தர வதிவிடத் தொழிலாளர்களாக உள்ளனர்.

ஆண்கள் தட்டிக் கேட்பார்கள் என்ற பயத்தில் பெண் தொழிலாளர்களை மௌனிகளாக்கி இலாபம் தீட்டும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. தோட்டக் கமிட்டிகள் தற்போது இயங்குவதில்லை.

மினிட் புத்தகம் சமர்ப்பிக்கப்படுவதுமில்லை. இது நிர்வாகத்தி ற்கு வாய்ப்பாக அமைகிறது. கூட்டு ஒப்பந்தம் குறைபாடு களை கொண்டிருக்கிறது. கூட்டு ஒப்பந்தத்தை எதிர்க்க கூட்டு முயற்சி தேவை.

கே. சந்திரசேகரன் -

இணைப்பாளர், பிரிடோ.

மக்களுக்கு தெளிவில்லாத கூட்டு ஒப்பந்தம் அவர்களை சுரண்டி சுகங்காணுகிறது.

10ஃ- விலை உயர்த்தி மறுபக்கத்தில் 21 கிலோ அதிக கொழுந்தை உயர்த்தியுள்ளனர்.

மக்களின் உடல் உழைப்பு சுரண்டப்படுகிறது. வைத்தியசாலை செலவு அதிகரிக்கப்படுகிறது.

முண்டியடித்துக் கொண்டு கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள தவறிவிட்டனர்.

வரட்சிக் காலத்தில் பெயருக்காக வரண்ட தேயிலை நிலங்களில் அதிகம் கொழுந்து பறிக்க முனைவதால் இளம் பெண் தொழிலாளர்கள் தமது அழகை இழந்து வருகின்றனர்.

தொழிலாளர்களுக்குரிய நல்ல விடயங்களை கொள்ளாத இவ்வொப்பந்தம் மொத்தத்தில் அடிமைச் சுரண்டலுக்கு அத்திவாரமிடுகிறது எனலாம். கைச்சாத்திட்டவர்கள் தமது கடமையை மறந்து விட்டார்கள் எனத் தெரிவித்தார்.


வி. அந்தனிஸ்

- ஊவா தொழிலாளர் அபிவிருத்தி நிலைய இணைப்பாளர்

கருத்துத் தெரிவிக்கையில்,

கூட்டு ஒப்பந்தம் ஒரு தொழில் ஒப்பந்தம். சமூக நிலை சார்ந்து செயற்பட வேண்டிய தொழிற்சங்கங்கள் சுயநலத்துடன் செயற்படுகின்றன.

தொழில் பாதுகாப்பு இதில் உறுதிப்படுத்தப்படவில்லை. தகவலின்றி பேசுகின்ற தொழிற்சங்க பிரதிநிதிகள் தம்மை மீளாய்வு செய்ய வேண்டும்.

ஓ. ஏ. இராமையா, இணைப்பாளர், எஸ். முருகையா ஆகியோர் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு விடயங்களை தெளிவுபடுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கந்தையா வேலாயுதம்

நன்றி-தினகரன் வாரமஞ்சரி

Sunday, February 7, 2010

nghJeyd; fUjp midtUk; xd;wpiztJ fhyj;jpd; NjitahFk;

ele;J Kbe;j [dhjpgjpj; Nju;jypy; MSk; If;fpa kf;fs; Rje;jpu Kd;dzp Ntl;ghsu; [dhjpgjp k`pe;j uh[gf;\ tuyhW fhzhj ngUk;ghd;ik thf;Ffshy; ntw;wp ngw;Ws;shu;. ngUk;ghd;ik rpq;fs thf;fhsu;fspd; ghupa gq;Fk; rpWghd;ik thf;fhsu;fshd tl fpof;F jkpo;> K];ypk; kw;Wk; kiyaf thf;fhsu;fspd; ngUk;gq;Fk; ,tupd; ntw;wpf;F NgUjtpahf mike;jpUe;jJ.

,jid %bkiwf;f rpy gpw;Nghf;Fr; rf;jpfs; Kidg;NghL nray;gLtij mtjhdpf;f $bajhf cs;sJ. mj;Jld; ghuhSkd;wj;jpd; MAs; epiwTngWk; jWthapy; cs;sijAk; ftdj;jpy; nfhs;Sjy; mtrpakhFk;.

