Saturday, October 17, 2015

குளவி தாக்குதலில் 51 பேர் பாதிப்பு; 11 பேர் வைத்தியசாலையில்

புல்லாவ ஸ்டெலன்பேர்க் தோட்டம், வீடன் பிரிவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்களை குளவி தாக்கியதில் 51 பேர் பாதிப்புக்குள்ளாகினர். 

இவர்களில் பெண்கள் 50 பேரும், தோட்டக் கணக்குப்பிள்ளை ஒருவரும் அடங்குவர். 

இவர்களில் 11 பேர் பாரிய பாதிப்புக்குள்ளாகி 7 பேர் புஸ்ஸல்லாவ வகுகப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

3 பேர் கம்பளை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 

இச்சம்பவம் நேற்று (16-10-2015) பகல் வேலையில் இடம் பெற்றுள்ளது. 

குறித்த பெண்கள் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பிரதேசத்தில் கழுகு ஒன்று பாம்பு ஒன்றை இறைக்காக பெற்றுக் கொள்ள முயற்சித்த போது கழுகின் சிறகு அருகில் இருந்த குளவி கூட்டில் பட்டதால் குளவுக் கூடு கலைந்ததாக நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

No comments: