தொடர்ச்சி
பெருந்தோட்டத்துறைச் சிறுவர் உரிமை மீறல்கள்
- ஷோபனாதேவி இராஜேந்திரன் -
முழுநேர தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள் பற்றி குறிப்பு சிறுவர்களின் தொழில் நிலை. இங்கு தொழில் நிலை என்கின்ற போது அது சிறுவர்களின் சமூக அந்தஸ்தினையும் சிறுவர் பராய நடவடிக்கைகளையும் குறிப்பிடுகின்றது. பிள்ளைகளின் சிறந்த உடல் வளர்ச்சியும், சுறுசுறுப்பான பங்குபற்றலும் எந்தவொரு சமூகத்தினையும் உத்தம அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும். சிறுவர்களின் தொழில் நிலை பற்றிய தகவல்களை அட்டவணை 02 இல் காணலாம்.
பெருந்தோட்டத்துறையில் 06 - 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 10.3 வீதமான ஆண்பிள்ளைகளும் 14.6 வீதமான பெண் பிள்ளைகளும் முழு நேரத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இத்தகவல்களின் படி பெருந்தோட்டத் துறையில் 12.4 வீதமான சிறுவர்கள் முழுநேரத் தொழிலில் ஈடுபட்டுள்ளமை வேதனைக்குரிய விடயமாகும். மேலும், 3.8 வீதமான சிறுவர்கள் எவ்வித குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளிலும் ஈடுபடாது வெறுமனே தோட்டத்தில் சுற்றித்திரிகின்றனர்.
முழுநேரத் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுவர்களின் தொழில் வகைகள்
வேலையின் வகைக்கேற்ப தொழிலானது வகைப்படுத்தப்பட்டுள்ளது. முழுநேரத் தொழில் புரியும் சிறுவர்களின் தொழில் வகையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவர்களுள் 50.5 வீதமான சிறுவர்கள் வீட்டுப் பணிப்பெண்களாகத் தொழில் புரிகின்றனர். அதிலும் 85.5 வீதமான சிறுவர்கள் பெண்களாவர். இத்தொழிலானது தோட்டங்களுக்கு வெளியே நகர்ப்புற வீடுகளிலேயே காணப்படுகின்றது. இச்சிறுவர்கள் தொடர்பான பெரும்பாலான தகவல்கள் ஏலவே வீடுகளில் தொழில்புரிந்து பல இன்னல்களை அனுபவித்து தற்போது வீடு திரும்பி மீளவும் தொழிலை நாடி நிற்கும் சிறுவர்களிடமிருந்தே பெறப்பட்டது.
இச்சிறுவர்கள் காலை 5.00 மணி - இரவு 9.00 மணி வரை தொடர்ந்தும் வேலைசெய்ய வேண்டும். இவர்களுக்கு மதிய உணவிற்காக குறைந்த நேரமே (30 40 நிமிடங்கள்) வீட்டு எஜமான்களால் அனுமதிக்கப்படுகின்றது. அது மட்டுமன்றி, வீட்டு பணியாட்களாக தொழிலுக்கு அமர்த்தப்படும் பிள்ளைகள் மிக மோசமாக பாதிக்கப்படுகின்றனர். இங்கு தொழில்புரியும் சிறுவர்களின் உரிமைகள் முழுமையாகவே மீறப்படுகின்றன. அவர்களது சுயமான சிந்தனை, செயற்பாடுகளுக்கு எவ்வித இடமும் வழங்கப்படுவதில்லை.
பெற்றோரின் அன்பினையும் பாதுகாப்பினையும் வேண்டி நிற்கும் சிறுவர்களுக்கு வெறுமனே அவர்களது எஜமானின் துன்புறுத்தல்களும் ஆதிக்கங்களும் பாரபட்சங்களுமே கிடைக்கின்றன. மேலும், இச்சிறார்கள் பல துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக வேண்டிய துரதிர்ஷ்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
வீட்டுப் பணியாட்களாக தொழில்புரிந்த சிறுவர்களிடம் கலந்துரையாடியபோது அவர்களது கசப்பான உண்மை சம்பவங்கள் கண்ணீர்த் துளிகளாலும் விரக்தி வார்த்தைகளாலும் பொங்கி எழுந்தன. உதாரணமாக 14 வயதுடைய ஒரு பெண் சிறுமியின் ஆதங்கம் பின்வருமாறு வெளிப்படுத்தப்பட்டது;
“நான் கொழும்பில் மிகப் பெரிய பணக்கார வீட்டில் மூன்று வருடங்கள் ரொம்ப கஷ்டப்பட்டேன். அந்த எஜமானின் பிள்ளைகள் விளையாடும்போது எட்டிப்பார்த்து உதைவாங்குவேன். பசியில் பிஸ்கட்டை எடுத்து சாப்பிட்டு பல தடவைகள் அடி வாங்கினேன். எஜமான் மட்டுமல்ல, அவர்களது இரு பிள்ளைகளும் என்னை அடிப்பார்கள், உதைப்பார்கள் எனக்கு வேலை செய்ய கஷ்டமாக இருக்கு வீடு போக வேண்டும் என அழுதபோது என்னை மிரட்டி சூடு வைத்தார்கள். (இதோ அந்த அடையாளம் என்று காட்டினாள்). அந்த வீட்டு நாயின் சொகுசு கூட எனக்குக் கிடைக்கல. அநியாயம் நாயா பிறந்தா நல்லா இருக்கலாம் என நினைத்துள்ளேன். எனக்கு காய்ச்சல் வருத்தம் வந்து என்னை வீட்டுக்கு அனுப்பிவைச்சாங்க. ஆனால், அப்பா என்னை வேற வீட்டுக்கு அனுப்பப் போறாரு. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.”
இத்தனை துயரங்களை தாங்கி வந்த சிறுமிக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை. மீண்டும் அவளின் பெற்றோர் புதிய இடத்தில் வேலை தேடுகின்றனர். இதேபோல், பல சிறுவர்கள் சிறுமியர்களிடம் கலந்துரையாடிய போது பல உடல், உள ரீதியான இம்சைகளிலிருந்து தம்மை பாதுகாக்க முடியாத நிலையில் இருப்பதை அறியக்கூடியதாக இருந்தது.
மேலும், வீட்டுப் பணியாட்களாகப் பணிபுரியும் சிறார்கள் உடல்சார் துன்புறுத்தல்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், அவர்களது பிரச்சினைகள் மூடி மறைக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பிள்ளைகள் அல்லது அவர்களது பெற்றோர், உறவினர்கள் இது தொடர்பாக நியாயம் கேட்க முடியாத ஒரு துர்ப்பாக்கியசாலிகளாக காணப்படுகின்றனர். மாறாக, அப்பிள்ளைகள் வீட்டுப் பணியாட்களாக பணிபுரிவதால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி அறிந்த பின்பும் கூட மீண்டும் மீண்டும் அச்சிறார்கள் அந்த நச்சு வட்டத்திலிருந்து வெளிவர முடியாமல் சிக்கித் தவிப்பதை இவ்வாய்வின் போது அறியக்கூடியதாக இருந்தது. வேலைப்பளுவினை மட்டும் இச்சிறார்கள் சுமக்கவில்லை. கூடவே துன்பங்களையும் துயரங்களையும் சேர்த்தே சுமக்கின்றார்கள். இதனை விடவும் 24.8 வீதமான சிறுவர்கள் சிறிய கடைகள், உணவு விடுதிகள், வீதியோர வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய தொழில்களில் பெரும்பாலும் ஆண் சிறுவர்களே ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். (அட்டவணை 3) இவர்களும் வீட்டுப் பணியாட்களாக பணிபுரியும் சிறுவர்களைப் போலவே பல்வேறு இம்சைகளுக்கும் ஆளாகின்றனர். அச்சிறுவர்களுக்கு போதிய உணவு வழங்கப்படுவதில்லை என்றும் பழுதடைந்த உணவு கொடுக்கப்படுவதாகவும் அவர்கள் புகார் செய்தனர். இதனை விடவும் எவ்வித பொழுதுபோக்கோ, ஓய்வோ அவர்களுக்கு கிடைப்பதில்லை என்றும் மிக நீண்டநேரம் வேலை செய்ய வேண்டும் எனவும் அச்சிறுவர்கள் குறிப்பிட்டார்கள்.
சிறுவர்கள் 14 வயது வரை கட்டாயக் கல்வி கற்க வேண்டும் என இலங்கைச் சட்டம் காணப்பட்ட போதும் அந்த கட்டாயக் கல்வியைக் கூட பெறமுடியாத துர்ப்பாக்கியசாலிகளாக இந்த சிறுவர் தொழிலாளர்கள் உள்ளனர். ஒரு மனிதனின் அபிவிருத்தி செய்முறையில் பங்குபற்றவும் அவனது திறனை வளர்க்கவும் ஆகக் குறைந்தது அடிப்படைக் கல்வியையாவது பெற்றிருக்க வேண்டும்.
தொடரும்…..
Saturday, September 20, 2008
Friday, September 19, 2008
பெருந்தோட்டத்துறைச் சிறுவர் தொழிலாளர்கள் பற்றிய கண்ணோட்டம்
- ஷோபனாதேவி இராஜேந்திரன்-
பெருந்தோட்டத்துறைச் சிறுவர்களின் உரிமை மீறல்கள் காலனித்துவ காலம் தொட்டே இடம்பெற்று வருகின்றன. 19 ஆம் நூற்றாண்டிலேயே பிரித்தானியர்கள் சிறுவர்களைத் தொழிலில் அமர்த்துவதில் முனைப்புக் கொண்டிருந்தனர். இக்காலகட்டத்தில் தென்னிந்தியாவிலிருந்து சராசரியாக 8,000 ஆயிரம் சிறுவர்கள் தொழிலாளர்களாக பெருந்தோட்டத் துறையில் பணிபுரிவதற்காக கொண்டுவரப்பட்டனர். (சுயுஊர்நுடு, 1989) பெருந்தோட்டங்களில் தேயிலைப் பயிர்ச் செய்கை அறிமுகமானதையடுத்து பெருந்தொகையான சிறுவர் ஊழியம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பெண்களையும், சிறுவர்களையும் மலிவான கூலியில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு காணப்பட்டமையினால் இவர்களை தோட்டத் தொழிலில் அமர்த்துவதில் தோட்ட உரிமையாளர்கள் பெரிதும் ஆர்வம் காட்டிவந்தனர். அதிலும் குறிப்பாக பெண்தொழிலாளர்களைக் காட்டிலும் சிறுவர் தொழிலாளர்களை மலிவான கூலியில் பெறமுடியும் என்பதை அறிந்து தோட்ட உரிமையாளர்கள் தோட்டத்துறையில் தொழிலாளர்களை தொழிலுக்கு சேர்க்கின்ற போது குடும்ப இடப்பெயர்வினை பெரிதும் ஊக்கப்படுத்தி வந்தனர். 1922 ஆம் ஆண்டில் ஆண்,பெண் குறைந்தபட்ச கூலி வீதத்தினை விட சிறுவர்களின் குறைந்தபட்ச கூலியானது குறைவாகவே காணப்பட்டது ( அட்டவணை 01) எனினும், 1939 ஆம் ஆண்டில் இலங்கை கட்டாயக் கல்வியை
அறிமுகப்படுத்தியமையும் சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டதையடுத்துத் தோட்டத்துறைச் சிறுவர்களைத் தொழிலில் சேர அனுமதிக்கவில்லை. இதனையடுத்து இச்சிறுவர்கள் தோட்டத்துக்கு வெளியில் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அட்டவணை- 01குறைந்தபட்ச கூலி வீதம்
நாட்சம்பளம்
ஆண் 38
ண் 28
சிறுவர் 19
மூலம் - மத்திய வங்கி - 1960
இக்காலகட்டத்தில் பெருந்தோட்டத்துறைச் சிறுவர்களின் கல்வி தொடர்பான எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. 1970 ஆம் ஆண்டு வரை தேசிய ரீதியிலான கல்விக் கொள்கைகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பெருந்தோட்டத்துறைப் பாடசாலைகளைச் சென்றடைந்தன (வுர்யுNயுசுயுதுஇ 2004) ஆனால், இலங்கை சுதந்திரம் அடைய முன்பே 1945 ஆம் ஆண்டில் தேசிய கல்வி முறை கொண்டுவரப்பட்டது. எனினும், பெருந்தோட்டத்துறை கல்விமுறை தேசியக் கல்வி முறையோடு ஒன்றிணைக்கப்படவில்லை. 1970 ஆம் ஆண்டுவரை பெருந்தோட்டத்துறை கல்வியானது மிகவும் தரம் குறைவாகவே காணப்பட்டது. எனவே, இவ்வகையில் நோக்கும் போது குறைந்த கல்வி நிலையும் அவர்களின் குடும்ப வறுமையுமே சிறுவர் உழைப்பிற்கான பிரதான காரணியாக அமைகின்றது எனலாம்.
ஒரு சமூகத்தின் கல்வி நிலையே அச்சமூகத்தின் மேம்பாட்டிற்கு வழி வகுக்கின்றது. சிறுவர் உழைப்பானது கற்றலுக்கான வாய்ப்பினை மறுக்கின்றது. கல்விக்கான சிறுவர் உரிமை மீறலானது அவர்களின் அறிவாற்றல், படைப்பாற்றல் போன்றவற்றை வளரவிடாது தடுப்பதுடன் மாறாக, ஓர் ஆரோக்கியமற்ற சந்ததியினரை உருவாக்குகின்றது. இவ்வகையில் பெருந்தோட்டத்துறை சமூகத்தின் கல்வி பின்னடைவு அச்சமூக முன்னேற்றத்திற்கு இடையூறாக இருப்பதுடன் குறிப்பாக அச்சிறுவர்களின் உரிமை மீறலுக்கும் வழிவகுக்கின்றது.
எனவே, இவ் ஆய்வுக் கட்டுரையானது பெருந்தோட்டத்துறை சார்ந்த சிறுவர்களின் உழைப்பினைப் பகுப்பாய்வு செய்வதுடன் அவற்றினைத் தவிர்ப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ் ஆய்வில் மத்திய மாகாணத்தில் கண்டி, நுவரெலியா ஆகிய இரு மாவட்டங்களிலுள்ள ஐந்து வீதமான தோட்டங்கள் (பத்து தோட்டங்கள்) எழுமாறாக தெரிவு செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், தெரிவு செய்யப்பட்ட 10 தோட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 0614 வயதிற்குட்பட்ட 225 பிள்ளைகளிடமிருந்து தகவல்கள் பெறப்பட்டன. இவர்களில் 100 பேர் ஆண்பிள்ளைகள். ஏனைய 125 பேரும் பெண் பிள்ளைகளாவர்.தோட்டங்களில் தொழில் புரியும் சிறுவர்களைப் பகுதிநேர தொழில் புரியும் சிறுவர்கள், முழுநேர தொழில் புரியும் சிறுவர்கள் என இருவகையில் உள்ளடக்கலாம். ஆனால், இக்கட்டுரை முழுநேர தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுவர்களிலேயே கவனம் செலுத்துகின்றது.
(தொடரும்..)
