Friday, September 19, 2008

பெருந்தோட்டத்துறைச் சிறுவர் தொழிலாளர்கள் பற்றிய கண்ணோட்டம்

- ஷோபனாதேவி இராஜேந்திரன்-

பெருந்தோட்டத்துறைச் சிறுவர்களின் உரிமை மீறல்கள் காலனித்துவ காலம் தொட்டே இடம்பெற்று வருகின்றன. 19 ஆம் நூற்றாண்டிலேயே பிரித்தானியர்கள் சிறுவர்களைத் தொழிலில் அமர்த்துவதில் முனைப்புக் கொண்டிருந்தனர். இக்காலகட்டத்தில் தென்னிந்தியாவிலிருந்து சராசரியாக 8,000 ஆயிரம் சிறுவர்கள் தொழிலாளர்களாக பெருந்தோட்டத் துறையில் பணிபுரிவதற்காக கொண்டுவரப்பட்டனர். (சுயுஊர்நுடு, 1989) பெருந்தோட்டங்களில் தேயிலைப் பயிர்ச் செய்கை அறிமுகமானதையடுத்து பெருந்தொகையான சிறுவர் ஊழியம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பெண்களையும், சிறுவர்களையும் மலிவான கூலியில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு காணப்பட்டமையினால் இவர்களை தோட்டத் தொழிலில் அமர்த்துவதில் தோட்ட உரிமையாளர்கள் பெரிதும் ஆர்வம் காட்டிவந்தனர். அதிலும் குறிப்பாக பெண்தொழிலாளர்களைக் காட்டிலும் சிறுவர் தொழிலாளர்களை மலிவான கூலியில் பெறமுடியும் என்பதை அறிந்து தோட்ட உரிமையாளர்கள் தோட்டத்துறையில் தொழிலாளர்களை தொழிலுக்கு சேர்க்கின்ற போது குடும்ப இடப்பெயர்வினை பெரிதும் ஊக்கப்படுத்தி வந்தனர். 1922 ஆம் ஆண்டில் ஆண்,பெண் குறைந்தபட்ச கூலி வீதத்தினை விட சிறுவர்களின் குறைந்தபட்ச கூலியானது குறைவாகவே காணப்பட்டது ( அட்டவணை 01) எனினும், 1939 ஆம் ஆண்டில் இலங்கை கட்டாயக் கல்வியை
அறிமுகப்படுத்தியமையும் சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டதையடுத்துத் தோட்டத்துறைச் சிறுவர்களைத் தொழிலில் சேர அனுமதிக்கவில்லை. இதனையடுத்து இச்சிறுவர்கள் தோட்டத்துக்கு வெளியில் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அட்டவணை- 01குறைந்தபட்ச கூலி வீதம்

நாட்சம்பளம்
ஆண் 38
ண் 28
சிறுவர் 19
மூலம் - மத்திய வங்கி - 1960

இக்காலகட்டத்தில் பெருந்தோட்டத்துறைச் சிறுவர்களின் கல்வி தொடர்பான எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. 1970 ஆம் ஆண்டு வரை தேசிய ரீதியிலான கல்விக் கொள்கைகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பெருந்தோட்டத்துறைப் பாடசாலைகளைச் சென்றடைந்தன (வுர்யுNயுசுயுதுஇ 2004) ஆனால், இலங்கை சுதந்திரம் அடைய முன்பே 1945 ஆம் ஆண்டில் தேசிய கல்வி முறை கொண்டுவரப்பட்டது. எனினும், பெருந்தோட்டத்துறை கல்விமுறை தேசியக் கல்வி முறையோடு ஒன்றிணைக்கப்படவில்லை. 1970 ஆம் ஆண்டுவரை பெருந்தோட்டத்துறை கல்வியானது மிகவும் தரம் குறைவாகவே காணப்பட்டது. எனவே, இவ்வகையில் நோக்கும் போது குறைந்த கல்வி நிலையும் அவர்களின் குடும்ப வறுமையுமே சிறுவர் உழைப்பிற்கான பிரதான காரணியாக அமைகின்றது எனலாம்.
ஒரு சமூகத்தின் கல்வி நிலையே அச்சமூகத்தின் மேம்பாட்டிற்கு வழி வகுக்கின்றது. சிறுவர் உழைப்பானது கற்றலுக்கான வாய்ப்பினை மறுக்கின்றது. கல்விக்கான சிறுவர் உரிமை மீறலானது அவர்களின் அறிவாற்றல், படைப்பாற்றல் போன்றவற்றை வளரவிடாது தடுப்பதுடன் மாறாக, ஓர் ஆரோக்கியமற்ற சந்ததியினரை உருவாக்குகின்றது. இவ்வகையில் பெருந்தோட்டத்துறை சமூகத்தின் கல்வி பின்னடைவு அச்சமூக முன்னேற்றத்திற்கு இடையூறாக இருப்பதுடன் குறிப்பாக அச்சிறுவர்களின் உரிமை மீறலுக்கும் வழிவகுக்கின்றது.
எனவே, இவ் ஆய்வுக் கட்டுரையானது பெருந்தோட்டத்துறை சார்ந்த சிறுவர்களின் உழைப்பினைப் பகுப்பாய்வு செய்வதுடன் அவற்றினைத் தவிர்ப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ் ஆய்வில் மத்திய மாகாணத்தில் கண்டி, நுவரெலியா ஆகிய இரு மாவட்டங்களிலுள்ள ஐந்து வீதமான தோட்டங்கள் (பத்து தோட்டங்கள்) எழுமாறாக தெரிவு செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், தெரிவு செய்யப்பட்ட 10 தோட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 0614 வயதிற்குட்பட்ட 225 பிள்ளைகளிடமிருந்து தகவல்கள் பெறப்பட்டன. இவர்களில் 100 பேர் ஆண்பிள்ளைகள். ஏனைய 125 பேரும் பெண் பிள்ளைகளாவர்.தோட்டங்களில் தொழில் புரியும் சிறுவர்களைப் பகுதிநேர தொழில் புரியும் சிறுவர்கள், முழுநேர தொழில் புரியும் சிறுவர்கள் என இருவகையில் உள்ளடக்கலாம். ஆனால், இக்கட்டுரை முழுநேர தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுவர்களிலேயே கவனம் செலுத்துகின்றது.
(தொடரும்..)
தினக்குரல்

அரச, தனியார் வங்கிகளில் தமிழ் ஊழியர்கள் இல்லை

இரத்தினபுரி மாவட்ட அரச மற்றும் தனியார் வங்கிகளில் தமிழ் ஊழியர்கள் நியமிக்கப்படாமையினால் அம் மாவட்ட தமிழ் பேசும் மக்கள் மக்கள் மொழிப் பிரச்சினை காரணமாக தமது தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாது சிங்களம், ஆங்கிலம் தெரிந்த ஒருவரை நாட வேண்டியுள்ளது. இதன்போது குறிப்பிட்ட நபர் தரகுப்பணம் எதிர்பார்ப்பதாகவும் இதனால் தமது வைப்பில் குறிப்பிட்ட பணம் தரகுப் பணத்திற்காக இழக்கப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சில தோட்டத் தொழிலாளர்கள் தமது சேவைக்கால பணம் ஊ.சே.நி., ஊ.ந.நி. போன்ற இன்னோரன்ன கொடுப்பனவுகளை காசோலையினூடாக பெறும் பட்சத்தில் அதனை மாற்றுவதற்கு தரகர்களை நாட வேண்டியுள்ளது. இதன் போது தரகர்களால் பணம் தரகர்களால் கையாளப்பட்டு வருகின்றன. இதனையறியாத தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர். ஓய்வூதியம் பெற்றும் தமது கடைசிக் காலத்தில் தமது உழைப்பில் பெற்ற பணத்தை முழுமையாக அனுபவிக்க முடியாதுள்ளதாக தோட்டத் தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இம் மாவட்டத்தில் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பான் ஆசியா வங்கி, செலான் வங்கி, அட்டன் நஷனல் வங்கி, சப்ரகமுவ அபிவிருத்தி வங்கி, பிராக்தன வங்கி, சனச வங்கி உள்ளிட்ட பல வங்கிகளின் தலைமைக் காரியாலயங்களும் பிராந்திய காரியாலயங்களும் இருந்தபோதும் தமிழ் மொழி தெரிந்த ஊழியர்கள் இல்லை. எனவே தமிழ் தெரிந்த ஊழியர்களை நியமிக்குமாறு அப்பிரதேச மக்கள் கோருகின்றனர்

தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை முற்பணமாக 5,000 - இ.தொ.கா

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு பண்டிகை முற்பணமாக 5,000 ரூபா வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் முன்வரவேண்டுமென்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்வதால் தினசரியாக வாழ்க்கைச் செலவுக்கு போராடிக் கொண்டிருக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு இத்தொகை போதுமானதல்ல. எவ்வாறாயினும் சகல மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் குறிப்பிடப்பட்ட தொகை வழங்கப்பட வேண்டும். இதுவரை 3,000 மாத்திரம் வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.