Monday, December 14, 2009

திகனயில் அதிர்ச்சி தரும் ஒரு கிராமம் - கசிப்பு காய்ச்சுவது இங்கே குடிசைத் கைத்தொழில்

காலை மாலை என்ற வேறுபாடு இல்லாமல் மக்கள் வருவதும், போவதுமாக களைகட்டி காட்சியளிக்கும் திகன அலுத்வத்த 8ம் இலக்க கிராமம்

வெற்றுக் கேன்களுடனும், சில ஆயிரங்கள் பணத்துடனும் இக் கிராமத்துக்கு வரும் ஆண்கள்( சில சமயம் பெண்களும்) சுமக்க முடியாத பாரத்துடன் சில சமயம் கொஞ்சம் தள்ளாட்டத்துடன.; திருப்பிச் செல்வது வழக்கம். தினமும் பல ஆயிரக்கணக்கில் இங்கே வியாபாரம் நடக்கும்.

ஆம் இங்கே வியாபாரம் செய்யப்படுவது கசிப்பு. அதுவும் இந்தக் கிராமத்தில் சொந்த உற்பத்தி. நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்க சோறு போடுவது இந்த வருமானத்தான். கசிப்பு காய்ச்சுவதும், விற்பதும்தான் நூற்றுக்கணக்கான ஆண்களுக்கும், பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் பிரதான தொழில்

இந்தத் தொழில் சட்ட விரோதம் என்பது எங்களுக்குத் தெரியும் இருந்தும் வாழ்வாதாரத்திற்கு வேறு வழியில்லை. இத் தொழிலை நாங்கள் ஒன்றும் இலாபத்திற்காக செய்யவில்லை. இதில் இலாபமும் கிடைப்பதில்லை. தினம் தினம் வயிற்றுபாட்டுக்காக இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எமக்கிருக்கிறது என மனம் திறந்து சொல்கிறார்கள் இக் கிராம மக்கள்.

இவ்வாறான தொழல் செய்து பிழைக்கும் இவர்கள் பிழைக்க வக்கற்ற மக்கள் கூட்டம் அல்ல. ஒரு காலத்தில் வீடு, நிலம், தொழில் என வசதியாக வாழ்ந்தவர்கள்தான்.

இலங்கைக்கு (மின்சார) ஒளி கொடுப்பதற்காக உருவான விக்டோரியா நீர்த்தேக்கத் திட்டமே இவர்களின் வாழ்வு இருளாகக் காரணமாகியிருக்கிறது.

1982இல் விக்டோரியா நீர்த்தேக்கம் இவர்கள் வாழந்த காணிகளையும், வீடுகளையும் விழுங்கி விட திகன அலுத்வத்த பகுதியில் இவர்களுக்கென 20 பேர்ச்சஸ் காணியும் சில ஆயிரம் ரூபா பணமும் வழங்கப்பட்டது.

வுழங்கப்பட்ட காணியோ சுண்ணாம்புக் கற்பாறைகள் நிறைந்தது. வீடு கட்டவோ விவசாயம் செய்யவோ பொருத்தமற்றது. நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட காலத்தில் சிலருக்கு தொழில் கிடைத்தது. அதனால் இம்மக்களுக்கு மோசமான காணியின் நிலை பெரிதாகத் தெரியவில்லை.

அதன்பின் தொழில் வாய்ப்பு இல்லை. வாழ்க்கைக்கான வசதியில்லை. மலசலகூடம், குடிநீர்வசதி இல்லாத இம் மக்களின் வாழ்க்கை

அதேபோல இலங்iகின் பல பாகங்களுக்கும் மின்சார ஒளி கொடுக்கும் பொருட்டு இடம்பெயர்ந்த இந்த மக்களின் குடியிருப்புக்கள் இன்றுவரை மின் ஒளி காணாது இருண்டு கிடக்கின்றன.

இங்கிருந்து பெரும் பாடுபட்டு வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்ற சில விரல் விட் எண்ணக்கூடிய சில குடும்பங்கள் வீடுகளை அமைத்துக் கொண்டுள்ளன. தினக்கூலி வேலைகளை நம்பி வாழ்க்கை நடத்தும் ஏனையவர்களின் வீடுகள் குடிசைகளாகவே காட்சி தருகின்றன.

பிழைக்க வேறு வழியில்லை. கசிப்புக் காய்ச்சும் தொழில் இங்கு தொடங்கப்பட்து. ந்ல வரவேற்பு இருந்தது. வியாபாரம் ஓகோ என நடக்கும். தினமும் ஆயிரக் கணக்கில் பணம் குவியும். ஆனால் பணம் கிடைத்ததென்ன எல்லாம் பொலிசாருக்ம் தண்டம் செலுத்துவதற்குமே சரியாக இருக்கும் என்கிறார் இப்பகுதி பெண் ஒருவர்.

