Sunday, April 12, 2009

இந்திய அரசு பெருந்தோட்டத்துறை மக்களுக்கு உதவி செய்யும்- இந்திய தூதுவர்

இலங்கையில் பெருந்தோட்டத்துறை மக்களை நான் உடன் பிறப்புக்களாகவும் பெருந்தோட்டத்துறையை நான் முக்கியத்துவமுடையதாகவும் கருதுகிறேன். இந்திய அரசு தொடர்ந்து தோட்டத்துறை மக்களுக்கு உதவி செய்யக் காத்துக் கிடக்கிறது இவ்வாறு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் இந்திய அரசு வழங்கிய 20 சிட்டி ரைட் பஸ் வண்டிகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார். இப் பஸ் போக்குவரத்து சேவை யாவும் மாணவ, மாணவியர் தமது கல்வி நடவடிக்கைகளை துரிதமாக நிறைவேற்றவும், இளைஞர், யுவதிகள் தமது கடமையை உரிய நேரத்தில் பூர்த்தி செய்து கொள்ள பேருதவியாக அமையும் என்றார். இந்த பஸ் வண்டிகளைத் தவிர எதிர்காலத்தில் மேலும் 30 பஸ் வண்டிகளை வழங்கி வைக்கவும் தொடர்ந்து இம் மக்களுக்கு உதவிகளை புரியவும் இந்திய அரசு தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.