தினக்குரல்
அரச, தனியார் வங்கிகளில் தமிழ் ஊழியர்கள் இல்லை
இரத்தினபுரி மாவட்ட அரச மற்றும் தனியார் வங்கிகளில் தமிழ் ஊழியர்கள் நியமிக்கப்படாமையினால் அம் மாவட்ட தமிழ் பேசும் மக்கள் மக்கள் மொழிப் பிரச்சினை காரணமாக தமது தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாது சிங்களம், ஆங்கிலம் தெரிந்த ஒருவரை நாட வேண்டியுள்ளது. இதன்போது குறிப்பிட்ட நபர் தரகுப்பணம் எதிர்பார்ப்பதாகவும் இதனால் தமது வைப்பில் குறிப்பிட்ட பணம் தரகுப் பணத்திற்காக இழக்கப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சில தோட்டத் தொழிலாளர்கள் தமது சேவைக்கால பணம் ஊ.சே.நி., ஊ.ந.நி. போன்ற இன்னோரன்ன கொடுப்பனவுகளை காசோலையினூடாக பெறும் பட்சத்தில் அதனை மாற்றுவதற்கு தரகர்களை நாட வேண்டியுள்ளது. இதன் போது தரகர்களால் பணம் தரகர்களால் கையாளப்பட்டு வருகின்றன. இதனையறியாத தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர். ஓய்வூதியம் பெற்றும் தமது கடைசிக் காலத்தில் தமது உழைப்பில் பெற்ற பணத்தை முழுமையாக அனுபவிக்க முடியாதுள்ளதாக தோட்டத் தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இம் மாவட்டத்தில் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பான் ஆசியா வங்கி, செலான் வங்கி, அட்டன் நஷனல் வங்கி, சப்ரகமுவ அபிவிருத்தி வங்கி, பிராக்தன வங்கி, சனச வங்கி உள்ளிட்ட பல வங்கிகளின் தலைமைக் காரியாலயங்களும் பிராந்திய காரியாலயங்களும் இருந்தபோதும் தமிழ் மொழி தெரிந்த ஊழியர்கள் இல்லை. எனவே தமிழ் தெரிந்த ஊழியர்களை நியமிக்குமாறு அப்பிரதேச மக்கள் கோருகின்றனர்
தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை முற்பணமாக 5,000 - இ.தொ.கா
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு பண்டிகை முற்பணமாக 5,000 ரூபா வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் முன்வரவேண்டுமென்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்வதால் தினசரியாக வாழ்க்கைச் செலவுக்கு போராடிக் கொண்டிருக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு இத்தொகை போதுமானதல்ல. எவ்வாறாயினும் சகல மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் குறிப்பிடப்பட்ட தொகை வழங்கப்பட வேண்டும். இதுவரை 3,000 மாத்திரம் வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
- ஷோபனாதேவி இராஜேந்திரன்-
பெருந்தோட்டத்துறைச் சிறுவர்களின் உரிமை மீறல்கள் காலனித்துவ காலம் தொட்டே இடம்பெற்று வருகின்றன. 19 ஆம் நூற்றாண்டிலேயே பிரித்தானியர்கள் சிறுவர்களைத் தொழிலில் அமர்த்துவதில் முனைப்புக் கொண்டிருந்தனர். இக்காலகட்டத்தில் தென்னிந்தியாவிலிருந்து சராசரியாக 8,000 ஆயிரம் சிறுவர்கள் தொழிலாளர்களாக பெருந்தோட்டத் துறையில் பணிபுரிவதற்காக கொண்டுவரப்பட்டனர். (சுயுஊர்நுடு, 1989) பெருந்தோட்டங்களில் தேயிலைப் பயிர்ச் செய்கை அறிமுகமானதையடுத்து பெருந்தொகையான சிறுவர் ஊழியம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பெண்களையும், சிறுவர்களையும் மலிவான கூலியில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு காணப்பட்டமையினால் இவர்களை தோட்டத் தொழிலில் அமர்த்துவதில் தோட்ட உரிமையாளர்கள் பெரிதும் ஆர்வம் காட்டிவந்தனர். அதிலும் குறிப்பாக பெண்தொழிலாளர்களைக் காட்டிலும் சிறுவர் தொழிலாளர்களை மலிவான கூலியில் பெறமுடியும் என்பதை அறிந்து தோட்ட உரிமையாளர்கள் தோட்டத்துறையில் தொழிலாளர்களை தொழிலுக்கு சேர்க்கின்ற போது குடும்ப இடப்பெயர்வினை பெரிதும் ஊக்கப்படுத்தி வந்தனர். 1922 ஆம் ஆண்டில் ஆண்,பெண் குறைந்தபட்ச கூலி வீதத்தினை விட சிறுவர்களின் குறைந்தபட்ச கூலியானது குறைவாகவே காணப்பட்டது ( அட்டவணை 01) எனினும், 1939 ஆம் ஆண்டில் இலங்கை கட்டாயக் கல்வியை
அறிமுகப்படுத்தியமையும் சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டதையடுத்துத் தோட்டத்துறைச் சிறுவர்களைத் தொழிலில் சேர அனுமதிக்கவில்லை. இதனையடுத்து இச்சிறுவர்கள் தோட்டத்துக்கு வெளியில் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அட்டவணை- 01குறைந்தபட்ச கூலி வீதம்
நாட்சம்பளம்
ஆண் 38
ண் 28
சிறுவர் 19
மூலம் - மத்திய வங்கி - 1960
இக்காலகட்டத்தில் பெருந்தோட்டத்துறைச் சிறுவர்களின் கல்வி தொடர்பான எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. 1970 ஆம் ஆண்டு வரை தேசிய ரீதியிலான கல்விக் கொள்கைகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பெருந்தோட்டத்துறைப் பாடசாலைகளைச் சென்றடைந்தன (வுர்யுNயுசுயுதுஇ 2004) ஆனால், இலங்கை சுதந்திரம் அடைய முன்பே 1945 ஆம் ஆண்டில் தேசிய கல்வி முறை கொண்டுவரப்பட்டது. எனினும், பெருந்தோட்டத்துறை கல்விமுறை தேசியக் கல்வி முறையோடு ஒன்றிணைக்கப்படவில்லை. 1970 ஆம் ஆண்டுவரை பெருந்தோட்டத்துறை கல்வியானது மிகவும் தரம் குறைவாகவே காணப்பட்டது. எனவே, இவ்வகையில் நோக்கும் போது குறைந்த கல்வி நிலையும் அவர்களின் குடும்ப வறுமையுமே சிறுவர் உழைப்பிற்கான பிரதான காரணியாக அமைகின்றது எனலாம்.
ஒரு சமூகத்தின் கல்வி நிலையே அச்சமூகத்தின் மேம்பாட்டிற்கு வழி வகுக்கின்றது. சிறுவர் உழைப்பானது கற்றலுக்கான வாய்ப்பினை மறுக்கின்றது. கல்விக்கான சிறுவர் உரிமை மீறலானது அவர்களின் அறிவாற்றல், படைப்பாற்றல் போன்றவற்றை வளரவிடாது தடுப்பதுடன் மாறாக, ஓர் ஆரோக்கியமற்ற சந்ததியினரை உருவாக்குகின்றது. இவ்வகையில் பெருந்தோட்டத்துறை சமூகத்தின் கல்வி பின்னடைவு அச்சமூக முன்னேற்றத்திற்கு இடையூறாக இருப்பதுடன் குறிப்பாக அச்சிறுவர்களின் உரிமை மீறலுக்கும் வழிவகுக்கின்றது.
எனவே, இவ் ஆய்வுக் கட்டுரையானது பெருந்தோட்டத்துறை சார்ந்த சிறுவர்களின் உழைப்பினைப் பகுப்பாய்வு செய்வதுடன் அவற்றினைத் தவிர்ப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ் ஆய்வில் மத்திய மாகாணத்தில் கண்டி, நுவரெலியா ஆகிய இரு மாவட்டங்களிலுள்ள ஐந்து வீதமான தோட்டங்கள் (பத்து தோட்டங்கள்) எழுமாறாக தெரிவு செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், தெரிவு செய்யப்பட்ட 10 தோட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 0614 வயதிற்குட்பட்ட 225 பிள்ளைகளிடமிருந்து தகவல்கள் பெறப்பட்டன. இவர்களில் 100 பேர் ஆண்பிள்ளைகள். ஏனைய 125 பேரும் பெண் பிள்ளைகளாவர்.தோட்டங்களில் தொழில் புரியும் சிறுவர்களைப் பகுதிநேர தொழில் புரியும் சிறுவர்கள், முழுநேர தொழில் புரியும் சிறுவர்கள் என இருவகையில் உள்ளடக்கலாம். ஆனால், இக்கட்டுரை முழுநேர தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுவர்களிலேயே கவனம் செலுத்துகின்றது.
(தொடரும்..)