வாரத்திற்கு ஒருமுறையாவது பொலிசார் இக் கிராமத்தை சுற்றி வளைத்து விடுவார்கள். கசிப்பு விற்ற பணம் தவிர வீட்டில் இருக்கும் தங்க நகைகளை விற்று கூட பொலிசாருக்கு தண்டப்பணம் கட்டிவிடுவோம் என்று கூறும் குடும்பஸ்த்தர் ஒருவர் தான் கட்டுக்கட்டாக வைத்திருக்கும் பணம் கட்டியதற்கான ரசீதுகளை காட்டுக்கின்றார். இதன் உண்மைத் தன்மையை அவர் வாழும் மண்ணால் கட்டப்பட்ட குடிசைவீடு நியாயப்படுத்துகிறது.

இக் கிராமத்தில் சுமார் 10 இடங்களில் கசிப்பு காய்ச்சப்பட்டது. இதில் நேரடியாக சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் வேலை வாய்ப்புக்களை பெற்றிருந்தனர்.

இங்குள்ளவர்களில் அநேகமானோர் கல்வியறிவு பெறதாவர்களாகவே உள்ளனர். எங்கள் பிள்ளைகளையாவது பாடசாலைக்கு அனுப்பலாம் என்றால் இங்கே பாடசாலையில்லை. திகன, இரஜவெல பகுதி பாடசாலைகளில் எங்கள் பிள்ளைகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பாடசாலை அனுமதியின் போது வீட்டுப்பத்திரம், மின்சார கட்டணப்பட்டியல் என்பன கேட்கப்படுகிறது. எம்மிடம் அவை எதுவும் இல்லை என தம் பிள்ளைகளின் கனவு ஈடேறாத வேதனையை பெற்றோர்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.


வேண்டாம் இந்த அவலம்

கசிப்பு காய்ச்சி சுமார் ஒரு தசாப்தகாலமாக வாழ்க்கை நடத்திய இந்த மக்கள் இன்று இந்த தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள் பொலிசாருக்கு பயந்து ஒளிந்து நாங்கள் அலுத்து விட்டோம். பணம் சம்பாதித்தாலும் அதைத் தண்டப்பணமாக செலுத்திவிட்டு வாழ்வதில் என்ன பயன்? ஆதனால் கசிப்பு காய்ச்சுவதை ஒட்டு மொத்தமாக நிறுத்தி விட்டோம் என்கின்றனர்.

ஆனால் இத்தனைக் காலம் இம் மக்களிடம் பணப்புழக்கம் இருந்தது. இப்போது இங்கே வறுமை தாண்டவமாடுகிறது.

எங்களுக்கு மாற்றுத் தொழில் ஏதுமில்லை. தொழில் தொடங்கவும் ஏதும் வசதியில்லை. எங்களது வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. நாம் என்ன தொழில் செய்வது? எப்படி குடும்பத்தைக் காப்பாற்றுவது? ஏன இங்குள்ள குடுமபத் தலைவர்கள் மனங்கலங்கி நிற்கின்றனர்.

ஏமக்கு ஏதாவது தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கமோ அல்லது அமைச்சர்களோ, அரச சார்பற்ற நிறுவனங்கயோ முன்வர வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். தவறு செய்யும் மக்களை தட்டிக் கேட்கவும், தண்டிக்கவும் எம் சட்டம் தன் பணியை செய்தது. இன்று தவறான தொழிலை கைவிட்டு நிற்கும் இம் மக்களுக்கு வாழ்வாதார வசதிகளை செய்து கொடுத்து கைதூக்கி விட வேண்டிய சமூகப் பணியை பொறுப்புடையவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

ஆர். நவராஜா

நன்றி- மலையக பார்வை

பாரிய மண்சரிவினால் மக்கள் இடம்பெயர்வு

பதுளை நமுனுகுல பிரதேசம் நல்லமலை கிராம சேவகர் பிரிவு, ஸ்பிரிங்வெலி தோட்டத்தில் ஏறட்ட பாரிய மண்சரிவு காரணமாக அப் பகுதியில் சுமார் 35 தோட்டக் குடியிருப்புக்களில் வாழ்ந்த 150 பேர் இடம்பெயர்ந்து நல்லமலை வித்தியாலயத்தில் தங்கியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட இணைப்பாளர் நிமல் பியசிறி பண்டார தெரிவித்துள்ளார்

கடந்த சில தினங்களாக இப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாகவே இம்மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. என்றாலும் இரண்டு தோட்டக் குடியிருப்புக்கள் முழுமையாக சேதமடைந்திருப்பதாகவும், ஏனையவற்றில் வெடிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இம்மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உடனடி நிவாரணத்திற்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் இம் மணிசரிவு சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் அரை கிலோ மீட்டர் தூரம் வரை இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்

Sunday, December 13, 2009

சர்வதேச தேயிலை தின மாநாடு டிசம்பர் 15 ஆம் திகதி


சர்வதேச தேயிலை தின மாநாடு எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி அட்டன் கிறிஸ்தவ தொழிலாளர் ஒத்துழைப்பு பிரதான மண்டபத்தில் காலை 09.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

முதலாவது சர்வதேச தேயிலை தின மாநாடு 2005ஆம் ஆண்டு புது டில்லியில் நடைபெற்றது. அன்றையத் தினம் சர்வதேச தேயிலை தினப் பிரகடனமும் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தேயிலை உற்பத்தி செய்யும் எல்லா நாடுகளும் மேற்படி தினத்தில் தேயிலை உற்பத்தியில் ஈடுபடுகின்ற தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் பரப்புரை செய்து வருகின்றன.

தொழிலாளர்களின் வேதன உயர்வு, வீட்டுரிமை, கல்வி, நிலவுரிமை, சுகாதாரம், கலாசாரம், பெண்கள் தலைமைத்துவம், பால்நிலை சமத்துவம் குறித்து பேசப்பட்டு வருகின்றன. பெருந்தோட்ட சமூக மாமன்றத்தின் ஏற்பாட்டில் இம்முறை அட்டனில் நடைபெறும் இம்மாநாட்டில் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சும் ஐக்கிய நாட்டுச் சபையின் அபிவிருத்தி திட்ட நிறுவனமும் இணைந்து தயாரித்த பெருந்தோட்ட சமூக பத்தாண்டு அபிவிருத்தி திட்டத்தை பூரணமாக அமுல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது.

சர்வதேச தேயிலை தின ஊர்வலமும் பொதுக் கூட்டமும் எதிர்வரும் 20 ஆம் திகதி மாத்தளை நகரிலும் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான பிரதான மண்டபத்திலும் நடைபெறும் என்று பெருந்தோட்ட சமூக மாமன்றத்தின் இணைப்பாளர் எஸ். முருகையா தெரிவித்தார்

மது பாவனையை கட்டுப்படுத்த மாற்று சிந்தனைகள் அவசியம்
முற்றாக ஒழிக்க முடியாது. ஆனால் கட்டுப்படுத்தலாம் - புத்திரசிகாமணி

மலையகப் பகுதிகளில் குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளிலேயே மதுபாவனை அதிகரித்து காணப்படுகிறது. மலையக நகர்ப்புறங்களில் மதுபானச் சாலைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. மலையக நகர்ப்புற மதுபானச் சாலைகளுக்கு முன்னால் ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். இது ஒரு புறமிருக்க தோட்டப் பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனைகள் லயன் குடியிருப்பு தொகுதிக்கு ஒன்றாக காணப்படுகிறது. இந்த எண்ணிக்கை தீபாவளி மற்றும் புதுவருட கொண்டாட்ட காலங்களில் பல மடங்காக அதிகரித்து விடுகிறது.

மலையக சமூகத்தின் மத்தியில் மாற்றம் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படும் இவ்வேளையில் மது பாவனையை முற்றாக ஒழிக்க முடியாவிடினும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மலையக அரசியல் தலை¨மைகள், புத்தி ஜீவிகள், படித்த இளைஞர்கள், நலன்புரி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. கடந்த தீபாவளி நாட்களில் பிரிடோ உட்பட சில அமைப்புகள் மது இல்லா தீபாவளியை கொண்டாடுவோம் எனும் தொனிப்பொருளில் மது ஒழிப்பு பிரசாரத்தை மேற்கொண்டது.

