Saturday, October 17, 2015

பண்டாரவளையில் பாரிய மண்சரிவு : 240 பேர் இடம்பெயர்வு

பதுளை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக  பல இடங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பண்டாரவளை, தியகலை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக 240 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் தியகலை பகுதியில் குடியிருப்புக்களை அண்மித்த பகுதிகளில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அப் பகுதியில் வசித்து வந்த 62 குடும்பங்களைச் சேர்ந்த  240 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

No comments: