Saturday, October 17, 2015

மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் பெய்துவரும் பலத்த மழையின் காரணமாக 7 மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்ட்ட ஆராய்ச்சி நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார குறிப்பிடுகின்றார்.
மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்றிரவு 8 மணிவரை அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை தவிர சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பரவலாக மழை பெய்துவருகின்றமையால் மண்மேடுகள் மற்றும் உயர் நிலப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் என்றும் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் கேட்டுள்ளார்.
-News1st-

No comments: