Friday, June 2, 2017

மண் சரிவு அபாயமுள்ள 1000 இடங்கள் பரிசோதனை


மண் சரிவு அபாயம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களை தொடர்பான பரிசோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு கூறியுள்ளது. 

பல மாவட்டங்களில் மண் சரிவு அபாயமுள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் மண் சரிவு ஆராய்ச்சி மற்றும் அபாய முகாமைத்துவ பணிப்பாளர் ஆர். எம்.எஸ். பண்டார கூறினார். 

பரிசோதனைக் குழு வரவில்லை எனக் கூறி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் இருந்து வௌியேறாதிருப்பதை தவிர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

எங்கள் மீதுதான் தவறு; கிரகங்களில் இல்லை!

இலங்கை பொருளாதார மற்றும் சமூக ரீதியில் மேலுமொரு துயரத்திற்கு முகம் கொடுத்துள்ளது. வரட்சி, வெள்ளம், மற்றும் மண்சரிவு ஆகிய அனர்த்தங்கள் சாதாரண அனர்த்தங்களாக மாறி வருகின்றன. இற்றைக்கு இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் மண்சரிவு என்பது அபூர்வமாக இடம்பெறும் விடயமாகும்.
தவறு கிரகங்களில் இல்லை. எமது கைகளில்தான் என்று மகாகவி வில்லியம் ஷேக்ஸ்பியர் கூறியுள்ளார். அதேபோல் இந்த அனர்த்தங்களின் போது மனித நடவடிக்கைகளும் இணைந்துள்ளன. இது இலங்கைக்கு மாத்திரம் பொதுவானது அல்ல. ஆபிரிக்கா போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளிலும் வெள்ளம், மண்சரிவு என்பவற்றிற்கு மனித நடவடிக்கைகள் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்று அறிக்கைகள் கூறுகின்றன.
மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் பூமியை சுரண்டும் இந்நடவடிக்கைகளுக்கு அரசியல்வாதிகளும் ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள்.
2010-2011 பாகிஸ்தானில் இட ம்பெற்ற வெள்ளம் தொடர்பாக ஸ்டேன்பேர்ட் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதில் பாகிஸ்தானில் வெள்ள அனர்த்தத்திற்கு அரசியல்வாதிகளின் தொடர்பு இருந்ததென்று வெளியாகியுள்ளது.
அவ்வறிக்கை கூறுவது போல் இயற்கை அழிவு பட்டியலுக்கு எல்லாவற்றையும் உள்ளடக்கி விட்டு அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பதா அல்லது அதற்கெதிரான மனித நடவடிக்கை குறித்து எதிர்ப்பு தெரிவிப்பதற்கு சிவில் சமூகத்தினருக்கு உரிமை உள்ளது. இயற்கை அனர்த்தங்கள் தொடர்பாக சிவில் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அவ்வறிக்கை அபிவிருத்தி அடைந்து வரும் அனைத்து நாடுகளிடமும் கேட்டுள்ளது. அத்துடன் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் சமனான தன்மையையும் தெளிவுபடுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் 2010, 2011 ஆம் ஆண்டுகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை இருபது இலட்சமாகும் இறந்தோரின் எண்ணிக்கை 1800 தொடக்கம் 2000 வரையாகும். 1.7 மில்லியன் வரையான வீடுகள் அழிக்கப்பட்டன. நாட்டின் மலைப் பிரதேசத்துக்கு கிடைத்த அதிக பருவப் பெயர்ச்சி மழையே இவ்வெள்ளத்திற்குக் காரணமானது.
கைப்பர் பிரதேசத்திற்கு ஜுலை 28 தொடக்கம் ஒகஸ்ட் 03 வரையான காலப் பகுதியில் பெறப்பட்ட அதிக மழையுடன் ஆரம்பித்த வெள்ளம் பல பிரதேசங்களின் அடிப்ப​ைட வசதிகளை மாத்திரமல்ல, சாதாரண மக்களின் வாழ்வாதார தொழில் மற்றும் சமூதாய வாழ்க்கையையும் முற்றாக அழித்தது. நிலைமையை சீராக்க பெருமளவு வளங்கள் தேவைப்பட்டன.
ஐக்கிய நாடுகள் சபையினால் ஆரம்பிக்கப்பட்ட நிவாரண நிதிக்கு 1.79 பில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்தது. அதற்கு அமெரிக்க 30 வீத நிதியையும் சவூதி அரேபியாக 1.5 வீதத்தையும் தனியார் மற்றும் அமைப்புகள் 17.5 வீதத்தையும் அந்நிதிக்கு அளித்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.
இலங்கை வெளிநாட்டு அமைச்சும் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள தேசிய அனர்த்த நிலைமைக்கு உதவி செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பல்வேறு நாடுகளிடம் இருந்தும் தற்போது உதவிகள் கிடைத்த வண்ணம் உள்ளன. வெளிநாட்டு உதவிகளை முகாமைத்துவம் செய்வதற்காக வேறான பிரிவொன்றும் அமைக்கப்பட்டு வெளிநாட்டவர்களுடன் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.
அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் என்பன முதலில் உதவி செய்ய முன்வந்த நாடுகளாகும்.
இதுவரை வெள்ளத்தாலும் மண்சரிவாலும் இறந்தோர் எண்ணிக்கை 193 ஆகும். அதேபோல் காயமடைந்தோர் ஏராளம். 114124 குடும்பங்களைச் சேர்ந்த 442299 பேர் அனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளனர். பாதிப்புகள் தொடர்பாக இறுதி மதிப்பீடு மில்லியன் அளவில் அல்ல பில்லியன் அளவில் கணக்கிட வேண்டி வரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அனர்த்த நிவாரண பணிகளுக்காக அரசாங்கம் 45 மில்லியன் ரூபாவை ஒதுக்கி இருந்தது. அதனை தற்போது 150 மில்லியனாக அதிகரித்துள்ளது. இறந்தவர்களின் வாழ்க்கையை பணத்தினால் மதிப்பீடு செய்ய முடியாது. ஆனாலும் இறந்த ஒருவருக்காக பத்து இலட்சம் ரூபாவை நட்டஈடாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அவ்வாறு செய்ய வேண்டும் என்றால் அதிகளவு நிதி தேவை. உடைந்த வீடுகள் அனைத்துக்கும் புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்க அரசாங்கம் உறுதிமொழி அமைத்துள்ளது. மேற்கு, தெற்கு, மத்திய சப்ரகமுவ, கிழக்கு போன்ற மாகாணங்களின் அடிப்படை வசதிகள் அழிந்து போயுள்ளன. மாத்தறை மாவட்டத்தில் மின்விநியோகத்தை புனரமைக்க வேண்டியுள்ளது. கிராமப்புற பாதைகள், பாலங்கள், மதகுகள் மற்றும் சிறிய நீர்ப்பாசன குளங்கள் பாதிப்படைந்துள்ளன.
பொருளாதார பாதிப்பு:
மக்களின் சுகாதார நடவடிக்கைகளுக்கான கிணறு, குளம் கழிப்பறை ஆகியனவும் நீரும் மிகவும் அசுத்தமான நிலமையில் உள்ளன. அப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் நேரத்தில் இடைநடுவில் தடைப்பட்டிருக்கும் தொழில்கள் மற்றும் வருமானத்துக்கான வழிகளை பழைய நிலைமைக்கு கொண்டுவர வேண்டியுள்ளது.
பொருளாதார பயிர்ச்செய்கைக்கான நிலங்கள் மண்சரிவுக்கு உட்பட்டுள்ளது. (09ம் பக்கம் பார்க்க)
கருணாரத்ன அமரதுங்க