Thursday, May 9, 2013

மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிப்பு




கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற இரவு தபால் ரயில் நானுஓயா புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இன்று அதிகாலை909-05-2013) தடம் புரண்டதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ரயில் எஞ்சின் தண்டவாளத்தை விட்டு விலகியதால் ரயில் தண்டவாளத்திற்கும் ரயிலுக்கு நீர் நிரப்பும் குழாய் கட்டமைப்புக்கும் சேதமேற்பட்டுள்ளதாக நானுஓயா கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது.
இதனால் பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை. பயணிகள் நானுஓயா ரயில் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கட்டுப்பாட்டு அறை தெரிவித்தது.