Monday, February 8, 2016

இந்­திய வம்­சா­வளி மக்கள் "தனித்­து­வ­மான இன­மாக" ஏற்றுக் கொள்­ளப்­பட வேண்டும்

புதிய அர­சி­ய­ல­மைப்பில் இந்­திய வம்­சா­வளி மக்கள் "தனித்­து­வ­மான இன­மாக" ஏற்றுக் கொள்­ளப்­பட வேண்டும் இதற்கு இந்­திய அர­சாங்கம் முழு­மை­யான ஆத­ரவை வழங்க வேண்டும் என இந்­திய வெளியு­றவுத் துறை அமைச்சர் சுஷ்­மா ­சு­வ­ரா­ஜிடம் வலி­யு­றுத்­தி­ய­தாக இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் தலைவர் முத்து சிவ­லிங்கம் தெரி­வித்தார். "தோட்டம்" என்ற சொல் கிரா­ம­மாக மாற்­றப்­பட வேண்டும் என்­ப­தையும் வலி­யு­றுத்­தி­ய­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.
இலங்­கைக்கு இரண்டு நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு வருகை தந்­தி­ருந்த வெளியு­றவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவ­ரா­ஜை கடந்த சனிக்­கி­ழமை இ.தொ.கா. தூதுக் குழு­வி­னர் சந்­தித்து பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தினர். இது தொடர்­பாக மேலும் கூறு­கையில் ,
இந்­திய வெளியு­றவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை கடந்த சனிக்­கி­ழமை கொழும்பில் மரி­யா­தையின் நிமித்தம் சந்­தித்தோம். இச் சந்­திப்பில் இ.தொ.கா. செய­லாளர் ஆறு­முகம் தொண்­டமான் உட்­பட முக்­கி­யஸ்­தர்கள் கலந்து கொண்­டனர்.

இதன்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக எமது தரப்பு யோச­னை­களை முன்­வைத்தோம். அதா­வது இலங்­கையில் பல தசாப்­தங்­க­ளாக வாழும் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்­திற்கு உயிர் கொடுத்த இந்­திய வம்­சா­வளி மக்­கள் தனித்­து­வ­மான இன­மாக ஏற்றுக் கொள்­ளப்­பட வேண்டும். அதனை புதிய சட்­ட­மாக உள்­ளீர்க்­கப்­பட வேண்டும். இதற்­காக இந்­திய அர­சாங்கம் தமது ஆத­ரவை வழங்க வேண்டும் என்ற எமது பக்க வேண்­டு­கோளை முன்­வைத்தோம்.
அத்­தோடு "தோட்டம்" என்ற சொல் மாற்­றப்­பட்டு மலை­யக பெருந்­தோட்ட தொழி­லா­ளர்கள் வாழும் இடங்கள் "கிராமம்" என அழைக்­கப்­பட வேண்டும். அதற்­காக அர­சாங்கம் விசேட வர்த்­த­மானி அறி­விப்பு வெளியிட வேண்டும். இதற்கு இந்­தியா ஆத­ரவை வழங்க வேண்டும் என்ற விட­யத்­தையும் முன்­வைத்தோம்.

தற்­போது தேயிலை தொழில்­துறை, இறப்பர் தொழில்­துறை என்பன அழிந்து கொண்­டி­ருக்­கின்­றன. ஆனால் மலை­யக மக்கள் தமது குடி­யி­ருப்­புக்­களை விட தயா­ராக இல்லை. இந்­திய அரசின் உத­வியும் எமது காலத்தில் உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட 4000 வீட்டுத் திட்டம் தொடர்­பிலும் இப் பேச்­சுக்­களின் போது கலந்­து­ரையாடப்­பட்­டது.

அத்­தோடு இந்­தி­யாவின் புல­மைப்­ப­ரி­சில்கள் திட்­டத்தில் அதி­க­ளவு இந்­திய வம்­சா­வளி மக்­களின் பிள்­ளை­க­ளுக்கே அவை வழங்­கப்­பட வேண்டும் என்ற விட­யத்­தையும் எடுத்­து­ரைத்தோம். இந்­திய வம்­சா­வளி மக்கள் தனித்­து­வ­மான இன­மாக ஏற்றுக் கொள்­ளப்­பட வேண்­டி­ய­தோடு, கல்வி, சுகா­தாரம், அடிப்­படை வச­திகள் உட்­பட முக்­கிய விட­யங்­களில் எமது மக்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­பட வேண்டும்.

இவ்வாறான விடயங்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் முன்­வைத்து இதற்கு இந்­தியா ஆதரவை வழங்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தோம் என்ர்.

மலை­ய­கத்­த­வர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கும் விரைவில் நிரந்­தர தீர்வு

இன­வா­தத்தை வேர­றுத்து அமைதிச் சூழலை மேம்­ப­டுத்த நல்­லாட்சி அர­சாங்கம் முனைப்­புடன் செயற்­பட்டு வரு­கின்­றது. தூர­நோக்­குடன் செயற்­படும் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களால் நாட்டு மக்கள் பெரிதும் நன்­மை­ய­டைவர். மேலும் மலை­ய­கத்­த­வர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கும் விரைவில் நிரந்­தர தீர்வு கிடைக்கும் என்ற நம்­பிக்கை எமக்­குள்­ளது என்று ம.ம.மு  செய­லாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், நல்­லாட்­சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து ஒரு வருட காலமே நடந்து முடிந்­துள்­ளது. இந்­நி­லையில் இந்த அர­சாங்கம் தொடர்பில் பலரும் பல்­வேறு விமர்­ச­னங்­க­ளையும் முன்­வைத்து வரு­கின்­றனர். இத்­த­கைய விமர்­ச­னங்­களின் நம்­ப­கத்­தன்மை தொடர்பில் நாம் சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது. கடந்­த­கால அரசாங்கம் இனவாதத்திற்கு துணைபோன ஒரு அர­சாங்­க­மாக இருந்­தது. நாட்டு மக்கள் இன­வாத சிந்­த­னைக்குள் மூழ்­க­டிக்­கப்­பட்­டி­ருந்­தனர். தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்­ப­டு­வதை கூட அனு­ம­திக்­காத நிலையில் சில இனவாதிகள் உள்­ளனர். எனினும் புதிய அர­சாங்கம் தமிழ்மொழிக்கு உரிய அந்­தஸ்­தினை வழங்­கு­வ­தற்கு உறுதி பூண்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும்.

19 ஆவது திருத்­தத்தின் ஊடாக இலங்­கையில் தற்­போது பல்­வேறு ஆணைக்­கு­ழுக்கள் நிறு­வப்­பட்­டுள்­ளன. இத்­த­கைய நட­வ­டிக்­கைகள் நீண்­ட­கால இலக்­கி­னைக் கொண்­ட­ன­வாக விளங்­கு­கின்­றன. தூர­நோக்­குடன் நல்­லாட்சி அர­சாங்கம் செயற்­ப­டு­கின்­றது. இதனால் நாட்டு மக்கள் பெரிதும் நன்­மை­ய­டைவர். நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஊடாக நாட்டில் வாழும் அனைத்து இன மக்­களும் ஒரு தாயின் மக்­க­ளாக கை­கோர்க்கும் நிலை உரு­வாகும். மேலும் மலை­யக மக்கள் உள்­ளிட்ட சகல இன மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கும் நிரந்­தரத் தீர்வு கிடைக்கும் என்ற நம்­பிக்­கையும் எமக்கு நிறை­யவே உள்­ளது. விலை­வாசி குறைப்பு போன்ற நட­வ­டிக்­கைகள் உட­ன­டி­யாக பலனைத் தரும். எனினும் தூர­நோக்­குடன் செயற்­படும் போது அதன் பலன்கள் உட­ன­டி­யாக வெளித்­தெ­ரி­வ­தில்லை என்­ப­தையும் விளங்கிக் கொள்­ளுதல் வேண்டும். நீண்ட காலப்­போக்கில் நன்­மைகள் வெளித்­தெ­ரியும். நல்­லாட்சி அர­சாங்­கத்தை விமர்­சிப்­ப­வர்கள் அரசின் செயற்­பா­டுகள் தொடர்­பாக மிகவும் கூர்ந்து கவனம் செலுத்­துதல் வேண்டும். எழுந்­த­மா­ன­மாக கருத்­து­களை தெரி­விப்­பது பிழை­யா­ன­தாகும். நாட்டில் இப்­போது இன­வாத சூழல் மெது­மெ­து­வாக குறைந்து கொண்டு வரு­கின்­றது.

இன­வாதம் பேசும் ஒரு குழு­வினர் இன்னும் அர­சி­யலில் இருந்து வரு­கின்­றனர். இவர்கள் மக்­களின் நலன்­களை கிஞ்­சித்தும் சிந்­திக்­காத சுய­ந­ல­வா­தி­க­ளாவர். ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி அர­சி­யலில் ஆதிக்கம் செலுத்­து­வதன் ஊடாக தன் குடும்­பத்­தையும் தன்னைச் சார்ந்­தோ­ரையும் வாழ­வைப்­பதே இவர்­களின் நோக்­க­மாக உள்­ளது. இத்­த­கை­யோரின் வழியில் செல்­வ­தற்கு நாட்டு மக்கள் இனியும் தயா­ராக இல்லை. வர­லாறு கற்­றுத்­தந்த பாடங்­களை அடிப்­ப­டை­யாக கொண்டு இன­வா­திகள் தம்மை திருத்திக் கொள்­வது மிக மிக அவ­சி­ய­மாகும். நாட்டின் ஒரு­மைப்­பாட்­டிற்கு இன­வா­திகள் குந்­த­க­மாக செயற்­ப­டு­வ­தனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.