Thursday, October 8, 2015

பஸ்சுக்காக காத்திருக்கும் நயாபான மக்கள்

“இன்னும் 8 அடி கம்ராலே தான் இருக்காங்க, அதுக்குள்ள தான் எல்லாருமே வாழ்ந்துட்டு இருக்காங்க. அம்மா, அப்பா, தம்பி, தங்கச்சினு எல்லாரும் அந்த காம்ராகுள்ள தான் படிக்கனும், சாப்டனும் மத்த எல்லா வேலைகளையும் செஞ்சிக்கனும். கொஞ்சம் பேர்க்கு கரன்ட் இருக்கு, கொஞ்சம் பேர்க்கு இல்ல. மழை வந்துச்சினா ஒரு சட்டி பானைய அல்லது வாலிய எடுத்து வச்சிட்டு தான் தூங்குவம். இங்கு எதுவுமே எங்களுக்கு சொந்தம் இல்ல. வீட்டு தின்னைய தான்டினா பிள்ளைங்களுக்கு விளையாட கூட இடம் இல்ல. வீட ஒடச்சி கட்டவோ, வீட்டுக்கு முன்னால இருக்கிற மரத்த வெட்டவோ எதுக்குமே எங்களுக்கு உரிம இல்ல” – என்று தன்னுடைய ஊர் மக்கள் வாழும் வாழ்க்கை குறித்து (மலையக மக்களின் வாழ்க்கை) என்னிடம் மனம் வெறுத்த நிலையில் பேசிக்கொண்டிருந்த தவனேஸ் என்ற இளைஞனின் பேச்சை கேட்டுக் கொண்டே நான் அந்த மண்டபத்தினுள் நுழைந்தேன்.

மலையகம் என்றாலே அழகுக்கு குறைவில்லை. மலைகளும் மலை சார்ந்த தோட்டங்களும் எங்கு சென்றாலும் மீண்டும் மீண்டும் அவ்விடத்திற்கு செல்லத் தோன்றும். ஒவ்வொரு முறையும் நான் வேலைப்பார்க்கும் நிறுவனத்தின் வேலைத்திட்டத்திற்காக கிராமங்களுக்கும் தோட்டங்களுக்கும் போவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் நயாபான என்ற தோட்டத்திற்கு போக நேர்ந்தது. கம்பளை நகரிலிருந்து 15 கி.மீ தூரத்தில் இருக்கும் தோட்டமே இது.

கம்பளையில் எனது நண்பனை சந்தித்து நான் போகவிருக்கும் தோட்டம் குறித்து தெரிவித்தேன். “அங்கு போக பஸ் இல்லை” – உடனே அவன் வாயில் இருந்த பதில் இது. சரி ஆட்டோவுல போவோம் என்று புறப்பட்டோம். பயணிக்க ஆரம்பித்து ஒரு மணித்தியாலத்தின் பின்னர்தான் அந்தத் தோட்டத்தை நெருங்கினோம்.

ஒருமாதிரியாக தோட்டத்தைச் சென்றடைந்தோம். அங்கு நண்பரின் உதவியுடன் வேலைத்திட்டத்திற்காக கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தேன். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இளைஞர்கள் வந்திருந்தனர். இடைவிடாமல் பெய்துகொண்டிருக்கும் மழையினால்தான் வரவில்லை போல. மழை கொஞ்சம் ஓய ஒவ்வொருவராக வந்துகொண்டிருந்தனர்.

இளைஞர்கள் அனைவரும் வருகை தந்ததன் பின்னர் என்னுடன் வருகை தந்த சக நண்பர் நாங்கள் வந்ததற்கான காரணத்தை கூறி கலந்துரையாடலை ஆரம்பித்தார். தோட்டத் தலைவரும் தபால் உத்தியோகத்தர் ஒருவரும் அமர்ந்திருந்தார்கள்.

நண்பர் வந்த நோக்கத்தை கூறி சிறிது நேரத்திலேயே உங்களுடைய தோட்டத்தில் காணப்படும் பிரதான பிரச்சினைகள் என்ன என்று கேட்டார். சுமார் 25 இளைஞர்கள் ஒன்றாக அமர்ந்திருந்த அந்தக் கூட்டத்தில் இருந்து மனோஜ் என்ற இளைஞன் எழும்பினான். வயது 18 இருக்கும், இம்முறை தான் உயர்தர பரீட்சை எழுதுகிறானாம். எழுந்த வேகத்திலேயே பேச ஆரம்பித்துவிட்டான், எங்களுடைய தோட்டத்தில் இருக்கும் பிரதான பிரச்சினையே பஸ்தான் என்று ஆரம்பித்தான்.

“எங்கட தோட்டத்துக்கு சிடிபி பஸ் வந்து 20 வருஷங்களுக்கு மேல ஆகுது. எங்களுக்கு தெரிஞ்சி இந்த ஊருக்கு சிடிபி பஸ் வந்ததே இல்ல. அப்படியே பஸ் வந்தாலும் ஒரு நாள், ரெண்டு நாள் மட்டும்தான் வேல செய்யும். இல்லன்னா வார பஸ் வழியில எங்கையாவது ஒடஞ்சிடும். அங்க இருந்து நாங்க வீல் புடிச்சிதான் எங்க ஊருக்கு வரனும். ஒரே ஒரு பிரைவட் பஸ் இங்க வேல செய்து. காலைல 6.30 மணிக்கு ஊர்ல இருந்து இந்த பஸ்ஸ எடுப்பாங்க, அதுவும் சனம் நெரஞ்சா மட்டும் தான். அப்படியே போனாலும் பாரதெக சந்தி வரைக்கும்தான் போகும். அதுக்கு மேல பஸ் இல்ல. நுவரெலியா பக்கம் பஸ் வந்தா, அதுலதான் போகனும். ஒரு நாளைக்கு ரெண்டுதரம் தான் இந்த பஸ்சும் வேல செய்யும். 6.30 மணிக்கு போர இந்த பிரைவட் பஸ்சுலதான் கம்பல கண்டினு எல்லா இடங்களுக்கும் வேலைக்கு போறவங்க போவாங்க. அந்த பஸ்லயே தான் கம்பள, புஸ்ஸல்லாவைல இருக்க தமிழ் ஸ்கூலுக்கு போர பிள்ளைங்களும் போகனும். சில நேரங்கள்ல பஸ் நெரஞ்சிட்டா ஸ்கூல் போர பிள்ளைங்களுக்கு அந்த பஸ்ல போகவே கிடைக்காது, இந்த நிலைதான் இப்பவரைக்கும் எங்களுக்கு இருக்கிற பிரச்சினை”.

மூச்சுவிடாமல் பேசியவன், கொஞ்சம் நிறுத்தி மீண்டும் ஆரம்பித்தான். பஸ் பிரச்சினையால் நிறைய பாதிக்கப்பட்டவன் போல.

“கம்பல டவுன்ல இருந்து 15 கி.மீ தூரத்துலதான் நாங்க இருக்கம். ஸ்கூல் பிள்ளைங்க பஸ்ஸ விட்டுடா வீல்ல தான் போகனும். அப்டியே போரதுனாலும் 300 ரூபா குடுத்து தான் போகனும். எந்தனாலும் வீல்ல போர அளவுக்கு எங்கட அம்மா அப்பாவுக்கு வருமானம் இல்ல. இதனால ஊர்ல இருக்க பெரியவங்க டிப்போல போய்ட்டு பஸ் கேட்டாங்க, பலமுறை கேட்டும் கூட, பஸ் இல்ல அல்லது பஸ் டிரைவர் இல்ல எண்டு சாக்கு போக்கு சொல்லி அனுப்பிடுராங்க. தொடர்ந்து இதுதான் நடக்குது, நாங்களும் எவ்வளவோ பேசி பார்த்துட்டம், ஒரு முடிவும் இல்ல. இப்போ மாத்திரம் இல்ல, பல வருடமா தொடர்ந்து இருக்கிற பிரச்சின இது தான்” என்று முடித்தார் அந்த இளைஞன்.

குளிருக்கு பஞ்சம் இல்லாத தோட்டம் போல. மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. கண் முன்னே இருக்கும் இளைஞர்களை தெளிவாக பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு பணி மூட்டம். மாலை 3.00 மணியே ஆகினாலும் கூட மாலை 6.00 மணியை போல இருள் சூழ்ந்து கொண்டது.

இவ்வாறு மனோஜ் பேசி முடிக்கும் போதே தபால் உத்தியோகத்தர் சுமார் 28 வயது மதிக்க தக்க நபர் இன்னும் ஒரு முக்கியமான பிர்ச்சினை இருக்கு என்று பேச ஆரம்பித்தார்.