‘மத்தட தித்த’ மது ஒழிப்புத் திட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தி வருகிறது. பெருநாள் மற்றும் விசேட நாட்களில் குறிப்பாக போயா தினங்களில் மது விற்பதற்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. பெருநாள் கொண்டாட்டங்களின் போதும் உற்சவ காலங்களின்போதும் மது விற்பதற்கு தடை விதிக்கப்படுகின்ற போதிலும் பாவனையாளர்கள் மதுவிற்கு பதிலாக கசிப்பு மற்றும் போதைவஸ்துக்களை பாவிப்பதாக கூறப்படுகிறது. அல்லது சட்ட விரோதமாக விற்கப்படும் மது, கசிப்பு வகைகளை பல மடங்கு விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர்.
பெருந்தோட்டங்களைப் பொறுத்தவரையில் தொழிலாளர்கள் அதிகளவில் மதுவை பாவிக்கின்றனர். பெண்கள் உட்பட குடும்பத்திலுள்ள அனைவரும் மதுவை பயன்படுத்தி வருவது ஒன்றும் புதிய விடயமல்ல. மதுபோதையால் ஏற்படும் விளைவுகள் பாரதூரமானவையாக இருக்கிறது. சண்டை சச்சரவுகள் ஒருபுறமிருக்க குடும்பங்கள் பிரிந்து அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. நன்றாக கற்கக்கூடிய மாணவர்கள் தொடர்ந்து தமது கல்வியைத் தொடர்வதற்கான சூழல்கள் இல்லாத நிலையில் கல்வியை இடைநிறுத்த நேரிடுகிறது. இந்நிலை தொடர்ந்தால் சமூகச் சீர்கேடுகள் நிறைந்த சமூகமாக மாறலாம். சில தோட்டப் பகுதி ஆசிரியர்களே மது விற்பனையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. திருமணம், மரணம், சமயச் சடங்குகளின்போது மது அதிகளவில் பயன்படுத்தப்படுவதை சமூக நலன்புரி அமைப்புகள் சுட்டிக்காட்டியிருந்தன.

கிராமப்புறங்களை அண்டிய தோட்டத் தொழிலாளர்கள் அதிகளவில் கசிப்பை பயன்படுத்துவதாக அறியப்படுகிறது. களுத்துறைப்பகுதியில் தோட்டமொன்றில் பெருநாள் கொண்டாட்டத்தின் போது கசிப்பு விற்பனையில் ஈடுபட்டவர்களுக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் லயன்குடியிருப்புகள் அடித்து நெறுக்கப்பட்டன. அவர்களின் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டதுடன் தொழிலாளர்கள் நான்கு நாட்களுக்கு மேலாக அச்சத்தின் காரணமாக மறைவிடங்களில இருந்ததை தோட்ட மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். தோட்டப் பகுதிகளில் இன்று வரையிலும் சில சில சம்பவங்கள் மது பாவனையால் நடைபெறுவது வழக்கமாகி விட்டது. நண்பர்களாக இருந்தவர்கள் விரோதிகளாக மாற்றிவிடும் வல்லமை இந்த மது விற்கு இருக்கிறது.
மரண வீடொன்றில் எட்டாம் நாள் சமயக் கிரியைகள் நடந்து முடிந்த பின்னர் வந்திருந்தவர்களுக்கு மதிய உணவு பரிமாறப்பட்டது. அந்த நிகழ்வுக்கு வந்திருந்த ஆண்கள் இன்னொரு அறைக்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கு மதுசாரத்தை பகிர்ந்து கொண்டிருந்த இளைஞனைப் பார்த்து இதுவும் ஒரு சம்பிரதாயமா எனக் கேட்டபோது, இல்லை அங்கிள் இவர்கள் அனைவரும் என் அப்பாவின் நண்பர்கள். அப்பா உயிருடன் இருக்கும்போது ஒன்றாக இருந்து மது அருந்துவது வழக்கம். அதனையே நானும் செய்கிறேன். வந்தவர்களை வரவேற்று உபசரிக்காவிட்டால் அது அப்பாவின் பெயருக்கே களங்கமாகிப்போய்விடும் என்றார். இந்த நிலையில் இன்னும் மாற்றம் ஏற்படவில்லை.

தொழிலாளர்கள் நாள் முழுதும் கடுமையாக உழைத்து மாலை வேளையில் தினமும் மதுபானத்தை அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகளை இன்னும் உணராதவர்களாவே இருக்கின்றனர். போதைக்கு அடிமையான பலர் நோயாளர்களாக மாறி அவர்களின் வாழ்வதற்கான காலம் குறைந்து மரணத்தில் முடிந்து விடுகிறது.

பெருந்தோட்டப் பகுதிகளில் மதுபாவனையை முற்றாக ஒழிக்க முடியுமா?

மதுபாவனையை தடுப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் மற்றும் அதற்கான மாற்று தீர்வு குறித்து நீதி சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணியிடம் கேட்டோம்.
உலகில் அதிகம் மது அருந்தும் நாடுகள் வரிசையில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மேலைத் தேய நாடுகளைப் பொறுத்தவரையில் மதுவை பயன்படுத்துவது ஒரு கௌரவமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் போது மது பெருமளவில் பயன்படுத்தப்பட்டாலும் ஒரு அளவுக்கு மேல் குடித்து வீதிகளில் கிடப்பதெல்லாம் கிடையாது.

