Wednesday, October 1, 2008

முறையற்ற தபால் விநியோகத்தால் பல்கலைகழக வாய்ப்பை இழந்த மாணவன்

இரத்தினபுரி மாவட்டம் காவத்தை ஒபாத்த இல-02 கீழ்பிரிவைச் சேர்ந்த கே. சூரியகுமார் என்ற மாணவன் காவத்தை தமிழ் வித்தியாலயத்தில் கடந்த ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவனான இவர் பல்கலைகழகத்துக்கு தகுதி பெற்றிருந்தார். பல்கலைகழக அனுமதிக்காக மானிய ஆணைக்குழுவிற்கும் விண்ணப்பித்திருந்தார். இவரது விண்ணப்பங்களை ஏற்று ஆணைக்குழு உரிய ஆவணங்களை அனுப்பி வைத்திருந்தபோதிலும் மாணவனுக்கு கடிதம் கிடைக்காததால் பதில் கடிதமும் அனுப்பிய போதிலும் காலம் கடந்து விட்டது. கடிதம் கிடைக்கவில்லை. கடிதம் கிடைக்காததால் தோட்டக் காரியாலயத்துக்கு பல முறை தேடி அலைந்திருந்திருக்கிறார். கடிதம் ஒரு மாதத்திற்கு மேலாக தேங்கிக் கிடந்துள்ளமை தெரிய வந்துள்ளது. எனினும் மாணவனுக்கு பல்கலைகழக அனுமதி வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இப்பிரதேச மக்கள் நடந்த உண்மை நிலவரங்களை எடுத்துக் கூறி மாணவன் சூரியக்குமாருக்கு அனுமதி வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.