Monday, September 7, 2009



Plantation workers on ‘non-cooperation-campaign’ to up wages



By Dilshani Samaraweera



Plantation workers are on a ‘non-cooperation-campaign’ following unsatisfactory wage talks on Monday. The three trade unions that are signatories to the plantation sector Collective Agreement and the Employers Federation of Ceylon (EFC), representing the plantation companies, are due to meet tomorrow (September 7) for another pow-wow
We have declared a non-cooperation-campaign. This is something similar to a work-to-rule campaign,” said the Secretary General of the Joint Plantation Trade Union Centre, O A Ramiah. The Joint Plantation Trade Union Centre is one of the three signatories to the plantation sector Collective Agreement.


ஆயிரக்கணக்கான கிலோ தேயிலை அரைக்கப்படாமல் தேக்கம்

பெருந்தோட்ட மலையக தொழிலாளர்களின் ஒத்துழையாமை போராட்டம் தொடர்கின்றதைத் தொடர்ந்து தேயிலைத் தோட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் அரைக்கப்படாத நிலையில்,ஆயிரக்கணக்கான கிலோ தேயிலை கொழுந்துகள் குவிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 500 ரூபா ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரியே இந்த ஒத்துழையாமை போராட்டம் நடைபெற்று வருகிறது. தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது 290 ரூபா நாளாந்த ஊதியமாக வழங்கப்படுகிறது.
மலையகத்தில்
தொழிலாளர்களின் சம்பளப் போராட்டம்

இலங்கையில் மலையக பகுதியில் சம்பள உயர்வு கோரி இரண்டரை லட்சம் தோட்டத் தொழிலாளர்கள் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்திருப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்திருக்கின்றன. இதனால் தேயிலை உற்பத்தியும் ஏற்றுமதியும் பாதிக்கப்படக் கூடும் என்று தோட்ட முதலாளிமார் சம்மேளனம் கூறியிருக்கிறது. சீனா, இந்தியா மற்றும் கென்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக இலங்கை உலகில் நான்காவது மிகப்பெரிய தேயிலை உற்பத்தி நாடாகத் திகழ்கிறது. ஆனால், தொழிலாளர்களின் இந்த ஒத்துழையாமை இயக்கம் அந்த உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


1992 இல் இலங்கையின் பெருந்தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டன.அதனையடுத்து 1992 முதல் 2002 வரையிலான காலப்பகுதியில் பெருந்தோட்டத்துறையில் வறுமை 22 வீதத்தில் இருந்து 32 வீதமாக அதிகரித்ததாக கூறுகிறார் இலங்கை தொழிலாலர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரான தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியானதைத் தொடர்ந்து அவர்களுடைய சம்பளம் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோருகின்றன.

நாளொன்றுக்கு 500 இலங்கை ரூபாய்கள் ஒட்டுமொத்த சம்பளமாக ஒரு தொழிலாளிக்கு வழங்கப்பட வேண்டும் என்பது தொழிற்சங்கங்களின் கோரிக்கை. அதற்கு முதலளிமார் சம்மேளனம் இணங்காத காரணத்தினாலேயே தொழிலாளர்கள் ஒத்துழையாமை இயக்கத்தில் இறங்கியுள்ளதாக கூறுகிறார் இ.தொ.கா தலைவர் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான்.


பி.பி.சி