Saturday, April 11, 2009

சம்பள உயர்வு குறித்து மக்களிடம் கருத்துகள்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக மக்களிடம் கருத்துகளை பெற்று வருவதாகத் தெரிவித்த இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.வேலாயுதம் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் தோட்டத் தொழிலாளர் தொடர்பிலான கூட்டு ஒப்பந்தம் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகள் பல்வேறுபட்ட தொகைகளை குறிப்பிடுகின்றன. இந்நிலையில் என்ன அடிப்படையில் அச் சம்பள உயர்வை பெறுவது தொடர்பில் அவர்கள் குறிப்பிடவேண்டும். புதிய கூட்டு உடன்படிக்கை தொடர்பில் கடந்த 22 ஆம் திகதி கம்பனிப் பிரதிநிதிகள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்துடன் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சந்தித்து பேசியுள்ளனர்.

சம்பள உயர்வை என்ன அடிப்படையில் கோரலாமென்பதை தொழிற் சங்கங்கள் மற்றும் அமைப்புகளும் தெரியப்படுத்தவேண்டுமெனவும் கோரியுள்ளார். முதலில் தற்போதைய சூழ்நிலையை தெரிந்து கொள்ள வேண்டும். தோட்டக் கம்பனிகள் சம்பள உயர்வை எந்தளவு வழங்குமென்பதை சிந்திக்க வேண்டும். இந்நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப அரசு என்ன செய்ய வேண்டுமென்பதையும் சிந்திக்க வேண்டும். அதாவது அரச ஊழியர்களுக்கு பொருட்களின் விலை உயரும் போது சம்பளங்களை அரசு உயர்த்துகின்ற நிலையில் தோட்டத் தொழிலாளர்களை கைவிட்டுள்ளனர். எனவே, பொருட்களின் விலையை தீர்மானிக்கின்ற அரசு விலையுயர்வால் பாதிக்கப்படும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணங்களை அளிக்க கடமைப்பட்டுள்ளது.

குறிப்பு:- இந்த கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பிரதான தொழிற்சங்கங்களில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்(பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்கமாகும்)