Monday, November 10, 2008

மலையக அலகு தொடர்பாக ஆராய முடிவு

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான தீர்வு திட்டத்தை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவில் “மலையக அலகு” தொடர்பில் இம் முறை ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வகட்சி பிரதிநிதிகளின் 87வது கூட்டம் இக் குழுவின் தலைவரான திஸ்ஸ விதாரண தலைமையில் கூடவுள்ள இக் கூட்டத்தில் இ.தொ.கா முன்வைத்துள்ள மலையக அலகு தொடர்பாக ஆராயப்படவுள்ளது.

இது தொடர்பாக மலையக மக்கள் முன்னணி இந்த யோசனைக்கு தமது தரப்பில் யோசனைகளை முன் வைப்பதற்கு கால அவகாசம் கோரியுள்ளது. இதே வேளை மேலக மக்கள் முன்னணி தமது தரப்பு யோசனைகளை முன் வைப்பதற்கு கால அவகாசம் கோரியிருந்தது.

பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பிலான தீர்வுத் திட்டத்தை தயாரிப்பதில் சிக்கல்களை எதிர் கொண்டுள்ள நிலையில் இ.தொ.கா முன் வைக்கப்பட்ட யோசனைகள் மேலும் இழுபறியை ஏற்படுத்தும் என்பதனால் மலையகத்துக்கு வெளியே வாழ்கின்றவர்களை உள்ளடக்கி கொள்ளும் வகையிலான தீர்வுத் திட்டத்தை சமர்ப்பிக்குமாறு சர்வ கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவில அங்கம் வகிக்கின்ற கட்சிகளை சேர்ந்த அமைச்சர்களான விஸ்வ வர்ணபாலா, திஸ்ஸ விதாரண மற்றும் பி. துயாரத்ன ஆகியோர் மலையக அலகு யோசனைக்கு கடுமையான எதிர்ப்புக்களை தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.