Tuesday, October 15, 2013

சிறுத்தையின் தாக்குதலுக்கு உள்ளான பெண் தொழிலாளி வைத்தியசாலையில்

ஹட்டன் வட்டவளை பொலிஸ் பிரிவுட்பட்ட குயில்வத்தை கீழ் பிரிவு தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த கணகேஸ்வரி என்ற பெண் தொழிலாளி  சிறுத்தையின் தாக்குதலுக்கு உள்ளான இவர் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்கா நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 
இந்த பெண்மணி மூன்று பிள்ளைகளின் தாயுமாவார். இச் சம்பவம் நேற்றுக்காலை(15-10-2013) காலை 9.00 மணிக்கு நிகழ்ந்துள்ளது. 
இது தவிர இரவு நேரங்களில் இப்பிரதேச தோட்டப்பகுதிகளுக்குள் செல்லும் சிறுத்தை அங்குள்ள நாய்களை பிடித்துச் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.