தினக்குரல்
அரச, தனியார் வங்கிகளில் தமிழ் ஊழியர்கள் இல்லை
இரத்தினபுரி மாவட்ட அரச மற்றும் தனியார் வங்கிகளில் தமிழ் ஊழியர்கள் நியமிக்கப்படாமையினால் அம் மாவட்ட தமிழ் பேசும் மக்கள் மக்கள் மொழிப் பிரச்சினை காரணமாக தமது தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாது சிங்களம், ஆங்கிலம் தெரிந்த ஒருவரை நாட வேண்டியுள்ளது. இதன்போது குறிப்பிட்ட நபர் தரகுப்பணம் எதிர்பார்ப்பதாகவும் இதனால் தமது வைப்பில் குறிப்பிட்ட பணம் தரகுப் பணத்திற்காக இழக்கப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சில தோட்டத் தொழிலாளர்கள் தமது சேவைக்கால பணம் ஊ.சே.நி., ஊ.ந.நி. போன்ற இன்னோரன்ன கொடுப்பனவுகளை காசோலையினூடாக பெறும் பட்சத்தில் அதனை மாற்றுவதற்கு தரகர்களை நாட வேண்டியுள்ளது. இதன் போது தரகர்களால் பணம் தரகர்களால் கையாளப்பட்டு வருகின்றன. இதனையறியாத தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர். ஓய்வூதியம் பெற்றும் தமது கடைசிக் காலத்தில் தமது உழைப்பில் பெற்ற பணத்தை முழுமையாக அனுபவிக்க முடியாதுள்ளதாக தோட்டத் தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இம் மாவட்டத்தில் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பான் ஆசியா வங்கி, செலான் வங்கி, அட்டன் நஷனல் வங்கி, சப்ரகமுவ அபிவிருத்தி வங்கி, பிராக்தன வங்கி, சனச வங்கி உள்ளிட்ட பல வங்கிகளின் தலைமைக் காரியாலயங்களும் பிராந்திய காரியாலயங்களும் இருந்தபோதும் தமிழ் மொழி தெரிந்த ஊழியர்கள் இல்லை. எனவே தமிழ் தெரிந்த ஊழியர்களை நியமிக்குமாறு அப்பிரதேச மக்கள் கோருகின்றனர்
தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை முற்பணமாக 5,000 - இ.தொ.கா
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு பண்டிகை முற்பணமாக 5,000 ரூபா வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் முன்வரவேண்டுமென்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்வதால் தினசரியாக வாழ்க்கைச் செலவுக்கு போராடிக் கொண்டிருக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு இத்தொகை போதுமானதல்ல. எவ்வாறாயினும் சகல மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் குறிப்பிடப்பட்ட தொகை வழங்கப்பட வேண்டும். இதுவரை 3,000 மாத்திரம் வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
Thursday, September 18, 2008
அகதிகளாக தங்கியுள்ள இலங்கையருக்கு பிரஜாவுரிமை வழங்க சட்டமூலம்
இந்தியாவில் அகதிகளாக தங்கியுள்ள அனைத்து இலங்கையர்களுக்கு பிரஜாவுரிமையை பெற்றுக் கொடுப்பதற்கான சட்டமூலம் அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது நிறைவேற்றப்படவுள்ளது. இதற்காக கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டது. இந்தியாவில் 90,000 பேர் அகதிகளாக வாழ்கின்ற நிலையில் இதில் 28,500 பேர் இந்தியாவினதோ அல்லது இலங்கையினதோ பிரஜாவுரிமை இன்றி அங்கு வாழ்கின்றனர். இவர்களுக்கு பிரஜாவுரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு சட்டமூலத்தில் இடம் இல்லாத நிலையில் அதை திருத்துவதற்காகவே இத்தெரிவுக்குழு அமைக்கப்பட்டது. இந்த சட்டமூலத்தை திருத்துவதற்கு இரண்டு விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டது. முதலாவதாக, 1988 ஆம் ஆண்டு 39 ஆவது இலக்க நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்குவதற்கான திருத்தம். மற்றது, 2003 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க இந்திய வம்சாவளியினருக்கு பிரஜாவுரிமை பெற்றுக்கொடுப்பதற்கான சட்டமூலமாகும்.
இனமுறுகல் தீர்வுகாண ஜனாதிபதிக்கு முறைப்பாடு
கேகாலை ருவன்வெல டெஸ்டர்போர்ட் தோட்டத்தில் ஏற்பட்டுள்ள இனமுறுகல் மோதலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பெ. சந்திரசேகரன் ஜனாதிபதிக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள சம்பவம் காரணமாக ஏற்படவுள்ள இனமோதல் உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டுமெனவும், அவ்வாறு கட்டுப்படாத பட்சத்தில் இனவாதிகளும் சந்தர்ப்பவாதிகளுமே இதில் பயனடைவார்கள் என்றும் ஒன்றுமறியாத அப்பாவித் தோட்டத் தொழிலாளர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு உள்ளது என்றும் அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு இனரீதியிலான மோதலாக வடிவமைக்கப்படுமளவிற்கு இனவாத சக்திகள் விழிப்போடு இருப்பது வேதனையளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை தொழிலாளர்கள் ஐக்கிய முன்னணி யின் உப தலைவர் கணபதி கணகராஜ் பொலிஸ்மா அதிபருக்கு விடுத்த அவசர வேண்டுகோளில் தனி நபர்களுக்கிடையில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை இன மத பேதமின்றி கையாள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். ஆனால் இப்பிரச்சினையை வைத்துக்கொண்டு சில விஷமிகள் இனவாத தாக்குதலுக்கு தூபமிட்டுள்ளனர். இதனால் பெருமளவிலான பெண்கள், குழந்தைகள் உட்பட 250 தோட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ருவான்வெல்ல டெஸ்டர்போட் தோட்டத்தில் தோன்றியுள்ள இன முறுகல் நிலைமையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரும் வகையில் பொலிஸ்மா அதிபர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் இனங்களுக்கிடையிலான நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் செயற்படும் சக்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டுமெனவும்
பிறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொடுக்க மனிதவள அபிவிருத்தி நிதியம் நடவடிக்கை
பிறப்புச்சான்றிதழ் இல்லாத தோட்டத் தொழிலாளர்களுக்கு அதனைப் பெற்றுக்கொடுக்க பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினரும், நிதியத்தின் இணைப்பாளருமான துரை மதியுகராஜா தெரிவித்துள்ளார். பெரும்பாலான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பிறப்புச்சான்றிதழ் இன்றி பெருஞ்சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றமையை கருத்திற் கொண்டு இம்மக்களுக்கு துரித கதியில் பிறப்புச்சான்றிதழ் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது சம்பந்தமான உத்தரவு பதிவாளர் நாயகம் திணைக்களத்திற்கு பிறப்பிக்கப்பட்டு மூன்று மாதத்துக்குள் அனைத்து தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இலகு முறையில் பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கு பல விதிமுறைகள் குறைக்கப்படவேண்டும் என்று சுட்டிக்காட்டிய இளைஞர் வலுவூட்டல் சமூகப்பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த விசேட ஏற்பாட்டின் பேரில் வழங்கப்பட இருக்கும் பிறப்புச் சான்றிதழ்கள் இளைஞர் வலுவூட்டல் அமைச்சினது அனுசரணையுடன் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படவுள்ளன. இதனையொட்டி கண்டி, மாத்தளை மாவட்டங்களைச் சேர்ந்த 65 பெருந்தோட்ட முகாமையாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இச் செயற்றிட்டம் சம்பந்தமான அறிவுறுத்தல் கூட்டங்கள் நடைபெறவுள்ளது. இதன் படி புதன்கிழமை நாவலப்பிட்டி,மற்றும் புசல்லாவ நகரத்திலும் இன்று வியாழக்கிழமை கண்டி மற்றும் மாத்தளை நகரத்திலும் நடைபெறுகின்றது.
இந்தியாவில் அகதிகளாக தங்கியுள்ள அனைத்து இலங்கையர்களுக்கு பிரஜாவுரிமையை பெற்றுக் கொடுப்பதற்கான சட்டமூலம் அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது நிறைவேற்றப்படவுள்ளது. இதற்காக கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டது. இந்தியாவில் 90,000 பேர் அகதிகளாக வாழ்கின்ற நிலையில் இதில் 28,500 பேர் இந்தியாவினதோ அல்லது இலங்கையினதோ பிரஜாவுரிமை இன்றி அங்கு வாழ்கின்றனர். இவர்களுக்கு பிரஜாவுரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு சட்டமூலத்தில் இடம் இல்லாத நிலையில் அதை திருத்துவதற்காகவே இத்தெரிவுக்குழு அமைக்கப்பட்டது. இந்த சட்டமூலத்தை திருத்துவதற்கு இரண்டு விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டது. முதலாவதாக, 1988 ஆம் ஆண்டு 39 ஆவது இலக்க நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்குவதற்கான திருத்தம். மற்றது, 2003 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க இந்திய வம்சாவளியினருக்கு பிரஜாவுரிமை பெற்றுக்கொடுப்பதற்கான சட்டமூலமாகும்.