“இந்த தோட்டத்துல இருக்க பிரதான பிரச்சினை வேலை இல்லாத பிரச்சினைதான். இங்க இருக்குர இளைஞர்களோட அம்மா, அப்பா எல்லாருமே தோட்டத்துல தான் வேலை செய்றாங்க தொடர்ந்து 22 நாள் வேலை செஞ்ஞா மாத்திரம் தான் 600 ரூபா சம்பளம் கொடுப்பாங்க. 21 நாள் வேலை செஞ்ஞாலும் கூட 450 ரூபா தான் கிடைக்கும். அதுவும் தோட்டத்த பொருத்தவரைல ஒவ்வொரு மாதமும் 22 நாள் வேலை இருக்கும் என்டு சொல்லவே முடியாது”.

“கடந்த மாதம்தான் நாங்க ரொம்பவே கஷ்டத்த அனுபவிச்ச மாசம். இந்த அரசியல் வாதிங்க பேச்ச கேட்டு இங்க உள்ளவங்க எல்லாருமே மெதுவா வேலைய செஞ்சிட்டு போனாங்க. கட்டாயமா சம்பளத்த கூட்டுவாங்க என்ற நம்பிக்கைல. ஆனா, சம்பளம் கூட்டப்படவும் இல்ல, மெதுவா வேலை செஞ்சவங்க யாருக்குமே கடைசி வரைக்கும் அந்த மாதத்துக்கான சம்பளமும் கிடைக்கவே இல்ல”.

“எங்கட தோட்டத்துல இருந்து வெளியில டவுனுக்கு வேலைக்கு போரதுனாலும் பஸ் பிரச்சினைதான். ஒரு நாள் போனா ஒரு நாள் போக கிடைக்காது, பஸ் இருக்காது. தொழில், வீடு, கல்வி என எல்லா வகையிலும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்ற தோட்டமே இந்த நயாபான தோட்டம்” என்று கூறி முடித்தார் தபால் உத்தியோகத்தர்.

இவ்வாறு பிரச்சினைகளையும் வினவிக் கொண்டு எங்களுடைய வேலைத்திட்டத்தினையும் தெளிவுபடுத்திக் கொண்டு எவ்வித எதிர்பார்ப்பையும் அவர்களுக்கு வழங்காமல் நாங்கள் அவ்விடத்தில் இருந்து விடைபெற்று, அருகில் இருக்கும் இரு தோடங்களுக்கும் சென்றுவிட்டு மாலை 4.00 மணியளவில் நயாபான தோட்டம் ஊடாகவே சென்றோம்.

அப்போது நயாபான தோட்டத்திற்குச் செல்லும் பஸ்ஸைக் கண்டேன். அசைந்து அசைந்து மனித வேகத்தில் நடந்து வந்துகொண்டிருந்தது. அந்த பஸ்ஸில் அதிகபட்சமாக 25 அல்லது 30 பேர் மாத்திரமே செல்ல முடியும். ஆனால், 60இற்கும் அதிகமானோர் அடைப்பட்டு, தொங்கிக்கொண்டு செல்வதைக் கண்டேன். அளவுக்கு அதிகமான சுமையுடன் செல்லும் அந்த பஸ்வண்டியில் மிகவும் சிரமத்துக்கு மத்தியிலேயே எங்களை தாண்டி சென்றது. இதுதான் இந்த நயாபான தோட்ட மக்களின் பிரதான பிரச்சினை.

மலையக தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம். நயாபான மக்கள் விதிவிலக்கல்ல. ‘மாற்றம்’ அரசில் அங்கம் வகித்துள்ள மலையக அரசியல்வாதிகள் இவற்றையும் தேடிப்பார்ப்பார்களா?

எம். பிரதீபன்

தல­வாக்­கலை ரத்­னீ­ல­கல வாசி­க­சாலை கட்­ட­டத்தை மக்கள் பாவ­னைக்கு வழங்கவும்

மேல்­கொத்­மலை மீள்­கு­டி­யேற்­றத்­திட்­டத்தின் கீழ் தல­வாக்­கலை ரத்­னீ­ல­கல குடி­யி­ருப்­புத்­திட்­டத்தில் அமைக்­கப்­பட்­டுள்ள வாசி­க­சாலை கட்­ட­டத்தை மக்கள் பாவ­னைக்குக் கைய­ளிக்­கு­மாறு மலை­யக தொழி­லாளர் முன்­னணி கோரிக்கை விடுத்­துள்­ளது.
 
மேல் கொத்­மலை நீர்மின் திட்­டத்தின் கீழ் இடம்­பெ­யர்ந்த ஹொலிரூட், ரத்­னீ­ல­கல பிரிவை சேர்ந்த தொழி­லா­ளர்­களின் நலன் கருதி அமைக்­கப்­பட்ட புதிய குடி­யி­ருப்புத் தொகு­தியில் புதிய வாசி­க­சாலை கட்­டடம் ஒன்று அமைக்­கப்­பட்­டது.
 
குடி­யி­ருப்­புக்கள் 2009 ஆம் ஆண்­டி­லேயே மக்கள் பாவ­னைக்­காக கைய­ளிக்­கப்­பட்டு விட்ட போதிலும் வாசி­க­சாலை கட்­டடம் இது­வரை மக்கள் பாவ­னைக்­காக கைய­ளிக்­கப்­ப­ட­வில்லை.
எனவே தாம­த­மின்றி மேற்­படி கட்­டடத்தை மக்­களின் பாவ­னை க்­காக கைய­ளிக்­கு­மாறு தோட்ட நிர்­வாகி மேல் கொத்­மலை திட்ட அதி­காரி, மாவட்ட மற்றும் பிர­தேச செய­லா­ளர்கள் மின்­சக்தி எரி­பொருள் அமைச்சர் ஆகி­யோ­ருக்கு கடிதங்களை அனுப்பியுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலவாக்கலை மாநில நிர்வாக அதிகாரி எஸ். வரதராஜன் தெரிவித்தார்.

மேலதிக பிரதேச சபைகள்

நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் மேல­திக பிர­தேச சபைகள் உரு­வாக்­க­ப்பட வேண்டும். நாட்டில் பிற பகு­தி­களில் ஆறா­யிரம் பேருக்கு ஒரு பிர­தேச சபை இருக்கும் போது நுவ­ரெலியா மாவட்­டத்தில் மாத்­திரம் இரண்டு இலட்சம் பேருக்கு ஒரு பிர­தேச சபை இருப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இது மலை­யக தமி­ழ­ருக்கு கடந்த  இரு­பத்­தி­யெட்டு வரு­டங்­க­ளாக இழைக்­கப்­பட்­டுள்ள  ஜன­நா­யக மறுப்பு அநீதி. இது எனது அமைச்சு பொறுப்பில் உள்ள தேசிய சக­வாழ்வு விட­யத்­துக்கு முர­ணா­னது. எனவே இந்த  மிக நீண்ட கால அநீதி இப்­போ­தா­வது நிவர்த்தி செய்­யப்­பட வேண்டும் என தேசிய கலந்­து­ரை­யா­டல்கள் அமைச்­சரும், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணி-­ஜ­ன­நா­யக மக்கள் முன்­னணி தலை­வ­ரு­மான மனோ கணேசன்  எம்.பி. உள்­ளூ­ராட்சி தேர்தல் எல்லை சீர்­தி­ருத்த அமைச்­ச­ரவை உப­கு­ழுவில் தெரி­வித்­துள்ளார்.  
 
இது தொடர்பில்  கூறி­ய­தா­வது, இந்த முக்­கி­ய­மான விவ­காரம் தொடர்பில் ஏற்­க­னவே ஒரு கருத்­தொ­ரு­மைப்­பாடு இருக்­கின்­றது. எனவே உள்­ளூ­ராட்சி தேர்தல் எல்லை சீர்­தி­ருத்த அமைச்­ச­ரவை உப­குழு, நுவ­ரெலியா மாவட்ட பாரா­ளு­மன்ற, மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளையும், மாவட்ட செய­லாளர் மற்றும் அதி­கா­ரி­க­ளையும் அழைத்து கலந்­து­ரை­யாடி, புதிய பிர­தேச சபை­களை நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் உரு­வாக்க வேண்டும். இது எதிர்­வரும் மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள அடுத்த உள்­ளூ­ராட்சி தேர்­தல்­க­ளுக்கு முன்னர் நடை­பெற வேண்டும். எனது இந்த கோரிக்­கையை,  உள்­ளூ­ராட்சி மற்றும் மாகா­ண­ச­பைகள் அமைச்சர் பைசர் முஸ்­தபா மற்றும் உள்­ளூ­ராட்சி தேர்தல் எல்லை சீர்­தி­ருத்த அமைச்­ச­ரவை உப­குழு உறுப்­பி­னர்கள் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். இந்­நி­லையில் வெகு விரைவில் நமது அமைச்­ச­ரவை உப­கு­ழுவை சந்­திக்கும் முக­மாக, நுவ­ரெ­லியா மாவட்ட பாரா­ளு­மன்ற, மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள், நுவரெ­லியா மாவட்ட செய­லாளர் மற்றும் அதி­கா­ரிகள் ஆகி­யோ­ருக்கு அழைப்பு அனுப்­பு­வ­தற்கு முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.
இந்த  மிக நீண்ட கால அநீதி நிவர்த்­திக்­கப்­பட வேண்டும் என்­பது தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் நிலைப்­பா­டாகும். இது தொடர்­பான முடிவு கூட்­ட­ணியின் கடந்த செயற்­குழு கூட்­டத்தில் எடுக்­கப்­பட்­டது. எனவே எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அடுத்த உள்ளூராட்சி தேர்தல்களுக்கு முன்னர் செய்து முடிக்கப்பட வேண்டிய இந்த நடவடிக்கைக்கு சம்பந்தப்பட்ட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் .