மது ஒழிப்பு என பேசுவதற்கு முன் மலையகத்தில் குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளில் இருப்பவர்கள் அனைவரும் குடிகாரர்கள் என்று அவமானப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்ட பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்களை நாம் அதிகளவில் காணக்கூடியதாக இருக்கிறது. ஒரு விதத்தில் பார்க்கும்போது குறைந்த எண்ணிக்கையானோரே குடீக்கிறார்கள்.

அவர்களுடைய வருமானம் போதாமல் இருப்பதன் காரணமாக விரக்தியில் சிலர் மதுவை நாடலாம். அதிக வேலைப்பளு ஓய்வின்றிய உழைப்பால் களைப்படைவருக்கு மது எல்லாவற்றையும் மறக்கச் செய்து விடுவதாக எண்ணலாம். மது அருந்திய பின்னர் அவர்கள் உட்கொள்ளும் உணவு போதாமையால் அவர்கள் நோய்வாய்ப்படுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. எது எப்படி இருப்பினும் மது அருந்துவதால் ஏற்படும் தீமையை உணர்ந்து படிப்படியாக குறைக்க வேண்டும்.மது அருந்துவதை முற்றாக ஒழிக்க முடியாது. எனினும் அதனை கட்டுப்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல் குடிப்பவர்கள் மதுவால் ஏற்படும் தீமைகளை அவர்களே உணர்ந்து திருந்த வேண்டும் புகை பிடிப்பதை கட்டுப்படுத்த முடியாதிருந்தது. ஆனால் தற்போது பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் தாங்களாகவே நிறுத்திக் கொண்டனர். அது போலத்தான் இந்த மது பாவனையையும் கட்டுப்படுத்த முடியும்.

பி. வீரசிங்கம்
தினகரன் வாரமஞ்சரி

Saturday, December 12, 2009

கொழுந்தின் அளவு அதிகரி;க்கப்பட்டுள்ளதால் முழுமையான சம்பளத்தை பெற முடியாத நிலை

முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே அண்மையில் செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக அண்மைக்காலமாக பல்வேறுபட்ட சர்ச்சைகளும் பிரச்சினைகளும் எழுந்த வண்ணமாகவே உள்ளன. புல துறையினரும் பல்வேறு கருத்துக் கணிப்புக்களையும் வெளியிடுகின்றனர்.

தங்களது துறைகளையும் தங்களது சுய இலாபங்களையும் கருத்திற்கொண்டு பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை வெளியிடும்போது அவை பல விதத்திலும் திரிபடைந்து தொழிலாளர்களை சென்றடைகின்றன. இவ்வாறான நிலை தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை காட்டிக் கொடுப்புச் செய்துள்ளன என்ற கருத்து ஆணித்தரமாக வேரூண்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அவர்களது நடவடிக்கைகள் மூலம் காணக்கூடியதாக உள்ளது.

இன்று இக் கூட்டு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதும், இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுவதும் தொழிற்சங்கங்களினாலேயே ஆகும். மேலும் தொழிலாளர்கள் வென்றெடுத்துள்ள தொழில்சார் உரிமைகளும் தொழிற்சங்கங்களினாலேயே பெறப்பட்டன என்பதையும் நாம் இங்கு மறக்கக்கூடாது.

அண்மையில் செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விதிகளுக்கமைய தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை என்று பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அது மாத்திரமன்றி ஒரு நாளுக்குரிய 30 ரூபாவை இழக்கும் போது நாட் சம்பளத்தை முழுமையாக பெற முடியாத நிலை ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பெரும்பாலும் பெண் தொழிலாளர்களே பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகி;ன்றது. இது தொடர்பாக சற்று விரிவாக நோக்குவோமாயின்

கூட்டு ஒப்பந்தத்தின் பின் அநேகமான தோட்டங்களில் தொழிலாளர்கள் எடுக்கும் கொழுந்தின் அளவை நிர்வாகங்கள் தங்களுக்கேற்ற வகையில் மாற்றியுள்ளன. ஊதாரணமாக கூட்டு ஒப்பந்தத்தின்று முன்னர் 16 கிலோ கொழுந்து எடுக்கப்பட்டு வந்த தோட்டங்களில் தற்கோது 18 முதல் 20 கிலோ வரை கொழுந்து எடுக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

(உதாரணமாக பதுளை, நிவ்பர்க், குயின்ஸ்டவுன், மஸ்கெலியா, தலவாக்கொல்லை, ஆகிய தோட்டப்பகுதிகளில் 18 கிலோ கொழுந்து எடுக்க வேண்டும். அதேநேரம் தெனியாய போன்ற பகுதிகளில் 23 கிலோ வரையில் ஒரு நாளைக்கு கொழுந்து எடுக்க சொல்கின்றார்கள். ஏன்பதை அறிய முடிகின்றது) அவ்வாறு அவர்கள் கூறும் அளவை எடுக்காவிட்டால் சம்பளத்தில் 30 ரூபா குறைக்கப்படும் எனத் தொழிலாளர்களுக்கு கூறப்பட்டுள்ளது.