இனமுறுகல் தீர்வுகாண ஜனாதிபதிக்கு முறைப்பாடு
கேகாலை ருவன்வெல டெஸ்டர்போர்ட் தோட்டத்தில் ஏற்பட்டுள்ள இனமுறுகல் மோதலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பெ. சந்திரசேகரன் ஜனாதிபதிக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள சம்பவம் காரணமாக ஏற்படவுள்ள இனமோதல் உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டுமெனவும், அவ்வாறு கட்டுப்படாத பட்சத்தில் இனவாதிகளும் சந்தர்ப்பவாதிகளுமே இதில் பயனடைவார்கள் என்றும் ஒன்றுமறியாத அப்பாவித் தோட்டத் தொழிலாளர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு உள்ளது என்றும் அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு இனரீதியிலான மோதலாக வடிவமைக்கப்படுமளவிற்கு இனவாத சக்திகள் விழிப்போடு இருப்பது வேதனையளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை தொழிலாளர்கள் ஐக்கிய முன்னணி யின் உப தலைவர் கணபதி கணகராஜ் பொலிஸ்மா அதிபருக்கு விடுத்த அவசர வேண்டுகோளில் தனி நபர்களுக்கிடையில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை இன மத பேதமின்றி கையாள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். ஆனால் இப்பிரச்சினையை வைத்துக்கொண்டு சில விஷமிகள் இனவாத தாக்குதலுக்கு தூபமிட்டுள்ளனர். இதனால் பெருமளவிலான பெண்கள், குழந்தைகள் உட்பட 250 தோட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ருவான்வெல்ல டெஸ்டர்போட் தோட்டத்தில் தோன்றியுள்ள இன முறுகல் நிலைமையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரும் வகையில் பொலிஸ்மா அதிபர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் இனங்களுக்கிடையிலான நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் செயற்படும் சக்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டுமெனவும்
பிறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொடுக்க மனிதவள அபிவிருத்தி நிதியம் நடவடிக்கை
பிறப்புச்சான்றிதழ் இல்லாத தோட்டத் தொழிலாளர்களுக்கு அதனைப் பெற்றுக்கொடுக்க பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினரும், நிதியத்தின் இணைப்பாளருமான துரை மதியுகராஜா தெரிவித்துள்ளார். பெரும்பாலான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பிறப்புச்சான்றிதழ் இன்றி பெருஞ்சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றமையை கருத்திற் கொண்டு இம்மக்களுக்கு துரித கதியில் பிறப்புச்சான்றிதழ் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது சம்பந்தமான உத்தரவு பதிவாளர் நாயகம் திணைக்களத்திற்கு பிறப்பிக்கப்பட்டு மூன்று மாதத்துக்குள் அனைத்து தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இலகு முறையில் பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கு பல விதிமுறைகள் குறைக்கப்படவேண்டும் என்று சுட்டிக்காட்டிய இளைஞர் வலுவூட்டல் சமூகப்பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த விசேட ஏற்பாட்டின் பேரில் வழங்கப்பட இருக்கும் பிறப்புச் சான்றிதழ்கள் இளைஞர் வலுவூட்டல் அமைச்சினது அனுசரணையுடன் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படவுள்ளன. இதனையொட்டி கண்டி, மாத்தளை மாவட்டங்களைச் சேர்ந்த 65 பெருந்தோட்ட முகாமையாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இச் செயற்றிட்டம் சம்பந்தமான அறிவுறுத்தல் கூட்டங்கள் நடைபெறவுள்ளது. இதன் படி புதன்கிழமை நாவலப்பிட்டி,மற்றும் புசல்லாவ நகரத்திலும் இன்று வியாழக்கிழமை கண்டி மற்றும் மாத்தளை நகரத்திலும் நடைபெறுகின்றது.
Wednesday, September 17, 2008
தோட்ட மக்களை இ.தொ.கா புறக்கணிக்காது – பிரதி கல்வியமைச்சர் சச்சிதானந்தன்
சப்ரகமுவ மாகாண சபைத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோல்வியையடுத்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதி கல்வியமைச்சர் எம். சச்சிதானந்தன் இ.தொ.கா சப்ரகமுவ மாகாண மக்களை ஒருபோது கைவிடாது என்று தெரிவித்த அமைச்சர் மலையகத்தில் ஊவா, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களை இணைத்து கல்வி, கலாச்சார ரீதியாக முக்கோண வடிவில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படும். வௌ;வேறு மாகாணங்கள் என பாகுபாடு காட்டாது. குறிப்பாக ஆசிரியர் நியமனம், சமுர்த்தி உத்தியோகத்தர் நியமனம், அதிபர் – ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள் என எந்த விடயத்திலும் மாகாண ரீதியாக பாகுபாடு காட்டாது இ.தொ.கா பொதுவாக ஜனநாயக ரீதியாகவே செயற்பட்டு வந்திருக்கிறது. இலங்கை அரசியல் அமைப்பின் 13வது சீர்திருத்தத்தின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆதன் மூலம் வரவு செலவுத் திட்டத்தில் கல்வி, கலாச்சாரத்துக்கென நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும். சப்ரகமுவ மாகாண மக்கள் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழந்ததன் மூலம் மாகாணசபைக்கு கிடைக்கும் நிதியை கோட்டை விட்டு விட்டார்கள் என்றார்.
தரிசு நிலங்களில் விவசாயம் செய்த தொழிலாளர்கள் வேலை நீக்கம்
வெலிமடை - ஹக்கலை தோட்டத்தில் தேயிலை பயிர்செய்கைக்கு பொருத்தமற்றதென தோட்ட நிர்வாகத்தினால் கைவிடப்பட்டிருந்த தரிசு நிலத்தில் விவசாயம் செய்த தோட்டத் தொழிலாளர்கள் 15 பேர் தோட்ட நிர்வாகத்தினால் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இதேவேளை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வெளியார் பலர் அத்துமீறி இதே தோட்டத்தின் தரிசு நிலங்களை ஆக்கிரமித்திருப்பதுடன் பயிர்செய்யையும் மேற்கொள்வதோடு மாடி வீடுகளையும் நிர்மாணித்து வாழ்கின்றனர். தோட்டத்திற்காக பாடுபடும் தொழிலாளர்கள் இவ்வாறு விவசாயம் செய்தமை குறித்து தொழிலாளர்கள் தரப்புக்கு ஏற்பட்டுள்ள அநீதி தொடர்பாக ஹக்கலை தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக பண்டாரவளை தொழில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தோட்ட நிர்வாகங்கள் பெருமான்மையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதிருப்பதேன் என்று கேள்வி எழுப்பப்படுகிறது. வறுமை நிலை காரணமாக தரிசு நிலங்களில் விவசாயம் செய்வது எப்படி குற்றமாகும்? தொழிலாளர்கள் தமிழர்கள் என்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றதா என்று நீதிமன்றில் கேள்வி எழுப்பினார் தொழிலுறவு அதிகாரியும், சட்டவல்லுநருமான ஆர் சுப்பிரமனியம்.
சப்ரகமுவ மாகாண சபைத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோல்வியையடுத்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதி கல்வியமைச்சர் எம். சச்சிதானந்தன் இ.தொ.கா சப்ரகமுவ மாகாண மக்களை ஒருபோது கைவிடாது என்று தெரிவித்த அமைச்சர் மலையகத்தில் ஊவா, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களை இணைத்து கல்வி, கலாச்சார ரீதியாக முக்கோண வடிவில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படும். வௌ;வேறு மாகாணங்கள் என பாகுபாடு காட்டாது. குறிப்பாக ஆசிரியர் நியமனம், சமுர்த்தி உத்தியோகத்தர் நியமனம், அதிபர் – ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள் என எந்த விடயத்திலும் மாகாண ரீதியாக பாகுபாடு காட்டாது இ.தொ.கா பொதுவாக ஜனநாயக ரீதியாகவே செயற்பட்டு வந்திருக்கிறது. இலங்கை அரசியல் அமைப்பின் 13வது சீர்திருத்தத்தின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆதன் மூலம் வரவு செலவுத் திட்டத்தில் கல்வி, கலாச்சாரத்துக்கென நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும். சப்ரகமுவ மாகாண மக்கள் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழந்ததன் மூலம் மாகாணசபைக்கு கிடைக்கும் நிதியை கோட்டை விட்டு விட்டார்கள் என்றார்.
தரிசு நிலங்களில் விவசாயம் செய்த தொழிலாளர்கள் வேலை நீக்கம்
வெலிமடை - ஹக்கலை தோட்டத்தில் தேயிலை பயிர்செய்கைக்கு பொருத்தமற்றதென தோட்ட நிர்வாகத்தினால் கைவிடப்பட்டிருந்த தரிசு நிலத்தில் விவசாயம் செய்த தோட்டத் தொழிலாளர்கள் 15 பேர் தோட்ட நிர்வாகத்தினால் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இதேவேளை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வெளியார் பலர் அத்துமீறி இதே தோட்டத்தின் தரிசு நிலங்களை ஆக்கிரமித்திருப்பதுடன் பயிர்செய்யையும் மேற்கொள்வதோடு மாடி வீடுகளையும் நிர்மாணித்து வாழ்கின்றனர். தோட்டத்திற்காக பாடுபடும் தொழிலாளர்கள் இவ்வாறு விவசாயம் செய்தமை குறித்து தொழிலாளர்கள் தரப்புக்கு ஏற்பட்டுள்ள அநீதி தொடர்பாக ஹக்கலை தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக பண்டாரவளை தொழில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தோட்ட நிர்வாகங்கள் பெருமான்மையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதிருப்பதேன் என்று கேள்வி எழுப்பப்படுகிறது. வறுமை நிலை காரணமாக தரிசு நிலங்களில் விவசாயம் செய்வது எப்படி குற்றமாகும்? தொழிலாளர்கள் தமிழர்கள் என்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றதா என்று நீதிமன்றில் கேள்வி எழுப்பினார் தொழிலுறவு அதிகாரியும், சட்டவல்லுநருமான ஆர் சுப்பிரமனியம்.
Tuesday, September 16, 2008

கொழும்பு ஹோர்டன் பிளேஸில் பஸ் வண்டியில் குண்டு வெடிப்பு நால்வர் காயம்
கொழும்பு மட்டக்குளியிலிருந்து மொரட்டுவ நோக்கிச் சென்ற 155 இல இ.போ.ச பஸ் வண்டியில் இன்று பிற்பகல் (16-09-2008) குண்டு வெடித்ததில் நால்வர் காயங்களுக்குள்ளானார்கள். இச் சம்பவம் கொழும்பு நகர மண்டபத்திற்கு அண்மையில் ஹோர்ட்டன் சுற்றுவட்ட பகுதியிலேயே இடம்பெற்றது. இந்த பஸ் வண்டியில் சுமார் 60 பேர் பயணித்தாகவும் சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்று இருப்பதை கண்ட பஸ் சாரதி அவசரமாக பயணிகளை இறக்கிய சிறிது நேரத்திலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Monday, September 15, 2008
டெஸ்டர்போர்ட் தோட்டத்தில் தொடர்ந்தும் பதற்றம்
கேகாலை மாவட்டம் ருவான்வெல டெஸ்டர்போர்ட் தோட்டத்தில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகறாறு காரணமாக சிங்களவர் ஒருவர் கத்திக்குத்து இலக்காகி மரணமானார். இதனையடுத்து பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் தோட்டக்குடியிருப்புக்களின் மீது கற்களை வீசி தொழிலாளர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதாகவும் இதனையடுத்து அங்கு தொடர்ந்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் நடந்த தோட்டப்பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும் தொழிலாளர்களின் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதோடு அவர்களின் வீடுகளில் இருந்த பெறுமதியான பொருட்களை சூறையாடி சென்றுள்ளனர். இதனால் சுமார் 80 குடும்பங்களைச் சேர்ந்த 250 பேர் அருகிலுள்ள தோட்டங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். தற்காலிகமாக உறவினர்கள் தங்கியுள்ள இவர்கள் இரண்டு நாட்களாக எதுவித பசி பட்டிணியால் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதாகவும், பெரும்பான்மை இனத்தை சேர்ந்த கடைகளில் இவர்களுக்கு பொருட்கள் விற்கப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. தாங்கள் அங்கிருந்தும் விரட்டியடிக்கப்படலாம் என இவர்கள் அஞ்சுகிறார்கள். தற்போது சமாதானக் குழுவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சிறுவர்களை மூலதனமாக வைத்து பிழைக்கும் தரகர் கூட்டம்
தோட்டப் பகுதிகளில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகம் முழுமையாக சமூக மேம்பாட்டுக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. பள்ளி செல்லும் வயதில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதிலிருந்து தடுத்து அவர்களை மீட்டெடுத்து புனர்வாழ்வு தருவதற்கு பெரும் போராட்டமே நடத்த வேண்டியுள்ளது. இதற்கு பல துறைசார்ந்த அனைத்து பெரியார்களும் ஒன்று திரண்டு சிறந்ததோர் சிறுவர் உலகை உருவாக்க முன்வர வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இவ்வாறு அமரர் இரா சிவலிங்கத்தின் 9ம் ஆண்டு நினைவு பேருரை நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் எம் வாமதேவன் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் தூரத்திலிருந்து நோக்கும் போது மலையகம் பாரிய அளவில் முன்னேற்றம் அடைந்திருப்பதாகவே தெரிகிறது. இது வெறும் மாயை. நெருங்கி பார்க்கும் போதுதான் உண்மை தெரியும். 14 வயதுவரை கட்டாயக் கல்வி நாட்டின் சட்டத்தில் உள்ளன. மலையகத்தில் இதற்கு முரணாகவே இருக்கிறது. 85சத வீத சிறுவர்கள் பாடசாலைக்கு செல்கின்றனர். 15 சதவீதம் இடைநடுவில் படிப்பை கைவிட்டு எவ்வித தொழிலுக்கும் செல்லாமல் வெறுமனே சுற்றித்திரிந்து பல்வேறு சடூமூகப் பிரச்சினைகளுக்கு காரணமாகின்றனர். நகர் புறங்களில் வீடுகளுக்கும் கடைகளுக்கும் சிற்றூழியம் செய்வதற்கு தோட்டப்புற சிறுவர்களை மிக இலகுவாக பெற்றுக்கொள்ள முடிகிறது. மூலதனம் இல்லாமல் வயிறு வளர்ப்பதற்கு சிறுவர்களை வேலைக்கு அழைத்துச் செல்ல பெரும் தரகர் கூட்டமொன்றே இயங்கி வருகிறது. கல்வி கற்கும் வயதில் சிறுவர் சிறுமியர் அதிலிருந்து திசை திருப்பப்பட்டு பலவித துஷ்பிரயோகங்களுக்கு ஆளாக்கப்படுவது மலையக சமூகத்தின் எதிர்கால மேம்பாட்டுக்கு பாரியதோர் சாபக்கேடாக மாறியுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்த சமூக உணர்வு கொண்ட அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டியது அவசர – அவசிய தேவையாகும் என்றார்.
கண்டி கச்சேரியில் தமிழ் மொழி பணியாளர்கள் எததனை பேர்- அமைச்சர் மகிந்த சமரசிங்க
தமிழ் மொழியும் இந் நாட்டின் அரச கரும மொழியாக சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கண்டி கச்சேரியில் தமிழ் மொழியில் தமிழ் மக்களோடு பணியாற்றக் கூடியவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என கேள்வி எழுப்பினார் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க. அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் என்பதெல்லாம் வெறும் பேச்சளவில் இல்லாமல் செயல் பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டில் சமாதானமும் ஐக்கியமும் நிலவும் என்றார். டிசம்பர் மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ள தேசிய பாதுகாப்புத் தினத்தை கண்டியில் நடத்துவது தொடர்பாக கண்டி கச்சேரி மாவட்ட செயலாளர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இவ்வாறு குறிப்பி;ட்டார். மேலும் உரையாற்றுகையில் தமிழ் மொழியில் கருமமாற்றக் கூடியவர்கள் இல்லையென்றால் தோட்டப்பிரதேச மக்களுக்கு சேவை செய்வது எவ்வாறு? அடிப்படை உரிமைகளையும், மனித உரிமைகளையும் மதித்து அவற்றை வழங்காவிட்டால் நெருக்கடிகளும், ஒற்றுமையின்மையும், பிரிவினை பேதங்களும் ஏற்படும் என்றார்.