காலா­வ­தி­யான திரி­போஷா

கினி­கத்­தேனை வைத்­தி­ய­சா­லையில் கர்ப்­பிணித் தாய்­மா­ருக்கும் பாலூட்டும் தாய்­மா­ருக்கும் காலா­வ­தி­யான திரி­போஷா சத்­து­ணவுப் பொதிகள் வழங்­கப்­ப­டு­வ­தாக மத்­திய மாகாண சபை உறுப்­பினர் கண­பதி கன­கராஜ் குற்றம் சாட்­டினார்.
மாகாண சபை அமர்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு குற்றம் சாட்­டினார்.
இங்கு அவர் மேலும் கூறு­கையில், கினி­கத்­தேனை பகு­திக்கு சென்­றி­ருந்த போது அங்கு சில கர்ப்­பிணித் தாய்­மாரும் பாலூட்டும் தாய்­மாரும் தமக்கு வைத்­தி­ய­சா­லையில் வழங்­கப்­பட்ட திரி­போஷா சத்­து­ணவுப் பொதி­க­ளுடன் என்னை சந்­தித்து கினி­கத்­தேனை வைத்­தி­ய­சா­லையில் காலா­வ­தி­யான திரி­போச சத்­து­ணவு வழங்­கப்­ப­டு­வ­தாக தெரிவித்­தனர்.
அத்­துடன் என்­னிடம் சில காலா­வ­தி­யான பொதி­க­ளையும் வழங்கி சரி­யான தீர்வை பெற்­றுக்­கொ­டுக்­கு­மாறும் கோரினர். அவர்கள் என்­னிடம் கொடுத்த காலா­வ­தி­யான திரி­போஷா பொதி­களை இந்த சபையின் கவ­னத்­திற்கு கொண்டு வரு­வ­தோடு இவற்றை சுகா­தார அமைச்­ச­ரிடம் ஒப்­ப­டைக்­கிறேன்.
மத்­திய மாகாண சுகா­தாரத் துறையில் இது­போன்ற பல குறை­பா­டுகள் காணப்­ப­டு­வதை கடந்த காலங்­க­ளிலும் நான் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறேன். அர­சாங்க வைத்­தி­ய­சா­லை­களில் காலா­வ­தி­யான, மக்­களின் சுகா­தா­ரத்­திற்கு பங்கம் ஏற்­ப­டுத்­து­கின்­ற­வற்றை வழங்­கு­கின்­ற­போது அதனால் மக்­க­ளுக்கு ஏற்­ப­டு­கின்ற பாத­க­மான விளை­வு­களை சுகா­தார அமைச்சு கவ­னத்தில் கொள்­ள­வேண்டும். இவ்­வா­றான நிலை தொட­ரு­மானால் சுகா­தார துறையில் மக்கள் நம்­பிக்கை இழந்­து­வி­டு­வது மட்­டு­மல்­லாமல், அவர்கள் மன­ரீ­தி­யிலும் உடல் ரீதி­யிலும் பாதிப்­ப­டைவர்.
கினி­கத்­தேனை வைத்­தி­ய­சா­லையில் வழங்­கப்­பட்ட காலா­வ­தி­யான திரி­போஷா பொதி­களை மீள­ப்பெற்று உரி­ய­வர்­க­ளுக்கு நிவா­ர­ணத்தை வழங்க வேண்டும். கினி­கத்­தேனை வைத்­தி­ய­சாலை உட்­பட மத்­திய மாகா­ணத்தில் உள்ள ஏனைய வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் காலா­வ­தி­யான திரி­போஷா பொதிகள் களஞ்­சியப் படுத்­தப்­பட்­டி­ருந்தால் அவற்றை அகற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வேண்­டு­கிறேன்.
இவ்­வி­டயம் தொடர்பில் மத்­திய மாகாண சகா­தார அமைச்­சர் கூறுகையில் இவ்விடயம் தொடர்பில் பூரண விசாரணைக்கு தான் உத்தரவிடுவதாகவும் அடுத்த மாகாண சபை அமர்வில் விசாரணை அறிக்கையை சபைக்கு சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார்.