Wednesday, September 30, 2009

மலையகத்தில் சிறுவர் தொழிலாளர் அதிகரிப்பு: குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
- கசுன்
இன்றைய சிறுவனே நாளை தலைவன் என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியை காட்டுகிறது. ஆனால் மலையகத்தை பொறுத்த மட்டில் இன்றைய சிறுவனே நாளைய வீட்டு வேலைக்காரன் என்ற நிலைமை தான் உள்ளது.
இவற்றிற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட போதிலும் மிக முக்கிய காரணமாக பொருளாதாரமே காணப்படுகின்றது. உலகம் இன்று பொருளாதாரத்திலும் நவீன தொழிநுட்பத்திலும் வெற்றிகொள்வது எப்படி என பேசிக்கொண்டிருக்கின்ற நேரத்தில் நாம் சிறுவர் தொழிலாளர்களை தடுப்பது எப்படி என பேசிக் கொண்டிருக்கின்றோம். இது எமது சமூகத்தின் 200 ஆண்டுகால வீழ்ச்சியையே எடுத்துக் காட்டுகிறது.
ஒரு சமூகத்திலுள்ள சிறுவர்கள் வேலை செய்வதன் மூலம் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வி உரிமை புறக்கணிக்கப்படு வதுடன் நாளைய சமூகத்தின் தலைமைத்துவமும் கேள்விக் குறியாகி விடுகின்றது. அதனுடன் அடிமைத்தனமும், ஒடுக்கப்படும் நிலையும் கூடவே பிறக்கின்றது. இதனால் எமது சமூகம் தலைகுனிந்து நிற்கின்றது.
அவ்வாறு இருந்திருந்தால் எமது மக்களுக்கு 200 வருடங்கள் கழிந்து இந்த தேயிலையை மாத்திரம் நம்பி வாழவேண்டிய அவசியம் இருந்திருக்காது. சிறுவர் தொழிலாளர்களும் அதிகரித்திருக்க மாட்டார்கள். எந்த ஒரு பெற்றோரும் தமது பிள்ளைகளின் கல்வியை இடைநிறுத்திவிட்டு அவர்களை வேலைக்கு அனுப்ப நினைக்க மாட்டார்கள்.