கேகாலை மாவட்டம் ருவான்வெல டெஸ்டர்போர்ட் தோட்டத்தில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகறாறு காரணமாக சிங்களவர் ஒருவர் கத்திக்குத்து இலக்காகி மரணமானார். இதனையடுத்து பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் தோட்டக்குடியிருப்புக்களின் மீது கற்களை வீசி தொழிலாளர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதாகவும் இதனையடுத்து அங்கு தொடர்ந்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் நடந்த தோட்டப்பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும் தொழிலாளர்களின் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதோடு அவர்களின் வீடுகளில் இருந்த பெறுமதியான பொருட்களை சூறையாடி சென்றுள்ளனர். இதனால் சுமார் 80 குடும்பங்களைச் சேர்ந்த 250 பேர் அருகிலுள்ள தோட்டங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். தற்காலிகமாக உறவினர்கள் தங்கியுள்ள இவர்கள் இரண்டு நாட்களாக எதுவித பசி பட்டிணியால் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதாகவும், பெரும்பான்மை இனத்தை சேர்ந்த கடைகளில் இவர்களுக்கு பொருட்கள் விற்கப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. தாங்கள் அங்கிருந்தும் விரட்டியடிக்கப்படலாம் என இவர்கள் அஞ்சுகிறார்கள். தற்போது சமாதானக் குழுவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சிறுவர்களை மூலதனமாக வைத்து பிழைக்கும் தரகர் கூட்டம்
தோட்டப் பகுதிகளில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகம் முழுமையாக சமூக மேம்பாட்டுக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. பள்ளி செல்லும் வயதில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதிலிருந்து தடுத்து அவர்களை மீட்டெடுத்து புனர்வாழ்வு தருவதற்கு பெரும் போராட்டமே நடத்த வேண்டியுள்ளது. இதற்கு பல துறைசார்ந்த அனைத்து பெரியார்களும் ஒன்று திரண்டு சிறந்ததோர் சிறுவர் உலகை உருவாக்க முன்வர வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இவ்வாறு அமரர் இரா சிவலிங்கத்தின் 9ம் ஆண்டு நினைவு பேருரை நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் எம் வாமதேவன் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் தூரத்திலிருந்து நோக்கும் போது மலையகம் பாரிய அளவில் முன்னேற்றம் அடைந்திருப்பதாகவே தெரிகிறது. இது வெறும் மாயை. நெருங்கி பார்க்கும் போதுதான் உண்மை தெரியும். 14 வயதுவரை கட்டாயக் கல்வி நாட்டின் சட்டத்தில் உள்ளன. மலையகத்தில் இதற்கு முரணாகவே இருக்கிறது. 85சத வீத சிறுவர்கள் பாடசாலைக்கு செல்கின்றனர். 15 சதவீதம் இடைநடுவில் படிப்பை கைவிட்டு எவ்வித தொழிலுக்கும் செல்லாமல் வெறுமனே சுற்றித்திரிந்து பல்வேறு சடூமூகப் பிரச்சினைகளுக்கு காரணமாகின்றனர். நகர் புறங்களில் வீடுகளுக்கும் கடைகளுக்கும் சிற்றூழியம் செய்வதற்கு தோட்டப்புற சிறுவர்களை மிக இலகுவாக பெற்றுக்கொள்ள முடிகிறது. மூலதனம் இல்லாமல் வயிறு வளர்ப்பதற்கு சிறுவர்களை வேலைக்கு அழைத்துச் செல்ல பெரும் தரகர் கூட்டமொன்றே இயங்கி வருகிறது. கல்வி கற்கும் வயதில் சிறுவர் சிறுமியர் அதிலிருந்து திசை திருப்பப்பட்டு பலவித துஷ்பிரயோகங்களுக்கு ஆளாக்கப்படுவது மலையக சமூகத்தின் எதிர்கால மேம்பாட்டுக்கு பாரியதோர் சாபக்கேடாக மாறியுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்த சமூக உணர்வு கொண்ட அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டியது அவசர – அவசிய தேவையாகும் என்றார்.
கண்டி கச்சேரியில் தமிழ் மொழி பணியாளர்கள் எததனை பேர்- அமைச்சர் மகிந்த சமரசிங்க
தமிழ் மொழியும் இந் நாட்டின் அரச கரும மொழியாக சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கண்டி கச்சேரியில் தமிழ் மொழியில் தமிழ் மக்களோடு பணியாற்றக் கூடியவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என கேள்வி எழுப்பினார் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க. அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் என்பதெல்லாம் வெறும் பேச்சளவில் இல்லாமல் செயல் பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டில் சமாதானமும் ஐக்கியமும் நிலவும் என்றார். டிசம்பர் மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ள தேசிய பாதுகாப்புத் தினத்தை கண்டியில் நடத்துவது தொடர்பாக கண்டி கச்சேரி மாவட்ட செயலாளர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இவ்வாறு குறிப்பி;ட்டார். மேலும் உரையாற்றுகையில் தமிழ் மொழியில் கருமமாற்றக் கூடியவர்கள் இல்லையென்றால் தோட்டப்பிரதேச மக்களுக்கு சேவை செய்வது எவ்வாறு? அடிப்படை உரிமைகளையும், மனித உரிமைகளையும் மதித்து அவற்றை வழங்காவிட்டால் நெருக்கடிகளும், ஒற்றுமையின்மையும், பிரிவினை பேதங்களும் ஏற்படும் என்றார்.
மின்சார ஒழுக்கினால் தொடரும் அகதி வாழ்வு
தொழிலாளர்களின் குடியிருப்பு லயன்களில் இணைக்கப்பட்டுள்ள மின்சார ஒழுக்கில் லயன்கள் எரிவதும் அங்கு குடியிருக்கும் மக்கள் அகதிகளாகுவதும் தொடர் நிகழ்வாகிவிட்டது. இவ்வாறு பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்களில் உடைமைகள், ஆவணங்கள், தாங்கள் சேர்த்து வைத்துள்ளவைகள் அனைத்தையும் இழந்துள்ளனர். இந்த தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குறிப்பாக
பத்தனை மவுன்ட்வேர்ணன் மேற்பிரிவில் - 20 குடும்பங்கள் நான்கு வருடங்களாகவும், மடக்கும்பரை புதுக்காடு – 20 குடும்பங்கள் 19 மாதங்களாகவும், மன்றாசி என்பீல்ட் - 24 குடும்பங்கள் 11 மாதங்களாகவும், பொகவந்தலாவ சென் ஜோன் டில்லரி 09 குடும்பங்கள் 12 மாதங்களாகவும், கொட்டக்கலை பளிங்குமலை – 20 குடும்பங்கள் 20 மாதங்களாகவும் தங்கள் இருப்பிடங்களை இழந்துள்ளனர். இவர்கள் எவ்வித அடிப்படை தேவைகளும் இல்லாது தற்காலிக குடில்களில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான விபத்துக்களுக்கு அரசியல்வாதிகளும், தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்தி மின்சாரத்தை பெறல், முறையான மின்சார இணைப்பை கொண்டிருக்காமை போன்ற காரணிகள் ஆகும். இதற்கு மின்சார சபையும் பொறுப்பேற்க வேண்டும். எதிர் வரும் காலங்களில் இவ்வாறு அகதிகளாக வாழும் மக்களுக்கு உரிய வீட்டு வசதிகள் செய்து கொடுக்கவும், முறையான மின்சார வசதியை வழங்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கிறார்கள்.