எனவே தொழிலாளர்கள் குறிப்பிட்ட நிர்வாகம் கூறும் அளவில் கொழுந்தை எடுக்கின்றார்கள். எதிர்த்துப் பேசும் தொழிலாளர்களிடம் உங்கள் சங்கத்தினர் கூட் ஒப்பந்தத்தில் இந்த நிபந்தனைகளுக்கு இணங்கியே கையொப்பம் இட்டுள்ளனர் என்று கூறுகின்றார்கள். இவ்வாறான நிலையால் தொழிலாளர்கள் விரக்தியடைந்துள்ளனர். இன்னும் சில தோட்டங்களில் ஒரு நாள் சம்பளமான 405 ரூபாவிற்கு வேலை செய்துள்ள தொழிலாளர்களிடம் நிர்வாகம் சற்று பின் தங்கி இருக்கின்றது. முழு சம்பளத்தையும் கொடுக்கக்கூடிய அளவில் தோட்டம் இயங்கவில்லை. எனவே உங்களது சம்பளத்திலிருந்து ஒரு பகுதி குறைக்கப்பட்டு பின்னர் அச்சம்பளம் எதிர்வரும் காலங்களில் சம்பளத்தோடு இணைக்கப்படும் எனக் கூறுவதாகத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஊதாரணமாக பதுளையில் பல தோட்டங்களில் தொழிலாளாகள் 405 ரூபாவிற்கு வேலை செய்கின்ற போதும் 385 ரூபாவையே வழங்குவதாகவும் மீதிச் சம்பளத்தைக் கேட்கும் போது அடுத்த மாதச் சம்பளத்துடன் சேர்த்துத் தருகிறோம் முற்கொடுப்பனவுடன் தருகின்றோம் என்று கூறுகின்றனர்.

இவ்வாறான பிரச்சினைகளை தொழிற்சங்கத்திடம் யாரும் தெரிவிப்பதில்லை. இது நிர்வாகத்திற்கு சாதகமாக இருக்கிறது. தொழிலாளர்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது என்பதை கண்டும் காணாதது போல அவர்கள் இருக்கின்றார்கள். இவ்வாறான நிலைக்கு தொழிற்சங்கமே காரணம் என்று தொழிலாளர்கள் எண்ணுகின்றார்கள்.

எனவே தொழிலாளர்களின் இந் நிலைப்பாட்டை மாற்றும் வகையிவல் தொழிலாளர்களுக் சிறந்ததொரு தெளிவுப்படுத்துதல் அவசியமாகும். தொழிலாளர்கள் இவ்வாறு தனித்துப் போகும் தன்மையும் தொழிற்சங்கங்களுடன் முரண்பட்டிருக்கும் நிலையும் மாற்றமடைய வேண்டும். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம். ஆனால் இன்று மூன்று நான்கு பிரிவுகளாக தொழிலாளர் சமூகம் பிரிந்துள்ளது. இந் நிலையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டியது அவசியமாகும்.

ஆனந்தி

Friday, December 11, 2009

தொழிலாளர் உழைப்பில் மின் உற்பத்தி
லிந்துலை மெராயா நகரத்திலிருந்து 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது எல்ஜின் தோட்டத்தின் மிக உயரமான இரு மலைத் தொடரையும் கிழக்குப்புற எல்லையாக அம்பேவலை காடும் அமைந்துள்ளது. எல்ஜின் நீர்வீழ்ச்சியை கடந்து பாயும் எல்ஜின் ஓயா எல்ஜின் தோட்டத்திற்கு ஊடாகவே பாய்கின்றது. இத்தோட்டமானது வெயில், மழைக் காலங்களில் புவியியல் அமைவிடம் காரணமாக இருள் மயமானதாக காட்சியளிக்கின்றது.

குண்டும் குழியுமாகக் காணப்படும் பாதைகளுடன் உட்கட்டமைப்பு வசதிகள் எதுவுமற்ற நிலையில் சுமார் 200 குடும்பங்களைக் கொண்ட எல்ஜின் தோட்டத்தில் மின்சார வசதிகள் இல்லை. கிட்டத்தட்ட ஐந்து தலைமுறையாக இங்கு வாழ்ந்து வரும் மக்கள் இருளில் மூழ்கியே வாழ்ந்து வருகின்றனர்.

எந்தவிதமான பயனும் பெறாத நிலையில் பல அரசியல்வாதிகளிடம் தீர்வு பெற்றுத் தர வேண்டியும் பயன் கிட்டவில்லை. இனியும் மின்சாரம் கிடைக்காது என்ற விரக்தியில் இம்மக்கள் வாழ்ந்து வந்தனர்.

2005ஆம் ஆண்டு வரை தொடர்ந்த இந்நிலை அந்த ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கையில் நடுத்தர சிறிய கிராமிய மின் உற்பத்தி நிலைய நிர்மாணப் பணிகளைச் செயற்படுத்தும் தனியார் நிறுவனம் தொடர்பாக மக்கள் கேள்விப்பட்டனர். அவர்களுடன் தொடர்பு கொண்ட மக்கள், எல்ஜின் மின்சார கூட்டுறவு சங்கம் ஒன்றை நிறுவி பணிகளை ஆரம்பித்தனர்.

எல்ஜின் ஓயாவிற்கு குறுக்கே அணைக்கட்டினை அமைப்பதும் இதிலிருந்து நீர்படுகையினூடாக (றுயவநச டீநன) நீரைச் செலுத்தி மிகுதி தூரத்திற்கு குழாய்களில் நீரைச் செலுத்தி எல்ஜின் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறிய மின் உற்பத்தி நிலையத்திற்கு நீரை கொண்டு வந்து சேர்ப்பது இத்திட்டத்தின் இலக்காக அமைந்தது.

இதற்கு தொழில்நுட்ப ஆலோசனைகளையும் திட்ட முன்மொழிவையும் தனியார் நிறுவனமொன்றிடம் பெற்று சிரமதானம் மூலம் 70மூ வீதமான பணிகளை தற்போது மக்கள் நிறைவேற்றியுள்ளனர். இச்சிறிய மின் உற்பத்தி நிலையத்திலிருந்து 25 ஆறு மின்சாரம் பெற எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மின்சாரம் எல்ஜின் தோட்ட 125 வீடுகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட ஏற்பாடாகியுள்ளது. இத்திட்ட பணிகள் கடந்த 4 வருடங்களில் மக்களின் உழைப்பும் பெருந்தொகையான பணமும் இதற்காக செலவிடப்பட்டுள்ளது. 300 தொழிலாளர்கள் 500 நாட்கள் இதற்காக சிரமதான பணிகளில் ஈடுபட்டனர். இதுவரை நிறைவேற்றப்பட்ட பணிகளுக்காக கிட்டதட்ட 45 லட்சம் பணத்தொகை செலவிடப்பட்டது

நன்றி - வீரகேசரி

Tuesday, December 1, 2009

அதிர்ச்சி தரும் ஆய்வுத் தகவல்கள்
வேதனை தரும் மலையகத்தின் நிலை


மலையகப் பாடசாலைகளில் மாணவர் தொகை வெகுவாக வீழ்ச்சி கண்டு வருகிறது. இன்னும் பத்தாண்டு காலப்பகுதியில் மாணவர் தொகை 40,000 ஆல் வீழ்ச்சியடையும் எனும் அதிர்ச்சித் தகவலை கல்வித் திணைக்களங்களின் மூலமாக அறிய முடிகின்றது.


மலையகம் கல்வியில் வீறுகொண்டு எழப் புறப்பட்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் மாணவர்கள் தொகை இவ்வாறு வீழ்ச்சியடைவதற்கான காரணம் என்ன? என ஆராய்ந்து பார்த்தபோது கிடைத்தத் தகவல்கள் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாகவுள்ளன.

பிறப்பு வீதத்தில் ஏற்பட்டுள்ள துரித சரிவுகள், மாணவர்களின் இடைவிலகல் என்பன இதற்கான காரணங்களாக முன் வைக்கப்படுகின்றன. மலையகம் என்னதான் கல்வியில் கரிசனையோடு புறப்பட்டாலும் மறுபுறம் வறுமை எனும் கொடூரப்பிடி அவர்களை முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.

அதன் விளைவு மலையக பெருந்தோட்டப்புற பகுதிகளிலுள்ள சிறுவர்கள் கொழும்பு மற்றும் வெளியிடங்களில் வேலைக்கு அமர்த்தும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றது.

பாடசாலைகளிலிருந்து இடைவிலகும் மாணவர்களில் பெருந்தொகையானோர் தோட்டப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களாக இருக்கின்றனர்.