,t;thwhd ntw;wp Kfj;JlNd ghuhSkd;w Nju;jiy re;jpf;f If;fpa kf;fs; Rje;jpu Kd;dzp jahuhfp tUfpd;wJ. kf;fs; nry;thf;Fs;s re;ju;g;gj;jpy; ghuhSkd;w Nju;jiy re;jpj;jhy; ngUk;ghd;ikahd Mrdq;fis ifg;gw;w KbAk; vd;w ek;gpf;ifapUf;fpwJ. ,e;epiyapy; kiyaf thf;fhsu;fs; jq;fspd; gpujpepjpj;Jtj;ij epiyepWj;jpf;nfhs;s rpe;jpf;f Ntz;ba jUzk; ,JthFk;.

ele;J Kbe;j [dhjpgjp Nju;jypd; NghJ kiyafj;jpy; ngUk;ghd;ik thf;fhsu;fs; ele;J nfhz;l Kiw tpj;jpahrkhf mike;jpUe;jJ. ,e;epiy ePbf;Fkhdhy; jq;fspd; gpujpepjpj;Jtj;ij ,og;gNjhL jq;fspd; mbg;gil Njitfisf; $l epiwNtw;wpf;nfhs;s Kbahj epiyf;F js;sg;gLthu;fs;.

Njrpa murpaypy; mjpfhuj;Jf;fhd Nghl;bfs; Kd; vg;NghJkpy;yhj tifapy; cf;fpukile;J tUk; mNjNtisapy; gpuhe;jpa uPjpahfTk; jq;fspd; ,Ug;ig jf;f itj;Jf;nfhs;s mjPj gpuaj;jdq;fs; Nkw;nfhs;sg;gl;L tUtijAk; fhzf; $bajhf ,Uf;fpd;wJ. mNj Nghd;wnjhU epiyikjhd; kiyafj;jpYk;> murpay;> njhopw;rq;f Nghl;bfs; $u;ikaile;J tUtNjhL td;Kiwf; fyhrhuKk; jiyJ}f;Ffpd;w Nghf;F fhzg;gLfpd;wJ.

,j;jifa R+o;epiyia jkf;F rhjfkhfg; gad;gLj;jpf;nfhs;s Kaw;rpf;Fk; rpy gpw;Nghf;F re;ju;g;gthj rf;jpfs; ghuhSkd;w nghJj; Nju;jiy ,yf;F itj;J kiyafj;jpy; gpuNtrpf;f Kaw;rp nra;fpd;wd. ,t;thW tUNthUf;F ve;j murpay; r%f gpd;dzpAk; ,y;yhJ tpsk;gu mwpKfj;Jld; murpay; gpuNtrk; nra;a Kidfpd;wd. ,tu;fs; ahu;? ,tu;fspd; gpd; Gynkd;d? vjw;fhf murpay; gpu Ntrk;? Nghd;w Nfs;tpfs; kiyaf kf;fs; kj;jpapy; vohky; ,y;iy.

,tu;fspd; grg;G> ghrhq;F thu;j;ij [hyq;fspy; kaq;fp jkJ kf;fs; jq;fspd; vjpu;fhy murpaiy njhiyj;J murpay; mehijfshf khwptplf;$lhJ. vdNt ,d;iwa epiyapy; ajhu;j;j murpaiy Gupe;Jnfhz;L mjw;F ,irthf ehKk; ekJ murpay; fha; efu;j;jiy Kd;itf;f Ntz;Lk;.