தொழிலாளர்களின் குடியிருப்பு லயன்களில் இணைக்கப்பட்டுள்ள மின்சார ஒழுக்கில் லயன்கள் எரிவதும் அங்கு குடியிருக்கும் மக்கள் அகதிகளாகுவதும் தொடர் நிகழ்வாகிவிட்டது. இவ்வாறு பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்களில் உடைமைகள், ஆவணங்கள், தாங்கள் சேர்த்து வைத்துள்ளவைகள் அனைத்தையும் இழந்துள்ளனர். இந்த தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குறிப்பாக
பத்தனை மவுன்ட்வேர்ணன் மேற்பிரிவில் - 20 குடும்பங்கள் நான்கு வருடங்களாகவும், மடக்கும்பரை புதுக்காடு – 20 குடும்பங்கள் 19 மாதங்களாகவும், மன்றாசி என்பீல்ட் - 24 குடும்பங்கள் 11 மாதங்களாகவும், பொகவந்தலாவ சென் ஜோன் டில்லரி 09 குடும்பங்கள் 12 மாதங்களாகவும், கொட்டக்கலை பளிங்குமலை – 20 குடும்பங்கள் 20 மாதங்களாகவும் தங்கள் இருப்பிடங்களை இழந்துள்ளனர். இவர்கள் எவ்வித அடிப்படை தேவைகளும் இல்லாது தற்காலிக குடில்களில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான விபத்துக்களுக்கு அரசியல்வாதிகளும், தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்தி மின்சாரத்தை பெறல், முறையான மின்சார இணைப்பை கொண்டிருக்காமை போன்ற காரணிகள் ஆகும். இதற்கு மின்சார சபையும் பொறுப்பேற்க வேண்டும். எதிர் வரும் காலங்களில் இவ்வாறு அகதிகளாக வாழும் மக்களுக்கு உரிய வீட்டு வசதிகள் செய்து கொடுக்கவும், முறையான மின்சார வசதியை வழங்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்திய தூதரக உதவியுடன் 750 ஆசிரியர்களுக்கு பயிற்சி
மத்திய மாகாண தமிழ்க்கல்வி அமைச்சு இந்திய உதவித் தூதரகத்தின் உதவியுடன் கடந்த மூன்று வருட காலத்தில் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த 750 ஆசிரியர்களுக்கு குறுகியகால ஆசிரிய பயிற்சிகளை வழங்கியுள்ளதாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எஸ். அருள்சாமி தெரிவித்துள்ளார். கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கே இந்திய கல்வி நிபுணர்களின் மூலம் பயிற்சி வழங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மத்திய மாகாண தமிழ்க்கல்வி அமைச்சு இந்திய உதவித் தூதரகத்தின் உதவியுடன் கடந்த மூன்று வருட காலத்தில் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த 750 ஆசிரியர்களுக்கு குறுகியகால ஆசிரிய பயிற்சிகளை வழங்கியுள்ளதாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எஸ். அருள்சாமி தெரிவித்துள்ளார். கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கே இந்திய கல்வி நிபுணர்களின் மூலம் பயிற்சி வழங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Sunday, September 14, 2008
றுவான்வெல தோட்டத்தில் மோதல் ஒருவர் பலி மக்கள் அச்சத்தில் கோவில்களில் தஞ்சம்
றுவான்வெல செஸ்ரபோர்ட் தோட்டத்தில் நேற்று முன்தினம் (13-09-2008) சனிக்கிழமை தமிழர் ஒருவருக்கும் சிங்களவர் ஒருவருக்குமிடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறினால் சிங்களவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமானார். இதையடுத்து நேற்றுக் காலை அந்தத் தோட்டத்திற்கு திரண்டு வந்த சிங்களவர்கள் தமிழர்கள் மீது மோசமான தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், இதனால் படுகாயமடைந்த தோட்டத் தொழிலாளி ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் றுவான்வெல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பலர் இந்தத் தாக்குலில் காயமடைந்துள்ளனர். இத் தோட்டத்திலுள்ள 80குடும்பங்களைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட மக்கள் வீடு வாசல்களை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர். பெண்கள் அப்பகுதியிலுள்ள மாரியம்மன் கோவிலிலும் ஆண்கள் றப்பர் தோட்டங்களினுள்ளும் தஞ்சமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதையடுத்து அங்கு விரைந்த பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு மூன்று தமிழர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிறப்பத்தாட்சிப் பத்திரம் பெற இ.தொ.கா ஏற்பாடு
பிறப்பு அத்தாட்சி பத்திரங்கள் இல்லாத காரணத்தினால் மலையக தோட்டத் தொழிலாளர்களில் 30 சதவீதமானவர்கள் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. மலையக தோட்டத் தொழிலாளர்களில் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அதனை பெற்றுக்கொடுக்க இலங்கைத் தொழிலாளர் காங்கிஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் முதல் கட்டமாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி,பிறப்பு அத்தாட்சி பத்திரங்களை பெற்றுக் கொடுக்க ஆவண செய்யும் பொருட்டு, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா மற்றும் பொது நிர்வாக அமைச்சர் கரு ஜயசூரியா ஆகியோரின் ஒப்புதலுடன், அமைச்சரவை பத்திரமொன்று அண்மையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானால் முன் வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி ஒரு மாத காலத்தினுள் விசேட ஏற்பாட்டின் கீழ் நாட்டிலுள்ள அனைத்து தோட்ட மக்களுக்கும் அவர்களது பிறப்பு அத்தாட்சி பத்திரங்கள் பெற்றுக் கொடுக்கப்படும் பதிவு செய்யப்படாத பிறப்புகள், தேடிக் கண்டு பிடிக்க முடியாத பிறப்பு அத்தாட்சி பத்திரங்களை புதிதாகப் பதியவும் நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
இது குறித்து அறிவுத்தும் கூட்டமொன்று கடந்த சனிக்கிழமை காலை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கொட்டகலை காங்கிரஸ் தொழிற் கூடத்தில் நடைபெற்றபோது கொழும்பு பதிவாளர், திணைக்கள அதிகாரிகள், ட்ரஸ்ட் நிறுவன அதிகாரி, இ.தொ.கா. பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களும் கலந்து கொண்டனர். பிறப்பு அத்தாட்சி பத்திரங்கள் இல்லாதவர்கள், தத்தமது தோட்ட குடும்பநல அதிகாரிகளை அணுகி தமது விபரங்களை கையளிக்குமாறு வேண்டப்படுகின்றனர். முதலில் தோட்டத் தொழிலாளர்கள் தமது விபரங்களை தெரிவிக்க வேண்டும். இதற்கு புறம்பான படிவமொன்று விநியோக்கப்பட்டுள்ளது.
றுவான்வெல செஸ்ரபோர்ட் தோட்டத்தில் நேற்று முன்தினம் (13-09-2008) சனிக்கிழமை தமிழர் ஒருவருக்கும் சிங்களவர் ஒருவருக்குமிடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறினால் சிங்களவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமானார். இதையடுத்து நேற்றுக் காலை அந்தத் தோட்டத்திற்கு திரண்டு வந்த சிங்களவர்கள் தமிழர்கள் மீது மோசமான தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், இதனால் படுகாயமடைந்த தோட்டத் தொழிலாளி ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் றுவான்வெல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பலர் இந்தத் தாக்குலில் காயமடைந்துள்ளனர். இத் தோட்டத்திலுள்ள 80குடும்பங்களைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட மக்கள் வீடு வாசல்களை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர். பெண்கள் அப்பகுதியிலுள்ள மாரியம்மன் கோவிலிலும் ஆண்கள் றப்பர் தோட்டங்களினுள்ளும் தஞ்சமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதையடுத்து அங்கு விரைந்த பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு மூன்று தமிழர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிறப்பத்தாட்சிப் பத்திரம் பெற இ.தொ.கா ஏற்பாடு
பிறப்பு அத்தாட்சி பத்திரங்கள் இல்லாத காரணத்தினால் மலையக தோட்டத் தொழிலாளர்களில் 30 சதவீதமானவர்கள் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. மலையக தோட்டத் தொழிலாளர்களில் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அதனை பெற்றுக்கொடுக்க இலங்கைத் தொழிலாளர் காங்கிஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் முதல் கட்டமாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி,பிறப்பு அத்தாட்சி பத்திரங்களை பெற்றுக் கொடுக்க ஆவண செய்யும் பொருட்டு, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா மற்றும் பொது நிர்வாக அமைச்சர் கரு ஜயசூரியா ஆகியோரின் ஒப்புதலுடன், அமைச்சரவை பத்திரமொன்று அண்மையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானால் முன் வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி ஒரு மாத காலத்தினுள் விசேட ஏற்பாட்டின் கீழ் நாட்டிலுள்ள அனைத்து தோட்ட மக்களுக்கும் அவர்களது பிறப்பு அத்தாட்சி பத்திரங்கள் பெற்றுக் கொடுக்கப்படும் பதிவு செய்யப்படாத பிறப்புகள், தேடிக் கண்டு பிடிக்க முடியாத பிறப்பு அத்தாட்சி பத்திரங்களை புதிதாகப் பதியவும் நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
இது குறித்து அறிவுத்தும் கூட்டமொன்று கடந்த சனிக்கிழமை காலை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கொட்டகலை காங்கிரஸ் தொழிற் கூடத்தில் நடைபெற்றபோது கொழும்பு பதிவாளர், திணைக்கள அதிகாரிகள், ட்ரஸ்ட் நிறுவன அதிகாரி, இ.தொ.கா. பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களும் கலந்து கொண்டனர். பிறப்பு அத்தாட்சி பத்திரங்கள் இல்லாதவர்கள், தத்தமது தோட்ட குடும்பநல அதிகாரிகளை அணுகி தமது விபரங்களை கையளிக்குமாறு வேண்டப்படுகின்றனர். முதலில் தோட்டத் தொழிலாளர்கள் தமது விபரங்களை தெரிவிக்க வேண்டும். இதற்கு புறம்பான படிவமொன்று விநியோக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)