தோட்டப்புறங்களில் கல்விக்கான வளங்கள் இல்லாமை, பொருளாதார நெருக்கடி, பெற்றோரின் அறியாமை என்பன மலையக சிறுவர்களின் கல்விக்கு முட்டுக்கமடடையிடுவதுடன் சிறுவர் தொழிலுக்கு அடித்தளமாக அமைந்து விடுகிறது.

இதனால் மலையக கல்வி மாத்திரமல்லாது பெருமளவான பிள்ளைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். இந்த மோசமான நிலையிலிருந்து மலையகத்தை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பும் அவசியமும் மலையகத்தைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் உண்டு.

முதலில் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் குறித்து உணர்வது அவசியமாகிறது. பதினான்கு வயதுக்குக் குறைவான எவரையும் வேலைக்கு அமர்த்துவது குற்றம் என்ற சட்டம் நடைமுறையில் இருக்கின்றது. இவ்வாறு இருந்த போதிலும் பெருந்தோட்டப் புறங்களிலிருந்து 10,12 வயது சிறுவர்களையே வேலைக்கு வெளியிடங்களுக்கு அனுப்பும் கொடுமைகளை காணமுடிகிறது.

அது மாத்திரமல்லாது அவ்வாறு வேலைக்கு அமர்த்தப்படும் சிறுவர்கள் பல்வேறு வழிகளிலும் துன்புறுத்தப்படுகின்றனர்.

பிள்ளைகள் கல்வி கற்கும் வயதில் அவர்களது கல்வி மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை படிக்க வைக்க வேண்டும். கல்வியறிவு மூலம் பிள்ளைகள் உலகத்தை அறிந்து கொள்வதுன் நற்பிரஜைகளாகவும் உருவாகின்றனர்.

அத்துடன் கல்வித் தரத்தை அடைவதன் மூலம் வேலை வாய்ப்பும் கிடைக்கின்றது. தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளும் தொழிலாளியாக வேலை செய்யும் நிலைமையும் இதனால் மாற்றம் ஏற்படுகின்றது.

பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து அவதானத்துடனும் அக்கறையுடனும் செயல்பட வேண்டும்.

உங்களது பிள்ளைகள் தொழில் செய்யும் இடங்களில் அவர்களுக்கு வயதுக்கு மீறிய வேலை வழங்கப்படுகின்றது. போதிய ஓய்வு கொடுப்பதில்லை. சில இடங்களில் முறையாக உணவு வழங்கப்படுவதில்லை. அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியமும் கொடுக்கப்படுவதில்லை. அதிலும் ஒரு பகுதியை தரகர்களே பெற்றுக் கொள்கின்றனர்.

இவ்வாறான நிலைமைகளால் சிறுவர்களின் உடலும், உளமும் பாதிப்புக்குள்ளாகிறது. ஆத்துடன் எதிர்காலத்தில் அவர்களும் வன்முறையாளர்களாகவோ தவறான நடத்தையுடையவர்களாகவோ மாறிவிடும் அபாயம் உண்டு.

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றிச் சிந்தித்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும். ஏனைய இனத்தவர்கள் போல உங்கள் வாழ்வில் உயர்வு ஏற்பட வேண்டுமாயின் கல்வியில் கூடிய அக்கறை செலுத்த வேண்டும்.

இதேவேளை மதுபாவனையை மட்டுப்படுத்தி பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் கூடியளவு அக்கறை செலுத்த வேண்டும்.

மலையகத்தில் அவதானிக்கக்கூடிய வேதனை தரும் விடயமொன்றையும் இங்கு சுட்டிக்கர்ட வேண்டியுள்ளது. அதாவது சட்ட விரோத கசிப்பு காய்ச்சல் நடவடிக்கைகளிலும் சில சிறுவர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்பதாகும்.

பாடசாலை செல்லும் மாணவர்கள் சட்ட விரோத போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர் என்பது கசப்பான உண்மை. இவ்வாறு சிறுவர்களின் எதிர்காலம் பாழடைவதற்கு பெற்றோர்களும் உடந்தையாக இருக்கின்றனர். இதனால் இது தொடர்பாக எம்மால் எவ்வித நவடிக்கைகளையும் எடுக்க முடியாதுள்ளது என சமூக முக்கியஸ்தர்கள் கையை விரிக்கின்றனர்.

பெற்றோர்கள் தரப்பிலும் நியாயமில்லாமல் இல்லை. அவர்களின் அறியாமையும் வறுமை நிலையும் இந்த நிலைமைக்கு காரணம் என்று கூற முடியும். எது எப்படியோ மலையகத்தின் நிலை உயர இவ்வாறான முட்டுக் கட்டைகளை களைய அனைவரும் முன்வர வேண்டியது அவசியம்

சிவா ஸ்ரீதரராவ்
இறக்குவானை