epiwNtw;W mjpfhuKila [dhjpgjp ,d;Dk; 7 Mz;Lfs; mjpfhuj;jpy; ,Uf;f Nghfpd;whu;. mtiu mjpfhuj;jpy; ,Ue;J mfw;w ,d;iwa murpay; ahg;gpd;gb vtuhYk; KbahJ. ,tupd; Ml;rpapd; fPo; ehKk; ekJ gpujpepjpj;Jtj;ij cWjpnra;tjd; Clhf ekJ Njitfis epiwNtw;wpf;nfhs;s KbAk;. ,J Nghd;wnjhU neUf;fbahd fhyfl;lk; 1999 Mk; Mz;il ghu;f;fyhk;. mg;NghJ ekJ kf;fspd; ed;ik fUjp kiwe;j mikr;rUk; ,. njh. fh. jiytUkhd nrskpa %u;j;jp njhz;lkhd; kiyafj;jpd; kf;fspd; eyd; rhu;e;J nray;gLk; murpay; fl;rpfs;> njhopw;rq;fq;fs;> mur rhu;gw;w mikg;Gf;fs;> rptpy; r%f mikg;Gfs; kw;Wk; Gj;jp[Ptpfis cs;slf;fpa ,e;jpa tk;rhtsp kf;fs; Nguzp vd;W ekf;fhf $l;Lj; jiyikapy; Xu; mikg;G cUthf;fg;gl;lJ. xU khfhz rigj; Nju;jiyAk; mf;fhy fl;lj;jpy; re;jpj;Njhk;. mg;NghJ fzprkhd Mrdq;fisAk; ngwf;$bajhf ,Ue;jJ. mNj Nghd;wnjhU epiyikjhd; ,g;NghJ Njhd;wpAs;sJ.

vdNt murhq;fj;Jld; ,ize;Js;s murhq;fj;Jld; Kuz;glhky; ,ize;J nray;gLk; ,af;fq;fs; ahTk; xU nghJ Ntiyj;jpl;lj;jpd; fPo; ,iza Ntz;Lk;. jkJ nrhe;j tpUg;G ntWg;GfSf;F mg;ghy; r%f eyd; rhu;e;j tplaq;fSf;F Kd;Dupik toq;fp gpsTgl;bUf;Fk; ehk; midtUk; Xu; $l;likg;ghf ,ize;J tpl;Lf;nfhLg;Gld; nray;gl;lhy; vkJ gpujpepjpj;Jtj;ij fhf;f KbAk;. ,y;iyNay; MSf;F nfhQ;r thf;Ffis gq;F Nghl;Lf;nfhz;L ekJ gpujpepjpj;Jtj;ij ,of;f NeupLk;.

,d;iwa R+o;epiyapy; muRld; ,Ug;gtu;fSk; mjd; Ner rf;jpfSk; Kjw;fl;lkhf nghJ Ntiyj;jpl;lj;jpd; fPo; xd;wpiza Ntz;Lk;. mjd; gpd; gue;Jgl;l kf;fs; ,af;fq;fis xd;wpizj;J $l;likg;nghd;iw cUthf;f KbAk;. mg;NghJjhd; ,d;W eilngWk; td;Kiw murpay; fyhrhuj;ij khw;w KbAk;. gopthq;Fk; murpaiy ,y;yhky; xopj;J fdthd; murpaiyAk; ey;yhl;rpiaAk; Vw;gLj;j KbAk;. ,y;iyNay; murpay; cupik ,oe;J mtjpg;gl NeupLk;. xd;Wgl;lhy; cz;L tho;T vd;w KJnkhopf;Nfw;g nrhe;j murpay; eyd;fis xJf;fp nghJeyd; fUjp midtUk; xd;wpiztJ fhyj;jpd; NjitahFk;.

gp. Nkhfd; Rg;gpukzpak;

`l;ld;

மலையக பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்வது எப்படி?

‘நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ’ என்ற பாரதியின் வரிகள் தான் மலையக அரசியல் தொழிற்சங்க நிலைப்பாடுகளை நினைக்கும் போது ஞாபகத்திற்கு வருகிறது.

போராடி பெற்றுக் கொண்ட வாக்குரிமையை கூறுபோட்டு பகிர்ந்து கொள்கின்ற பரிதாப நிலையையும், இருக்கும் பிரதிநிதித்துவங்களையும் இழந்து விடுகின்ற நிலையை எண்ணும் போது இந்த சரிவிலிருந்து விடுபடுவதற்கு உடனடியான மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய தன் அவசியத்தை உணர்த்துகிறது.
நூற்றாண்டு காலமாக உழைப்பை மட்டுமே ஒப்புவித்த மலையக தொழிலாளர் சமூகம் இலங்கை பிரித்தானியரிடமிருந்து பெற்ற உரிமை தமக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் 1948 ஆம் ஆண்டின் பிரஜாவுரிமைச் சட்டமும் 1949ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தேர்தல் சட்டமும் இவர்களுக்கு பிரஜாவுரிமையும், வாக்குரிமை மறுப்பையுமே தந்த வரலாற்றை எம்மால் மறந்துவிட முடியாது.

