Friday, December 11, 2009

தொழிலாளர் உழைப்பில் மின் உற்பத்தி
லிந்துலை மெராயா நகரத்திலிருந்து 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது எல்ஜின் தோட்டத்தின் மிக உயரமான இரு மலைத் தொடரையும் கிழக்குப்புற எல்லையாக அம்பேவலை காடும் அமைந்துள்ளது. எல்ஜின் நீர்வீழ்ச்சியை கடந்து பாயும் எல்ஜின் ஓயா எல்ஜின் தோட்டத்திற்கு ஊடாகவே பாய்கின்றது. இத்தோட்டமானது வெயில், மழைக் காலங்களில் புவியியல் அமைவிடம் காரணமாக இருள் மயமானதாக காட்சியளிக்கின்றது.

குண்டும் குழியுமாகக் காணப்படும் பாதைகளுடன் உட்கட்டமைப்பு வசதிகள் எதுவுமற்ற நிலையில் சுமார் 200 குடும்பங்களைக் கொண்ட எல்ஜின் தோட்டத்தில் மின்சார வசதிகள் இல்லை. கிட்டத்தட்ட ஐந்து தலைமுறையாக இங்கு வாழ்ந்து வரும் மக்கள் இருளில் மூழ்கியே வாழ்ந்து வருகின்றனர்.

எந்தவிதமான பயனும் பெறாத நிலையில் பல அரசியல்வாதிகளிடம் தீர்வு பெற்றுத் தர வேண்டியும் பயன் கிட்டவில்லை. இனியும் மின்சாரம் கிடைக்காது என்ற விரக்தியில் இம்மக்கள் வாழ்ந்து வந்தனர்.

2005ஆம் ஆண்டு வரை தொடர்ந்த இந்நிலை அந்த ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கையில் நடுத்தர சிறிய கிராமிய மின் உற்பத்தி நிலைய நிர்மாணப் பணிகளைச் செயற்படுத்தும் தனியார் நிறுவனம் தொடர்பாக மக்கள் கேள்விப்பட்டனர். அவர்களுடன் தொடர்பு கொண்ட மக்கள், எல்ஜின் மின்சார கூட்டுறவு சங்கம் ஒன்றை நிறுவி பணிகளை ஆரம்பித்தனர்.

எல்ஜின் ஓயாவிற்கு குறுக்கே அணைக்கட்டினை அமைப்பதும் இதிலிருந்து நீர்படுகையினூடாக (றுயவநச டீநன) நீரைச் செலுத்தி மிகுதி தூரத்திற்கு குழாய்களில் நீரைச் செலுத்தி எல்ஜின் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறிய மின் உற்பத்தி நிலையத்திற்கு நீரை கொண்டு வந்து சேர்ப்பது இத்திட்டத்தின் இலக்காக அமைந்தது.

இதற்கு தொழில்நுட்ப ஆலோசனைகளையும் திட்ட முன்மொழிவையும் தனியார் நிறுவனமொன்றிடம் பெற்று சிரமதானம் மூலம் 70மூ வீதமான பணிகளை தற்போது மக்கள் நிறைவேற்றியுள்ளனர். இச்சிறிய மின் உற்பத்தி நிலையத்திலிருந்து 25 ஆறு மின்சாரம் பெற எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மின்சாரம் எல்ஜின் தோட்ட 125 வீடுகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட ஏற்பாடாகியுள்ளது. இத்திட்ட பணிகள் கடந்த 4 வருடங்களில் மக்களின் உழைப்பும் பெருந்தொகையான பணமும் இதற்காக செலவிடப்பட்டுள்ளது. 300 தொழிலாளர்கள் 500 நாட்கள் இதற்காக சிரமதான பணிகளில் ஈடுபட்டனர். இதுவரை நிறைவேற்றப்பட்ட பணிகளுக்காக கிட்டதட்ட 45 லட்சம் பணத்தொகை செலவிடப்பட்டது

நன்றி - வீரகேசரி