Monday, August 31, 2009

தொழிலாளர் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி

தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள உயர்வு தொடர்பாக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்குமிடையே 31-09-2009 ஆம் திகதி கொட்டக்கலையில் இடம் பெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேற்கொள்ளவுள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக 01-10-2009 காலை 10.00 மணிக்குக் கொட்டகலை காங்கிரஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப் பேச்சுவார்த்தையில் இ.தொ.கா. பொதுச்செயலாளரும் இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூகப்பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் இ.தொ.கா. தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம், பிரதியமைச்சர் எஸ்.ஜெகதீஸ்வரன், இ.தொ.கா.வின் தேசிய அமைப்பாளர் ஆர்.யோகராஜன், இலங்கைத்தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் ஊவா,மாகாணசபை உறுப்பினருமான கே.வேலாயுதம், பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் இராமநாதன் மற்றும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தில் இ.தொ.கா.வின் உயர்பீட உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள், மாவட்டத் தலைவர்கள், தோட்டக் கமிட்டித் தலைவர்கள், மாதர் சங்கத் தலைவிகள் ஆகியோர் உட்படப் பலர் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சிறுமியை வேலைக்கமர்த்திய வீட்டு உரிமையாளருக்கு விளக்கமறியல்

மஸ்கெலியாவைச் சேர்ந்த மதுரைவீரன் ஜீவராணி (13) சிறுமியை வேவைலக்கமர்த்தியிருந்த பௌத்தாலோக்க மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட வர்த்தகர் ஒருவர் சட்ட விரோதமான முறையில் வேலைக்கமர்த்தியிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையையடுத்து கொழும்பு மேலதிக நீதவான் வீட்டு உரிமையாளரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மதுரைவீரன் ஜீவராணி மற்றும் லெட்சுமன் சுமதி ஆகிய இரு சிறுமிகளும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 15 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள கழிவு நீர்க்கால்வாயில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
தொண்டமானின் தொழிற்சங்க போராட்டங்கள்

பெரும்பான்மை சமூகத்தினராலும்,அரசுகளாலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டுவந்த உரிமைகளை வென்றெடுப்பதில் போராட்ட வீரனாகவும், செயல்திறன் மிக்க தலைவனாகவும் விளங்கிய அமரர் சௌ. தொண்டமானின் போராட்டங்கள்

• 1946ம் ஆண்டு வெற்றிலையூர், உருளவள்ளி போராட்டம்.
• 1947களில் பிரஜாவுரிமை வாக்குரிமை பறிக்கப்பட்டதன் விளைவாக சுழற்சி முறையிலான போராட்டங்கள்.
• 1952-53 களில் சம்பள போராட்டம்
• 1960-62 களில் அவிசாவளை பென்றி தோட்டம் மற்றும் டில்லரி தோட்டங்களில் தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்பட்டதன் விளைவாக எழுந்த போராட்டங்கள்.
• உடப்புசல்லாவ, டெல்ஹவுஸ் ஆகியவற்றின் வாழைமரப் போராட்டம். • பதுளை, கந்தஹென தோட்டத்தில் போராட்டம்
• எட்டியாந்தோட்ட அலகொல்ல தோட்ட கண்ணாடி வளையல் போராட்டம்.
• பசறை டெம்பேரிய போராட்டம்
• 1972 இல் தோட்டத் தொழிலாளர்களின் வேலை நேரப் போராட்டம்.
• 1984 இல் ஆண், பெண் சம சம்பளத்திற்கான போராட்டம்
• வட்டக்கொட, மடக்கும்பர போராட்டம்
• தலவாக்கொல்லை ஹொலிரூட் போராட்டம்
• பூண்டுலோயா, டன்சினன் போராட்டம்
• 1977 இல் சிவனு லட்சுமணன் போராட்டம்
• கலஹா இரும்புக்கொல்லை தோட்டப் போராட்டம்.
• உடப்புசல்லாவ டெல்மார் போராட்டம்
• சாஞ்சிமலை போராட்டம்
• நாவலப்பிட்டி மொண்டிகிறிஸ்டோப் போராட்டம்
• மாத்தளை முத்துசாமிப் போராட்டம்

மேற்படி போராட்டங்கள் அமரர் சௌ. தொண்டமான் காலத்தில் நிகழந்தமை குறிப்பிடத்தக்கது
நன்றி- வீரகேசரி