அண்மைக்கால இந்திய வம்சாவளியினர் என்ற முத்திரைக் குத்தலோடு நாடற்றவர்களாக இருந்த மலையகத்தில் காணப்பட்ட ஒற்றுமையின் வெளிப்பாடு, உரிமைப் போராட்டத்தின் உத்வேகம், தொழிற்சங்கத்தின் எழுச்சிப்போராட்டம், போராட்டச் சிந்தனைகள் அனைத்தும் மலையகத்தில் வாக்குரிமை கிடைத்த பின்னர் இந்த சமூகம் வந்த வழியை மறந்து நிற்பது வேதனை தரும் விடயமாகும்.

இன்று நாம் பெற்றுள்ள வாக்குரிமைக்கு பின்னால் பெரியதொரு பின்னணியிருப்பது அதற்காக இயற்றப்பட்ட சட்டங்களின் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது.

(1) 1949இல் 3ஆம் இலக்கத்தில் கொண்டு வரப்பட்ட இந்திய பாகிஸ்தானின் வதிவிட (பிராஜவுரிமை) சட்டம்
(2) 1964 ஆம் ஆண்டு கொண்டுவரப் பட்ட (03.10.1964) ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தம்.
(3) 1974 ஆம் ஆண்டு ஜனவரி 27இல் கொண்டுவரப்பட்ட ஸ்ரீமா - இந்திரா ஒப்பந்தம்.
(4) 1987 ஆம் ஆண்டு இலக்கம் 5இல் கொண்டுவரப்பட்ட நாடற்றவர் களுக்கு பிரஜாவுரிமை வழங்கும் சட்டம்.
(5) 1988 ஆம் ஆண்டின் இல. 39 இன் படி கொண்டுவரப்பட்ட நாடற்றவர் களுக்கு பிரஜாவுரி¨மை வழங்கும் (விசேட சரத்துக்கள்) சட்டம்.
(6) இல. 35 இன் படி 2008 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இலங்கை வம்சாவளியினருக்கு பிரஜாவுரிமை வழங்கும் சட்டம்

என இந்தச் சட்டங்களின் பின்னணியில் எத்தனை போராட்டங்கள் இடம்பெற்றன என்பதை காலம்தான் பதில் சொல்லும். இத்தனை சட்டங்கள் வந்து நாம் வாக்களிக்கின்ற தகைமை பெற்றாலும் அடிப்படையில் இன்னும் இரண்டாந்தர பிரஜைகளாகவே கணிக்கப்படும் நிலைதான் காணப்படுகிறது.

ஆங்கிலேயர் காலத்திலும் அதற்குப் பின்னரும் 1930 களில் இருந்து இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்து வரும் தொழிலாளர்கள் தேசிய அரசியலமைப்பில் பொருத்தமான பிரதிநிதித்துவத்தை இன்னும் பெற்றுக்கொள்ளா திருக்கின்றனர் என்றே கூறவேண்டும்.

குறிப்பாக 1931இல் இடம்பெற்ற முதல் கிராம சபைத் தேர்தலில் மலையக சமூகம் அனுமதிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டமை ஒரு வரலாற்று நிகழ்வாகும். சுதந்திரத்திற்கு பின்னர் நடந்த முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் 95 பேர் இருந்த இடத்தில் 08 பிரதிநிதிகள் மட்டுமே இந்திய வம்சாவளி மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டனர். வாக்குரிமை பறிக்கப்பட்டதன் பின்னர் 1952 இலிருந்து 1977 வரை பிரதிநிதிகளை தெரிவு செய்யும் உரிமை எமக்கில்லாமல் போனது.

1977இற்குப் பின்னர் படிப்படியாக தேசிய அரசியலுக்குள் பிரவேசிக்க முடிந்ததெனினும் இந்திய வம்சாவளி மக்களின் சனத்தொகைக்கு ஏற்ப பிரதிநிதிகளை தெரிவு செய்ய முடியாமல் போய்விட்டது. மலையக மக்கள் முன்னணி கூறியுள்ளது போல 16 பிரதிநிதிகள் இருக்க வேண்டிய இடத்தில் அதில் பத்தாக குறைந்து அதிலும் ஒருவர் வேறொரு சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு நிலைமையைத்தான் மலையக அரசியல் நிலைப்பாட்டில் காண்கின்றோம்.

மலையகத்தை பொறுத்தவரையின் அரசியலும் தொழிற் சங்கமும் இணைந்தே காணப்படுவதால் இலக்கை எட்டமுடியாமல் இருப்பதை உணரக்கூடியதாக இருக்கிறது. அரசியல் தொழிற்சங்கப் போட்டா போட்டிகள் காரணமாக அறுபதுக்கும் மேற்பட்ட அரசியல் தொழிற்சங்கங்களையும் பத்துக்கு மேற்பட்ட அரசியல் கட்சிகளையும் வைத்துக்கொண்டு சிதறுண்டு தேசிய கட்சிகளிலே இன்னமும் தங்கியிருக்க வேண்டிய பரிதாப நிலை தொடர்கிறது.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பெற்றுக்கொண்ட உரிமையை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு மலையக இந்திய வம்சாவளி மக்கள் ஒவ்வொருவருக்கும் உரித்துடையதாக இருக்கிறது. ஆகவே மலையக பிரதிநிதிகள் முழுமையாக தேசியக் கட்சிகளில் பிணைத்துக் கொண்டோ அல்லது தனித்தனி குழுமங்களாக பிரிந்து நின்றோ போட்டியிட வேண்டும் என்பதற்காக தனிக் குழுக்களாக செயற்படுவார்களேயானால் இருக்கும் தமிழ் பிரதிநிதித்துவங்களையும் எதிர்காலங்களில் இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
ஒன்பது தொகுதிகளை கொண்டிருக்கும் பதுளை மாவட்டத்தில் 2008 ஆம் ஆண்டில் வாக்காளர் பதிவின் அடிப்படையில் 5,74,814 வாக்காளர்கள் இருக்கின்றனர். இவர்களில் கணிசமான தொகையினர் இந்திய வம்சாவளியினராவர். மொத்த எண்ணிக்கையில் 16.44 வீதத்தினர் தேசிய அடையாள அட்டையைக் கூட பெற்றுக்கொள்ளாமல் இருக்கின்றனர். பதுளை மாவட்ட வாக்குகளை தொகுதிவாரியாக பார்க்கும் போது மஹியங்கனை 85,562, வியலுவ 48,231, பசறை 60,002, பதுளை 51,468, ஹாலி-எல 63,124, ஊவா பரணகம 59,472, வெளிமடை 68,937, பண்டாரவளை 77,312, அப்புத்தளை 60,706 ஆகும். இந்நிலையில் பெருந்தோட்ட வாக்காளர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறு பயன்படுத்தப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதனூடே பசறை, நமுனுகுல பகுதிக்கு அண்மித்த தென்னக்கும்புர, கந்தவேரன போன்ற தோட்டங்கள் மொனராகலை மாவட்டத்திற்குள் உள்ளடங்குவதும் குறிப்பிடத்தக்கது. நுவரெலியா மாவட்டத்தில் 4,57,137 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருப்பதோடு இவர்களிலும் பெரும்பான்மையினர் இந்திய வம்சாவளி தமிழ் மக்களே. நுவரெலியா மாவட்ட தேர்தல் வாக்காளர் பதிவின் அடிப்படையில் நுவரெலியா மஸ்கெலியா 2,47,069, கொத்மலை 70,730, ஹங்குராங்கெத்த 65,969, வலப்பனை 73,369 என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ஆகியன ஆளுங் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மலையக மக்கள் முன்னணியின் இன்னொரு பிரிவினர் மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட தயாராகி வருவதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஆகியவற்றுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் என்பன ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலின் போது இ. தொ. காவிலிருந்து வெளியேறிய எம். சச்சிதானந்தன் ஐக்கிய தேசியக் கட்சியிலும், சுகாதார பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஷ் ஆளுங்கட்சியிலும் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. நுவரெலியா மாவட்டத்திலும் இவ்வாறான நிலையே காணப்படுகின் றது. எது எப்படியிருப்பினும் அகலமாக காலை வைக்க நினைக்காமல் ஆழமாக வைத்தால் மட்டுமே மலையகம் இருக்கும் பிரதிநிதித்துவத்தையாவது பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதே மலையக மக்களின் எதிர்பார்ப்பாகும்.

பசறையூர் க. வேலாயுதம்